Pages

July 20, 2005

செம லாஸு!!!!

சிறு வயதில், கணக்கு பரீட்சைபோதெல்லாம், அப்பா எனக்கு கணக்கு சொல்லித் தருவார். சொல்லிக் கொடுக்கறேன் பேர்வழின்னு கஷ்டமான கணக்கெல்லாம் கொடுத்து நொங்கெடுப்பார் என்று தான் சொல்லணும். எந்த ஒரு கணக்குக்குமே முழுமையான ஒரு பதில் வராத மாதிரி தான் கொடுப்பார். எதுக்குமே, பின்ன (decimal) வகையில் பதில் வரும். என் தங்கை கொஞ்சம் அப்பா செல்லம். அப்பா கூப்பிட்டால் கூட வர மாட்டாள். ஓடி விடுவாள். நான் தான் பலி ஆடாக அகப்படுவதுண்டு. என் கூட படிப்பதற்காக எனது சக வகுப்பாளினியும் வருவாள். (ரொம்ப குழம்ப வேண்டாம், classmateஐ தான் அப்படி சொன்னேன். தமிழ் குடிமகன் ஆத்மா சாந்தி அடிந்திருக்கும். இனிமேல் இவளை ச.வ. என்றே விளிப்போம்.) என் வயித்தெறிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாமா??

இதில் வேதனை என்னவென்றால், என்னைவிட நன்றாகவே கணக்கு செய்வாள். பொண் குழந்தை நன்னா கணக்கு போடறா, உனக்கென்னட குறைச்சல்னு அப்பப்போ ரெண்டு குட்டு வேறு விழும்.
ஒரு கணக்கு பரீட்சை அன்றைய தினம் லாப நஷ்ட கணக்கு கொடுத்தார். ஒரு முட்டை வியாபாரி சில பல டஜன் முட்டை வாங்கி வருகிறான். அதில் சில முட்டைகள் அழுகியும் உடைந்தும் விட்டன. மீதியை ஒரு குறிப்பிட்ட ரூபாய்க்கு விறகிறான். விற்பனையில் அவனுக்கு லாபமா நஷ்டமா என்பது தான் கணக்கு.
இது என்ன பிரமாதமான கணக்கு என்று எண்ணுபவர்கள், இக்கணக்கில் கொடுக்கப்பட்ட எண்களைப் பார்க்க வேண்டும். 97 டஜன் முட்டை 83 அழுகி விட்டது. ஒரு முட்டையின் விலை 1.54 ரூபாய். இப்படியாகத்தான் எல்லாமே இருக்கும். இப்படிப் பட்ட எண்களை கொடுத்தால் கணிப்பொறியே நம்மைத் திட்டும். அப்பாவைத் திட்ட முடியுமா? என் தலையெழுத்தை நொந்து கொண்டு கணக்கு போட ஆரம்பித்தேன். ஒரு 10 நிமிடம் கழித்து என்னிடம் கேட்டார், "என்னடா, இன்னும் போடலியா. நீ போட்டுட்டியாம்மா. என்ன பதில். லாபமா நஷ்டமா" என்றார். அவர் எதிர்பார்த்தது லாபமா நஷ்டமா என்பது தான். எவ்வளவு லாபம் என்று அவரே கூட கணக்கு போட்டு பார்த்தால் பிழை வரக் கூடும். ச.வ. லாபம் என்றாள். லாபமா!!!!ஐயையோ நமக்கு நஷ்டம்னா வந்திருக்கு. என் வயிற்றிற்குள் புளியைக் கறைக்க ஆரம்பித்தது.
"என்னடா உனக்கென்ன வந்திருக்கு" என்று ஒரு அதட்டல் வேறு.
என்ன சொல்வதென்று தெரியாமல் மரியாதையாக முழித்தேன்.
"ஏண்டா, இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் ஒக்காந்திருக்கே. ஏதாவது சொல்லித் தொலையேன்".
"லாபமெல்லாம் இல்லை. செம லாஸு" என்றேன்.
"லாஸா, கொண்டா இப்படி நோட்டை" என்று என்னிடமிருந்து பிடிங்கினார். எதைப் பார்த்தாரோ தெரியாது, என் இடுப்புக்கு மேல் எல்லா பாகமும் வலிக்கத் தொடங்கியது. அவர் விளாசாத இடமே இல்லை. எப்போதுமே அப்பா அடித்தால் அம்மா சமாதானப் படுத்துவாள். அன்று அவளும் கட்சி மாறி விட்டாள்.
ஒரு வழியாக அழுது முடிந்த பின் அப்பா கேட்டார், "எந்த லக்ஷணத்துல குடுத்த கணக்கை எழுதியிருக்கே பாரு. 83 முட்டை அழுகியிருக்குன்னு கொடுத்திருக்கேன். நீ 83 டஜன் அழுகியிருக்குன்னு எழுதியிருக்கே. ம்ம் பரவாயில்லை. நீ எழுதியிருக்கும் கணக்குக்கு வந்த பதில் சரி தான் என்றார்".
"ஏம்பா, இதெல்லாம் அடிக்கறதுக்கு முன்னாலேயே பார்த்திருக்கக் கூடாதா??" இப்படி மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். யாருக்கு அவரிடம் இப்படி பேச தைரியம்.

பல வருடங்களுக்குப்பின், நிறைய பேருக்கு லாப நஷ்ட கணக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன். எப்போதுமே எனக்கு அப்பாவிடம் சொன்ன "செம லாஸு" தான் ஞாபகம் வரும்.

பி.கு. அன்றைய தின கணக்கு பரீட்சையில் நான் வாங்கிய மார்க் 100/100. அது தான் என் வாழ்க்கையில் கடைசியாக நூறு மார்க் வாங்கியது என்பது ஒரு பெரிய சோகக் கதை ;-))

4 comments:

Subbu said...

Good posting vijay. Even i remember the multiplication tables which we used to memorize during younger days. Even i used to get lot of assignments from my Appa but i was well shielded by my Amma.
Ippo ellam yaaru kanakku podaranga.. ellam calculator/computer/excel nu high tech ayittom.

Adaengappa !! said...

Good post !! am ROTFL !!

Naan amma kitta maths padikum podhu,oru trouser,adhukku mela pant,adhukku mela veshti kattitu
thaan utkaaruven..illena thodai kanni poidum..

Enakum maths-kum 7m porutham..

good heavens..i didnt opt for engg field !!

Anonymous said...

From Raman CHittappa:
Vettivambu dhool. Aduvum ande 18am peruku, Kannakku Paritsai.

Naanum ippadithaan Ambi Tambi-jai paduthuven. Orumurai Tambi, " Appa powerstaion-nna ennepaa ? " Enru kettan. tholaindan 3 mannineram villakkam. Ippavum chollikkattuvan.

Oru vittukku evvallavu power vendum, oru theruvukku evvalllavu, ippadi Budapest-ukku evvallavu power vendum endrellam calculate panni, pinnal oru light on-ahi irukkumbodu engeyo 1 secondukku 1 sugar-cube size-le carbon-ai erikirarkall endrellam villakkam.

Idu eppadi irrukku. :) Raman.

Ramya Ramani said...

Hmm matha exam nyabaga padutiteengala?? Maths namakku konjam fav sub so oralavukku thappichiduven..but Tamil kaga naan vangina adi irukke..perumale..amma vera teacherah tuition pasangaloda okkathi vechu sollikoduppa..tappu panninom, avala vida enakku dhan adi jasthi :(