Pages

February 21, 2005

மாமிகளும் உறவுகளும்

வெகு நாட்கள் கழித்து கடந்த வார விடுமுறைக்காக சென்னைக்குச் சென்றிர்ருந்தேன். முக்கிய காரணம், என் தங்கை, கோவைலியிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்துள்ளாள். அவளுக்கு குடித்தனம் வைப்பதற்காக, நானும் என் மனைவியும் சென்னைக்குச் சென்றோம். அப்படியே, எனது நண்பி கால்யாணத்திற்கும் போய் வரலாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். சென்னையில் இந்த தடவை, அவ்வளவாக வெயில் தெரியவில்லை. (பெங்களூரில் வெயில் கூடிவிட்டதாலோ என்னவோ???!!!) குடித்தனம் வைக்கும் படலம் எல்லாம் இனிதே அரங்கேரியது.

ஞாயிறு மாலை, நண்பியின் வரவேவிற்புக்காக சென்றோம். சென்றதும், நேரே மணமேடைக்குச்சென்று, வாழ்த்து மடலையும், பரிசையும், அவர்கள் கையில் கொடுத்து விட்டு, courtesy வாழ்த்தான wish you both a very happy married life எல்லாம் சொல்லி, புகைப்படக்காரர்களுக்கு பல்லைக்காட்டி விட்டு, நேரே உணவருந்தும் கூடத்துக்குச் சென்றோம். மணமகளை மட்டுமே தெரிந்திருந்ததனால், யாரோடும் பேச வேண்டிய நிர்பந்தம் இல்லை.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு மாமி என் மனைவியிடம் வந்தாள். "ஏய் செளக்கியாமா??? எப்போ வந்தே??? எப்படி இருக்கே?? ஆத்துக்காரர் எப்படி இருக்கார்?" என்று மடமடவென விசாரிப்புகள் அரங்கேரின. "சாப்பிட்டுவிட்டு வா. வெளியே wait பண்ணறேன்" என்று போய் விட்டாள். நாங்கள் கை கழுவி வந்ததும் எங்களுக்காகவே காத்திருந்தது போல், என் மனைவியிடம் குசலம் விசாரித்தாள். இவள் மட்டும் தான் என்று பார்த்தால், ஒரு பெரிய பட்டாளமே, என் மனைவியை சூழ்ந்து நிற்கிறது. என்னையும் எல்லொரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்கள். எனக்கு ஒரே tension. (உனக்கு என்னிக்கு தான் டென்ஷன் இல்லை???) ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இவர்களது அறிமுகாப்படலம் இன்னும் முடிந்த பாடில்லை. பிறகு, என் மனைவி கையில் ஒரு பக்ஷண கவர் தாம்பூலப்பை, எல்லாம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே வந்ததும், யாரந்த மாமி என்றேன். என் மனைவி சொன்னாள், "முதலில் எனக்கே தெரியவில்லை". பிறகு அந்த மாமியே தன்னை அறிமுகம் செய்து கொண்டாளாம். "என் பாட்டியின் அக்காவின் மாட்டுப்பொண் என்றாள். நான் ஒரு பெரிய கொட்டாவியே விட்டு விட்டேன். அந்த மாமியின் அண்ணா பையன் தான், என் நண்பி மணந்து கொள்ளும் மணமகன். ஆக, பெண் வீட்டுக்காரனாகாப்போய், மாப்பிள்ளை வீட்டுக்காரனய் திரும்பி வந்தேன்.

சரி தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் குழம்பிப்போய் நிற்பது என் கண்ணுக்கு புலப்படுகிறது. எந்த கல்யாணத்திற்குப் போனாலும், இம்மாதிரி ஓரிரண்டு மாமிகள் உண்டு. எங்க அக்காவோட நாத்தனாரோட, மச்சினரோட மாட்டுப்பொண்ணோட.... என்று சொல்லிக்கொண்டு உறவுகளை ஒரு full cycle கொண்டு போகும் மாமிகள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். எப்படியாவது ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.
வாழ்க இம்மாதிரியான மாமிகள். வளர்க நம் உறவெனும் வ்ருட்சம்.

February 18, 2005

'காதல்' திரைப்படம் - ஒரு கண்ணோட்டம்

படம் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டதே, என்ன படம் பார்க்க போகலாம் என்று ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்தேன். அதுவும் கல்யாணமாகி, பொண்டாட்டியைக்கூட்டிக்கொண்டு ஒரு படம் கூட இன்னும் போகவில்லையே, நாளைக்கு சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல்ல விஜய் சாரதி கேக்கும் போது சொல்லறதுக்காகவாது, ஒரு படம் போயே ஆஅக வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, என் மனைவி காதல் படம் போகலாம் என்று ஐடியா கொடுத்தாள். சரி, இந்த படத்துக்கே போகலாம் என்றும் முடிவும் ஆகிவிட்டது. பெங்களூரிலே எல்லாம் காஸ்ட்லி. சினிமா டிக்கட் உட்பட. 100 ரூபாய் கொடுத்து இரண்டு டிக்கட்டும் வாங்கியாச்சு. போனவுடன் படமும் ஆரம்பமாகிவிட்டது.

