Pages

July 08, 2005

வழக்கு போடறதுக்கு ஒரு வெவஸ்தையே இல்லையாடா??

இந்திரா காந்தி பத்தி நிக்ஸனும் கிஸ்ஸிங்கரும் 30 வருஷத்துக்கு முன்னாடி பேசிக்கிட்டத அமெரிக்க இப்போ வெளியிட்டிருக்கு. அதுல இவனுங்க ரெண்டு பேரும் இந்திரா காந்திய காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி இருக்கானுங்க. யம்மா தாயே, பாகிஸ்தான் மேல போர் தொடுக்காதன்னு அண்ணாச்சி மன்னாடி கேட்டுக்கிட்டாராம். நம்ம அம்மணி போடா வெண்ண, ஒனக்கும் பெப்பே, ஒங்கப்பனுக்கும் பெப்பேனு, ரஷ்யா துணைக்கு இருக்குதுன்ற தைரியத்துல பாகிஸ்தான் மேல போர் எவுச்சு. இதுக்கப்பறம் நடந்தது தான் இந்த காய்ச்சும் படலம். என்னத்த பேசிக்கிட்டானுங்களோ ஒரு எளவும் தெரியாது. ஆனா, நல்ல கெட்ட வார்த்தைல வைஞ்சிருக்கானுங்கன்னு அரசல் புரசலா பேசிக்கிடறானுங்க.

ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவுல அந்த நாட்டுல கமுக்கமா வச்சிட்டிருந்த ஆவணங்கள பொது மக்கள் பார்வைக்கு வப்பானுங்க (ரொம்ப முக்கியம். You can't find more Idiots in the world, than what you can find in the US of A என்பது என்னுடைய தாழ்மையான கருத்து) இதுல ஏதோ ஒரு புண்ணியவான், இந்திராவ பத்தி இந்த ரெண்டு பெரிய மனுஷங்களும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு எப்படியோ தோண்டி எடுத்திருக்கான்.

சரி பேசிக்கிட்டது தான் பேசிக்கிட்டாங்க. ரெக்கார்ட் டேப்பையெல்லாம் அணைச்சிட்டு பேசியிருக்கலாம்ல. சரி, அதுவும் நடந்த்து கிட்டத்தட்ட 30 வருஷமாச்சு. இது நம்மூர் காங்கரெஸ் காரனுங்களுக்கு பொறுக்கல. இவனுங்க தான் நேரு குடும்பத்துக்கு எப்பவும் விசுவாசியா இருப்போம்னு சிலாசாசனம் எளுதி கொடுத்திருக்கானுவளே. அவன் அவன் அறிக்கை வுடறான். அமெரிக்கா பகிரங்கமா மன்னிப்பு கேக்கணூமாம்.

இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஒரு அதீத இந்திரா விசுவாசி, இந்தூர் கோர்ட்ல அமெரிக்கா மேல 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு போட்டிருக்கான். இந்த பணத்த குஜராத் வெள்ள நிவாரண நிதிக்கு பயன் படுத்திக்கிடணுமாம். எப்படி போகுது கதை???

சரி இந்தாளு ஏதோ கோட்டி புடிச்சு வழக்கு போட்டிருக்கான்னா, அதையும் இந்தூர் கோர்ட் ஏத்துக்கிட்டு ஜூலை 11 இந்த விசாரிக்கப் போறாங்களாம். அப்படியே, இந்த வழக்குல இந்தாளுக்கு சாதகமா, தீர்ப்பு வந்திருச்சின்னா, யாருல ரூபாய் கொடுப்பா? நிக்ஸனும் கிஸ்ஸிங்கரும் என்ன நம்மூர் அரசியல்வாதியா? கீழ் கோர்ட் தண்டன கொடுத்திச்சின்னா மேல் கோர்ட்ல அப்பீல் பண்ண??? இதுல என்ன வேடிக்கைன்னா, நிக்ஸன் மண்டயப்போட்டு, அவன பொதச்ச எடத்துல புல்லு முளச்சாச்சு. கிஸ்ஸிங்கரும் போற வழிக்கு புண்ணியம் தேடிக்கிட்டிருக்காரு. இந்த லக்ஷணத்துல 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரணுமாம். அதை அப்படியே வெள்ள நிவாரண நிதியா பயன் படுத்திக்கிடணுமாம்.

எதெதுக்கு வழக்கு போடணும்னு ஒரு வெவஸ்த இல்லையால? ஏற்கெனவே நம்மூர் கோர்டெல்லாம் சூப்பர் ஸ்பீடா இயங்கிட்டு கடக்கு. இதுல இந்த கோட்டிக்காரப் பயலுங்க வேற இந்த மாதிரி வழக்கு போடறாங்க. கலி காலமடா இது.


இது ஒரு மட்டரு, இத்த பத்தி இவ்வளவு எளுதியிருக்கியேல. ஒனக்கு கூட தான் வெவஸ்தையே இல்லங்கியேளா??? :-)

No comments: