Pages

August 03, 2005

சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா!!!!

எத்தனையோ பாடல்களை கேட்டிருக்கோம், ரசித்திருக்கோம் ஆனால் எத்தனை பாடல்களை அனுபவித்திருக்கோம்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போல வருமா!!!!
அட எ ந் நாடு என்றாலும் அது நம் நாட்ட போல வருமா!!
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?

இந்த பாடலை ராம ராஜன் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல். இந்த படத்தை பார்த்த காலத்தில் (டேய், ராம ராஜன் படமெல்லாம் பாப்பியாடான்னெல்லாம் கேக்கப்படாது) எவனாவது சிங்கப்பூர்ல போயி இப்படி பாடுவானான்னு" கேலி செய்ததுண்டு. ஆனால், நிஜமாகவே என் வாழ்க்கையில் இப்பாடல் வரிகளை என் வாழ்வில் அனுபவித்த கணங்களும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் முதன் முறையாக அயல் நாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அமெரிக்கா. மேலாளர் சொன்ன நாள்லேர்ந்து, அமெரிக்கா பற்றிய கனவு தான். நான் மட்டுமல்லாது, என்னுடன் என் உற்ற நண்பர்களும் வருகிறார்கள் என்றதும் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆனது.
அமெரிக்கா செல்லும் அந்த நாளும் வந்தது. ஒரு வழியாக எல்லோரும் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். எல்லோரும் ஒரே விமானத்தில் வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. விமானப்பணிப் பெண்களுடன் ஜல்சா செய்து கொண்டே போகலாம் என்ற எண்ணம் மட்டும் நிறைவேற வில்லை.
ஒரு வழியாக எல்லோரும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். ஆளாளுக்கு ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம்.
மறு நாள் அமெரிக்காவில் இருக்கும் நாட்கள் நீட்டிக்கப்பட்டன. 4 வாரங்கள் ஆறாக மாறின. எல்லோருக்கும் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. (எத்தன நாட்களுக்குத்தான் இதே உவமையை குடுப்பிங்கடா. கொஞ்சம் மாற்றக்கூடாதா??)
ஒரு வாரம் ஒரு வழியாக ஓடிக் கழிந்தது. பிறகு கஷ்டங்கள் ஆரம்பித்தன.

பெங்களுரில் ஹோட்டலிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு பழகிய எங்களுக்கு இரவு வந்து சமைத்துச் சாப்பிட வேண்டிய அவசியம். எல்லோரும் சைவம். அதுவும் அக்கம் பக்கத்தில் கடைகளே கிடையாது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அதில் நாம் சாப்பிடும் பொருள் எதுவுமே கிடைக்காது. ஒரு வாரத்துக்கு வேண்டிய பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எதுவுமே குறைந்தது 2 கிலோ கணக்கில் தான் கிடைக்கும். உப்பு முதல் காரப்பொடி வரை எல்லாமே கிலோ கணக்கில் தான் ;-)) மளிகைச் சாமான்களுக்கு யார் பணம் தர வேண்டும் என்று ஒரு சண்டையே நடக்கும். மளிகைக் கடையிலிருந்து விடுதிக்கு வருவதற்கு போக்கு வரத்து வசதி கிடையாது. அரை மணிக்கு ஒரு பேருந்து வந்தால் ஆச்சர்யம். அதையெல்லாம் மா-பேரூந்து என்று தான் அழிக்க வேண்டும். எப்போதுமே சக ஊழியனின் போக்குவரக்தை நம்பியிருக்க வேண்டும்.
அலுவலகத்தில் யாராவது நீண்ட நேரம் இருக்க வேண்டியதாக இருந்தால், இன்னொருத்தன் அவனுக்கு துணை இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தனியாக வருவது அவ்வளவு நல்லதல்ல என்று மேலாளர் கூறியிருந்தார். எங்கு செல்ல வேண்டுமானாலும் டக்ஸிதான். வேறு வழியே கிடையாது. ஷாப்பிங் மால் அப்படி இப்படி ஏதாவது ஒரு ஃபிகர் கண்ணில் பட்டால் கூட அது நம்மூர் பொண்ணாகத்தான் இருக்கும். முக்கால்வாசி கல்யாணமான பெண்ணாக இருக்கும். கடைசி வரை அமெரிக்க ஃபிகரைப் பார்க்கவே இல்லை. (யப்பா, இது முற்றிலும் உண்மை). எந்த கடைக்குச் சென்றாலும் சுய உதவி தான். ஒரு பொருள் வேண்டும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும், அதன் விலை என்ன, அதற்கு கியாரண்டீ உண்டா, இப்படியெல்லாம் ஒன்றும் தெரியாது. பிடிக்கவில்லையா, திருப்பிக் கொடுத்து விடலாம். டாலர் திருப்பி தந்து விடுவார்கள். ஒரு முறை எலக்ட்ரானிக்ஸ் அங்காடிக்கு சென்றிருந்தோம். டிஜிடல் கமெரா வாங்க. எந்த மாடலை எடுத்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்று செயல் முறை விளக்கம் கொடுக்க ஒருவர் கூட இல்லை.

இரண்டு முன்று வாரங்களுக்குள்ளாகவே எல்லோருக்கும் எப்போடா ஊருக்கு போகப் போகிறோம், என்ற எண்ணம் வந்து விட்டது. நானும் என் நண்பனும் அடிக்கடி சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா என்ற பாடலை முணுமுணுப்போம். எங்கள் எல்லோராலும் மறக்க முடியாத அனுபவம் எல்லோரும் லாஸ் ஏஞ்சல்ஸ் போனது தான். அது பற்றி இன்னொரு நாள்.

2 comments:

Subbu said...

விஜய்,
Right said. Even now i am singing the same Song,( கங்கை அமரன் நல்லா அனுபவித்து பாடியிருப்பார்).
Telling about shop.. why food..even taking a Tissue paper ( you know how big it is) needs one big Truck ( நம்ம ஊரு style-a சொன்னா லாரி, வேணும்).
Here i am feeeling physically challenged ( athan handicappu) without a car ;(

Expecting your LA trip posting

-Subbu

Anonymous said...

Vijay ,

Nee than flight-le vitta jollu than theriume (By mail). Appuram enna kavalai.