எடுத்தவுடன், ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போவதுடன் படம் ஆரம்பிக்கிறது. (வேற யாருடா ஓடிப்பாவா? அசடு!!!!) பிறகு எப்படி தங்கள் இருவருக்குள் காதல் மலர்ந்தது என்பதை, நாயகனும் நாயகியும் (அதாங்க ஹீரோவும் ஹீரோயினும்!!!! இப்படி சொல்லலைன்னா திருமாவளவன் கோவிச்சுப்பார்;-(( ) தனித்தனியே யோசித்துப்பாக்கறாங்க. (என்னடா, திடீர்னு கொச்ச தமிழுக்கு மாறிட்டே???) இது தான் படத்தோட ஸ்வாரஸ்யமான பகுதி. முதல் பாகம் முழுவதும் மதுரைல நடக்குது. ரொம்ப யதார்த்தமா, காட்டியிருக்காரு. எல்லாத்திலயும் மதுரை மண்வாசனை. பேச்சு முதல் ஏச்சு வரை, எல்லாமே மதுரைமயம் தான். அதிலயும், அந்த workshop குட்டிப்பையன் பேசும் தமிழ் மிக மிக யதார்த்தம். (ஆமாமாம், மத்தவங்க பேசறது என்ன பதார்த்தமா??? சே யதார்த்தம் பதார்த்தம், எதுகையும் மோனையும் கலக்கலா இர்ருக்குல்ல???) நாயகிக்கு இரண்டாம் சந்திப்பில் காதல் மலர்கிறது. நாயகன் ஒரு நாள் அவளிடம் எரிஞ்சு விழுவதாலேயே அவளுக்கு அவன் மேல் காதல் வளர்கிறதாம். (எங்கப்பா இப்படி எல்லாம் பொண்ணுங்க இருக்காங்கன்னெல்லாம் கேக்ககூடாது!!!) அவனை அழுக்கா என அழைக்கிறாள். (நான் கூடத்தான், அழுக்கா இருக்கேன். ஆனால், என் மனைவிக்கு கோபம் தான் வருகிறது.) அவள் பூப்படைந்தவுடன் வெட்கமும் நாணமும் கூட தொற்றிக்கொள்கிறது. புதுமுக நாயகி சந்தியா, நன்னாவே பண்ணியிருக்கா!!!! சந்தியாவைப்பார்க்க கண்கள் கோடி வேண்டும். (டாய் டாய், உனக்கு கல்யாணம் ஆயாச்சுடா).

