Pages

July 04, 2005

தேவை ஒரு அந்நியன்

போன வாரம் முழுக்க ரேஷன் கார்டு கொடுக்காங்க ரேஷன் கார்டு கொடுக்காங்கன்னு அம்மா டி.வியும் தாத்தா டி.வியும் போட்டி போட்டு கூவிக்கிட்டு கெடந்தாங்க. நானும், நம்ம வூட்டு ரேஷன் கார்டு வாங்கறதுக்காக நம்மூருக்கு போனேன். அவங்க அவங்க வட்டாரத்து ரேஷன் கடைகள்லயே ரேஷன் கார்டு வாங்கிக்கிடலாம்னு தான் சொன்னாங்க. நானும் நேர ரேஷன் கடைக்கு போனேன். அங்கே ஈ காக்கா கூட இல்லை. என்னடான்னு விசாரிச்சா, அரசு பள்ளிகூடத்துல தான் ரேஷன் கார்டு குடுக்கறாங்கன்னுட்டாங்க.
சரின்னுட்டு அரசு பள்ளிகூடத்த தேடி கண்டுபுடிச்சு அங்கிட்டு போனேன். யம்மாடியோவ், ஏதோ தேர்தல் நடக்க மாதிரி அம்புட்டு கூட்டம். இதுல கொடுமை என்னன்னா, கூட்டம் நகளவே மாட்டிக்கி. வெசாரிச்சு பாத்தா, ஒவ்வொருத்தருக்கும் கார்டு கொடுக்கறதுக்கு கொறஞ்சது பத்து நிமிஷம் ஆவுது. ஒரு அறை மணி நேரம் கழிச்சு பக்கத்துல இருக்க ஒரு ஆள் கிட்ட இன்னொரு ஆள் சொல்லுறாரு, போன தடவை கார்டு புதுப்பிக்கயில ஒரு சீட்டு குடுத்தானுவளாம். அத்த கொண்ணாந்தாத்தான் கார்டு தருவானுங்களாம். இல்லைன்னா, வட்ட வழங்கல் அலுவலகம் போவணுமாம். அதென்னய்யா வட்ட வழங்கல் அலுவலகம்'ன்னா, தாலுகா ஆபீஸ்ன்றாங்க ;-)))

இதேதுடா கொடுமன்னு, வூட்டுக்கு வந்து, இருக்க எல்லா அலமாரியும் தேடி பாத்து, ஒரு வழியா அந்த
சீட்ட கண்டு புடிச்சு மறுபடியும் அங்கிட்டு போனேன். இப்பவும் அதே அளவு கூட்டம் இருந்திச்சு. நல்ல வேளை, இந்த தடவை படிக்க பொஸ்தகமும், கேக்க நடை மனிதனும் (அதாங்க walk-man) கொண்டுட்டு போயிருந்தேன். ஒரு 3 மணி நேரம் கால் கடுக்க நின்னிருப்பேன். ஒரு வழியா நானும் ரேஷன் கார்டு குடுக்கும் அதிகாரி பக்கம் வந்தேன். என் காதுலேர்ந்து hear phone 'ஐ கழட்டிட்டு முன்னால நிக்க ஆளு கிட்ட என்ன கேக்கார்ன்னு கவனிச்சேன். அப்போத்தான் தெரிஞ்சது, ஏன் ஒவ்வொருத்தருக்கும் 10 நிமிஷம் ஆகுது. இந்த அதிகாரிங்க கையில ஒரு லிஸ்ட் இருக்குது. அந்த லிஸ்டுல, நம்ம பேரை தேடி பாப்பானுங்க. பேரு இருந்தாத்தான், கார்டு. இல்லைன்னா அப்பீட் ஆயிக்க வேண்டியது தான். அந்த லீஸ்ட, விண்ணப்பம் எண்ண வெச்சோ, ஆளுங்க பேர வச்சோ அடுக்கி வச்சிருக்கலாம்ல. அதுவும் இல்ல. ஒரு 30 பக்கத்துக்கு பேரு இருக்குது. நம்ம பேர கேட்டதும் ஒவ்வொரு பக்கமா தேடி பாப்பாரு. அவரு எந்த லக்ஷணத்துல தேடுறாருங்கறது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஏன்யா, இதுக்கெல்லாம் தான் இப்போ கம்ப்யூட்டர் வந்துட்டுதே, ஒரு சின்ன sort n search ப்ரோகிராம் எழுதி, இந்த வேலையை பார்க்க தெரியாதா? ஒலகத்துக்கே நம்ம பயலுவ சாஃப்ட்வேர் எழுதி தரானுங்க. இந்த பிஸ்கோத்து வேலைக்கா சாஃப்ட்வேர் எழுத தெரியாது. பன்னண்டாம் கிளாஸ் படிக்க பய கூட இத்த எழுதிப்புடுவானே. ஹ்ஹ்ம்ம்ம் யார குத்தம் சொல்ல. சரி நம்ம கதைக்கி வருவோம்.
நான் அந்தாளுகிட்ட போனதும் என் சீட்ட வாங்கிட்டு, மறுபடியும் கூகிள் (தேடல்) செய்ய ஆரம்பிச்சாரு. ஒரு பக்கத்துல எங்கம்மாவின் பேரு இருக்கறத, நான் தான் காட்டினேன் அந்தாளுக்கு. (எத்தன பேரைஅந்தாளு ஒங்க பேரு இல்லன்னு திருப்பி அனுப்பிச்சாரோ???) எங்க வூட்டு முகவரியும் சரியா இருக்கான்னு பாத்துட்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு அடுத்த ஆளோட சீட்ட வாங்கிக்கிட்டாரு. நானும் ஒரு பத்து நிமிஷம் பொறுத்து பாத்தேன். அந்தாளு கிட்ட போயி, "சார் கார்டு என்னாச்சுன்னு கேட்டேன்". அதுக்கு அந்தாளு கொஞ்சம் கூட சலனமே இல்லாம, "ஒங்க வூட்டு கார்டு இங்குட்டு இல்ல. போய்ட்டு அடுத்த வாரம் வா"ங்கறான். (இந்த மாதிரி ஆளுங்கக்கெல்லா மருவாத ஒண்ணு தான் கொறச்சல் !!!!!)
"சார், இப்போ தானே, எங்க வூட்டு விலாசம் எல்லாம் இந்த லிஸ்டுல இருந்துச்சு. நீங்க கூட ஒரு ரெஃபரென்ஸ் நம்பர் குடுத்தீயளே"ன்னு கேட்டேன்.

