Pages

December 24, 2006

ந்யான் ஒரு மலையாளப்படம் கண்டு

கல்யாணம் ஆன பிறகு இது மட்டும் நடந்து விடக்கூடாது என்ற பயம் சில காலம் இருந்து வந்தது. கல்யாணம் ஆகி இறண்டு ஆண்டுகள் ஓடியும், அது நடக்காதலால், சற்று நிம்மதி வந்தது. (பொடி வச்சது போதும், விஷயத்துக்கு வாடா). எனது வலைக்கிறுக்கலகளை முதன் முதலாகப் படிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எனது எல்லா பதிவிலும், என்னை வாரும் ஒரு கதாபத்திரமும் உண்டு. அது என் மனசாட்சி தான். என்ன அதற்கு எஸ்.ஜே.சூர்யா மாதிரி நீல நிற உடை அணிவிக்கவ்வில்லை. அதனால் அவன் பேசும் வசனங்களை மட்டும் " "க்கு நடுவில் போட்டு விடுகிறேன்.
"என்னைத்தான் இன்ட்ரொ குடுத்தாச்சுல்ல, விஷயத்துச்சொல்லு". இதுவும் என் ம.சா. தான்.

என் மனைவி கேரளாவிலே மலையாளத்திலேயே பரைந்து வளர்ந்தவள். நானோ மலையாளத்தை கிண்டலடித்தே வளர்ந்தவன். மலபார் போலீஸ் கவுண்ட மணி ரகம். கல்யாணத்திற்குப் பிறகு எனது தலையாளம் ஆகிவிடுமோ என்ற உறுத்தல் இருந்து கொண்டெ இருந்தது. இதை விட பெரிய பயம், வீட்டில் சன் டி.வி.க்கும் சூர்யவுக்கும் சண்டை வருமோ என்றும் நினைத்திருக்கிறேன். இதையெல்லாம் விட, நம்மளை ஒக்காத்தி வச்சு மலையாளப் படம் பார்க்க வச்சுடக்கூடாதேன்னு தான் பெரிய பயம்.
நேற்று அந்த கொடுமை நடந்தேறி விட்டது. என்னை வலுக்கட்டாயமாக மலையாளப் படம் பார்த்தே ஆக வேண்டும் என்று கட்டளை. Domestic Violence'க்கு எதிராக சட்டமெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள். இதெல்லாம் அதில் அடங்காதா??
என் மனைவி எடுத்து வந்த படத்தின் பெயர் Classmates. "சரிதான் கேரளத்தில் இன்னும் கேளிக்கை வரி விலக்குச் சலுகை இன்னும் அமலுக்கு வரவில்லை போலிருக்கு. எலாத்திலுமே பக்கத்து மாநிலத்தவர் சற்று மந்தம் தான் போலிருக்கு. "டேய் ஏற்கனவே முல்லைபெரியாறு விஷயத்துல அவனவன் மீசையையும் தாடியையும் முறுக்கிக்கிட்டு அலையிறானுவ. நீ வேற எரியுர தீயில பெட்ரோல ஊத்தாதடா".
சரி, படத்துல நடித்திருப்பது, "பாரிஜாதம்" ப்ருதிவி ராஜ், காவ்யா மாதவன் மற்றும் சில அறியாத தெரியாத முகங்கள். யாரிந்த காவ்ய மாதவன் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு செய்தி. தென்காசிப்பட்டணம் என்ற டப்பா படத்தில் சரத் குமாருக்கு தங்கையாக வருமே ஒரு அட்டு ஃபிகரு. அதே தான். "தமிழில் டப்பா போணியாகாததெல்லாம், மலையாளத்துக்கு போய்விடும்".
மலையாளப்படம் பார்ப்பவர்களுக்கு சற்றே கூடுதலாக பொறுமை வேண்டும். ஏனென்றால் படம் முதல் கியரிலேயே தான் பயணிக்கும். அவ்வப்போது பின்னாடியும் போகும். "அதாங்க ஃப்ளாஷ் பேக்கு".
படத்தில் நாயகனின் பெயர், சுகுமார். அவனை அழைப்பதை வைத்து பார்த்தோமேயானல், அவனது பெயரை ஆங்கிலத்தில் SUGUMAR என்று தான் எழுத வேண்டும். படத்தின் பட்ஜெட், 1 கோடியாவது எட்டியிருக்குமா என்பது சந்தேகம் தான். "நம்மூர் தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ளவேன்டியது". 60 நிமிடங்கள் ஓடி, 2-3 பாடுக்கள் முடிந்தும் படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை. ஒருவரையொருவர் முறைத்து முறைத்துப் பார்த்துக்கொள்கின்றனர். டேய் ஏதாவது பண்ணுங்களேண்டா என்று கத்த வேண்டும் போலிருந்தது. "சரிடா, என்ன தான் கதை? அதைச் சொல்லவே மாட்ட்டியா". ஏதோ லவ் ஃபெலியர் பற்றிய கதை என்று மட்டும் தெரிந்தது. எல்லோர் மூஞ்சியில் எப்போதும் வழிந்தோடும் ஒரு வ்விதமான சோகம். கதாநாயகன் ஆறு மாதம் வளர்ந்த தாடியுடனேயே இருக்கிறான். எடுத்த எடுப்பிலேயே தற்கொலைக்கு முயற்சிக்கிறான். ஃப்ளாஷ் பேக்கில், சக மாணவியுடன், சகட்டு மேனிக்கு மோதுகிறான். ஒரு சூழ் நிலையில் அவள் அடிபடும் போது அவள் காயங்களுக்கு மருந்தளிக்கிறான். மோதல்ல ஆரம்பித்து காதலில் முடியும் இத்துப்போன பழைய ஃபார்முலா தான். அப்படியே ஒரு டூயட். ஆதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. கண்கள் சொரிகி விட்டன. என் மனிவிக்கு என் மேல் ஒரு வழியாக கருணை வந்து விட்டது போலும். படத்தை நிறுத்தி விட்டாள்.

படத்தின் வசனங்கள் முழுவ்வதும் புரியாவிட்டாலும், சில கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:
- சும்மா சும்மா மாணவர்கள் மறியல் செய்கிறார்கள். கேரளாவில் இது சகஜமாம்.
- மாணவர்கள் சில பேர் வேஷ்டி அணிந்து கல்லூரிக்கு வருகிறார்கள் (இதுவும் சகஜமாம்).
- பின்னணி இசை என்பதே இருக்கவ்வில்லை. இயற்கை சத்தங்கள் தான். மியூசிக் டைரக்டருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பார்கள் போல.
- கேரளாவிலும் சூபர் ஸ்டார் மவுசு ஓங்கியிருக்கிருக்கு. ஆட்டம் போடுவதற்கு தலைவரின், அண்ணாமலை (வந்தேண்டா பால்காரன்) பாட்டு தான்.
- படத்தில் காட்டப்படும் கல்லூரியில் 100 பேருக்கு மேல் படிக்க மாட்டார்கள் போலிருக்கு.

இன்று காலை விழித்ததும் மாலை வந்து மறுபடியும் படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றாள். வடிவேளு குரலில் "மீண்டுமா" என்று கத்த வேண்டும் போலிருந்தது.