இப்போ நாயகனுக்கு வறேன். நாயகன், நமக்கு பாய்ஸ் மூலம் அறிமுகம் ஆகிய பரத். நல்லாவே பண்ணியிருக்கார். (அதென்ன பண்ணியிருகார்ர்ர்ர்ர்ர்ர்???) இவர் நல்லா டான்ஸ் ஆடுவார் என்பதற்காக ஒரு டான்ஸும் உண்டு. மதுரை ஊரிலே எந்த மெக்கானிக், இவ்வளவு ஸ்மார்டா இருக்கான்னு தெரியலை. அவ்வளவு அழகு. (அதுக்காக விட்டா, உன்னை ஹீரோவாப்போட முடியுமா??) முதல் பாகத்தில், நாயகன் நாயகியை நோக்க, நாயகி நாயகனை நோக்க (அதாங்க sight அடிச்சுக்கறாங்க), இப்படியே படம் நகர்கிறது. நாயகி வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை நிச்சயம் செய்யறாங்க. கல்யாணத்திலிருந்து தப்பிக்க இருவரும் சென்னைக்கு ஓடிப்போகிறார்கள்.
இனிமேல் தான் தலைவலி ஆரம்பம். என்ன தான் யதார்த்தமா இருந்தாலும் ஒரு bachelor hostel என்றால் இப்படித்தான் இருக்கும் என்றா காட்டவேண்டும். ஒவ்வொரு குட்டி கதாபாத்திரத்துக்கும் (character'ன்னு சொல்லேண்டா வெண்ணை!!!!) ஒரு flash back. நாயகனின் நண்பனாக வரும் ஸ்டீபன் அப்படியே வடிவேலுவின் தம்பி போல் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி முடிக்கிறான். அப்பாலே, எல்லா ஹாஸ்டல் பசங்களும் காசு போட்டு இவங்களுக்கு குட்டித்தனமும் வைக்கிறாங்க்ய (ச்ச. நமக்கும் இந்த மதுரை பாஷை தொத்திக்கிச்சே!!!!). அதுக்குள்ளே, நாயகியின் சித்தப்பா அக்கம் பக்கத்தில் விசாரித்து சென்னை வந்து விடுகிறார். இவரைப்பார்த்தாலே, பயமா இர்ருக்குப்பா. அநியாயத்துக்கு சாதுவா இருக்கார். ஆனால், க்ளைமாக்ஸில் தான் இவரின் விஸ்வரூபம் தெரிகிறது.
நாயகி கதறி அழுகிறாள். இருவரையும் அழைத்துக்கொண்டு, ஊர் திரும்புகிறார். இனிமேல் படத்தில் அடுத்த 15 நிமிடங்களுக்கு ஒரே அழுகை தான். நாயகனை அடித்து துவைத்தெடுக்கிறார்கள். (பின்ன என்ன ஆரத்தியா எடுப்பாக???) நாயகன் உயிருடன் இருந்தாலே போதும் என்பதற்காக, அவன் கட்டிய தாலியை அறுத்து எறிகிறாள். அப்பாடா, படம் முடிஞ்சது, போகலாம் என்று நினைத்தால், அங்கு தான் திருப்பமே!!!! சில ஆண்டுகள் கழித்து என்று எழுத்து போட்டு, நாயகியை ஒரு பைக்கின் பில்லியன் சீட்டில் ஒரு குழந்தையுடன் காட்டறாங்க. (டேய், ஒழுங்கா உனக்கு எழுதத்தெரியலைன்னா விட்டுத்தொலையேன். ஏன் இப்படி, எங்க காழுத்தை அருக்கறே???) முன்னாடி ஒக்காந்திருப்பது அவளது கணவன். மடியில் அவர்களது கைக்குழந்தை. ஒரு தாடிக்காரனைப்பார்க்கிறாள். அவன் நெஞ்சில் தன் பெயர் பச்சை குத்தி இருப்பதைப்பார்த்து, அது தன் முன்னாள் காதலன் என்பதை அறிகிறாள். அப்படியே மயங்கி விழுகிறாள். நள்ளிரவில் அவனைத்தேடிவந்து அவன் முன் கண்ணீர் விட்டு அழுகிறாள். அவள் கணவன் அவளை ஒரு கரத்திலும், அவனை இன்னொரு கரத்திலும் அணைத்துக்கொண்டு நடந்து செல்கிறான். பிறகு ஒரு captioon போடுகிறார்கள். அவனை, ஒரு மன நல காப்பகத்தில் வைத்திரிந்து அவனுக்கு சிகிச்சை அளிக்கிறானாம். இப்படிப்பட்ட ஒரு மனிதனை, இப்படத்தின் இயக்குனர், ஒரு ரயில் பயணத்தில் சந்திக்க நேர்ந்ததாம். அந்த மனிதன் தான் இப்படம் எடுக்க அவருக்கு ஒரு inspiration'ஆம்.

சரி, இப்போ இன்னா சொல்ல வரைன்னு நீங்க கேக்கலாம். கேக்காட்டியும் கேட்டுதான் ஆகணும்.
படத்தை பார்க்கும் போது, அடடா, இன்னுமொரு பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதலையும், அதன் தீவிரம் தெரியாது, குடும்பத்தை நிற்கதியாகிவிட்டு ஓடிப்போகும் காதலர்களின் செயல்களை 'சரி' என்றே முரசு கொட்டும் இன்னொரு படமா, என்று வருந்தினேன்.

அடேய் மூடர்களே, படங்கள் காட்டும் காதல்கள் எல்லாம் நடைமுறையில் எவ்வளவு முட்டாள்தனம். இதனால், எத்தனை பேருக்கு துக்கம் உண்டாகிறது. தன் வாழ்க்கையே, எப்படி அகிறது பார், என்று மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் உள்ளது. பள்ளிப்பருத்தில் காதல் வயப்பட்டிருக்கும் ஆண்கள் பெண்கள், இப்படத்தைப்பார்த்தாவது திருந்துவார்கள் என் நம்புவோம்.

பி.கு.
படத்த்தில் இப்படி ஒரு பாடல் வருகிறது. Excellent music and cinematography. நிஜமாகவே என் உள்ளத்தில் உதிரம் உதிர்ந்தது.

உனக்கென உயிருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, அழுவதேன்.
வழித்துணை நானிருக்க???
கண்ணீர் துளிகளை, கண்கள்
தாங்கும் கண்மணி, காதலை
நெஞ்சம் தான் தாங்கிடுமா??
கல்லறை மீது தான்
பூத்த பூக்கள் என்று தான்
வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா??
மின்சாரக்கம்பிகள் மீது,
மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளைத்தாண்டும்.
வளையாத நதிகள் இல்லை.
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி,
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்.

தந்தையையும் தாயையும் தாண்டி
வந்தாய் தோழியே, இரண்டுமாய்
என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள்
அனைத்தையும் நானெதிர்ப்பேன்.
வெண்ணீரில் நீ குளிக்க,
விரகாகி தீக்குளிப்பேன்
உதிரத்தில் உன்னைக்கலப்பேன்.
விழிமூடும் போதும் முன்னே,
விலகாமல் நானிருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்
நானென்றால் நானே இல்லை,
நீ தானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்.