"சார், லிஸ்டுல பேரு இருக்கு. ஆனா, கார்டு இல்ல. என்ன செய்ய. பேரு இருக்க எல்லாருக்கும் கார்டு இருக்குன்னு சொல்ல முடியாது. சில பேருக்கு இருக்கும், சில பேருக்கு இருக்காது.
நிறய பேரு லீஸ்டுலயே இல்ல. அதுக்கு என்ன பண்ணறது. ஏதுன்னா கேக்கணும்னா தாலுகா ஆபீஸ்ல போயி கேளுங்க. எங்களுக்கு ஒண்ணும் தெரியாது"ன்னான். ஏற்கனவே மணி நாலே முக்கால். அதுவும் சனிக்கெளம. தாலுகா ஆபீஸ்ல ஒரு பயலும் இருக்க மாட்டானுங்க. இதுல யாரு கிட்ட போயி கேக்கறது.

அந்தாளு கிட்ட மறுபடியும் போயி, " சார், இந்த ரேஷன் கார்டு வாங்கறதுக்காக நான் பெங்களுர்லேந்து வந்திருக்கேன். அடுத்த வாரமும் என்னால மறுபடியும் வரது கஷ்டம். இப்போ என்ன பண்ணறதுன்னு கேட்டேன்."

"இந்த மாசம் முழுக்க கார்டு கொடுப்போம். நீங்க கடைசி வாரம் கூட வந்து வாங்கிக்கலாம்."

"கடைசி வாரமும் எங்க கார்டு இல்லன்னா என்ன பண்ணறது"

"ஒன்ணும் பண்ண முடியாது. தாலுகா ஆபீஸுக்கு போயி அங்கே விசாரிக்கணும். எங்களால ஒன்ணும் பண்ண முடியாது"

இது எனக்கு மட்டும் நடந்தது இல்ல. கார்டு வாங்கறதுக்காக வந்த முக்காவாசி பேருக்கு இந்த கதி தான். இது திருநெல்வேலியில் மட்டுமில்ல. கிட்டத்தட்ட எல்லா ஊரிலயும் இது தான் நடந்திருக்கு.

எவனுக்குமே ஒரு பொறுப்புணற்சின்றது இல்ல. இதுல கொடுமை என்னன்னா, இத மேற்பார்வை பார்க்குர கலெக்டர், ஏதோ ஆளுங்கட்சி தீத்தாலாண்டி வரான்னுட்டு, அவன வரவேற்க போயிட்டாரு. எம்.எல்.ஏ வோ எம்.பி யோ, வட்டாட்சியாளரோ, ஒரு பய கூட கையில கெடக்கலை. நாடு இந்த மாதிரி இருந்தா, எந்த நூற்றாண்டுல உருப்படறது??

இந்த மாதிரி, பொது மக்கள மூணு நாலு மணி நேரம் வேகாத வெயில்ல காக்க வெச்சு, கடைசில கார்டு இல்ல, அடுத்த வாரம் வான்னு சொன்னா, இந்த மாதிரி அதிகாரிங்கள என்ன செய்யறது. இவனுங்களுக்கெல்லாம் அந்குபதமோ கும்பீபாகமோ குடுக்க வேண்டியது தான். அதனால் நம்ம ஒடனடி தேவ, ஒரு அந்நியன்!!!!

No comments: