Pages

May 31, 2005

குழிக்குள் நெல்லை

ஜெயலலிதா ஆட்சில எது கெடக்குதோ இல்லையோ, அரசாங்கம் மக்களுக்கு நெறைய குடக்கும். நாடு நகரமெல்லாம் நல்லா தான் இருந்திச்சு. எவன் என்னத்த சொன்னானோ, எல்லா ஊருலயும், பாதாள சாக்கடை தோண்டுனானுங்க. மத்த ஊரு மக்களெல்லாம் இந்த தொந்தரவை எப்படியோ சமாளிச்சுப்புட்டானுங்க. அவுக ஊருலல்லாம், ஒரு ரோட்டை தோண்டினா, இன்னொரு ரோட்டுல போனானுங்க. இங்க திருநெல்வேலில, இருக்கறதே, ஒரு ரோடு. அத்தையும் தோண்டிப்போட்டுனாங்க படுபாவிங்க. இதுல கூத்து என்னனா, இவனுங்க தோண்டுறதுக்காக, ஒரு மஷினை வாடகை எடுத்துருக்கானுங்க. அதை சும்மாவே நிறுத்தக்கூடாதாம். எவ்வளவு சீக்கிரம் ஊரு முளுசா தோண்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தோண்டிற்ராங்க. ஊரு முளுக்க ஒரே குழி மயம் தான். அதுலயும், எந்த விதமான தடுப்பும் கெடயாது. உள்ளார விழுந்தா, நேர பரலோகம் தான்.

ஏதாவது ஒரு ஏரியாவுல, வேலையை முழுசா முடிச்சப்பறம், அடுத்த ஏரியவை தோண்டலாம்ல. அந்த அறிவே கெடயாது. ஊருல ஒரு ரோடு கூட உருப்படியா இல்லை. ஒண்ணு தோண்டி போட்டிருப்பானுங்க. இல்லை, தோண்டின ரோட்டை, கல்லும் மண்ணும் போட்டு மூடிருப்பானுங்க.
பெருமாள் புரத்துல ஒரே ஒரு ரோடு மட்டும் புதுசா போட்டிருக்கானுங்க. அதுவும் முழுசா போடலை. நடுவுல ஒரு segment மட்டும் தார் ரோடு போட்டுருக்கானுங்க. அதுவும் ஒரு மழை பெஞ்சா புட்டுக்கும். அங்கே, ஏதேன் MLA வீடோ கட்சிகாரன் வீடோ இருக்குது போலிருக்கு.

பாளை பஸ் ஸ்டாண்டிலேர்ந்து முருகன் குறிச்சி வரைக்கும் பஸ்ஸே கெடையாது. வாய்க்கா பாலம் ரூட்டுல டூ வீலர் தவிர வேற எந்த வண்டியும் போக முடியாது. அட, அட் லீஸ்ட் இந்த வண்டிங்களை எல்லாம், பாளை பஸ் ஸ்டாண்டிலேயே ஒரு போர்டு வச்சு வேற வழில போங்கடான்னு சொல்லலாம்ல. அதுவும் கெடயாது. Rajendra Sports வரைக்கும் வந்தப்பரம் திரும்ப போன்னு சொல்லிடுவானுங்க. இத்த சொல்லறதுக்கு ரெண்டு மாமா நிப்பானுங்க.

கொடுமை, பழைய பஸ் ஸ்டாண்டிலேர்ந்து மதுரை ரோடு தான். இந்த ரோட்டையும் தோண்டிப்போட்டுடானுங்க. ஒரு jeep போக தான் வழியே இருக்கு. இதுலயும், ஏதாவது KPN வண்டி வந்து ரோட்டை மறிச்சுடும். இப்போ தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஜெயலலிதா வறான்னு, A.R Lane ரோட்டை புதுசா போட்டாங்க. ரோடு எங்கன்னு தேடணும். அப்படி இருக்கு.

இதுல உள்ள கொடுமை என்னான்னா, ஜெயலலிதா ஆட்சி முடியறதுக்குள்ள, இந்த பாதாள சாக்கடை project'ஐ முடிக்கல, அவ்வளவு தான், நெல்லை நகர மக்களுக்கு, இந்த ஜென்மத்துக்கு நல்ல ரோடு கெடக்காது. சத்தியமா அடுத்த ஆட்சி வந்த ஒடனே, இந்த project'ஐ நிறுத்துவானுங்க. கேஸ் போடுவானுங்க. கேஸ் நம்ம ஆயிசு காலத்துல சத்தியமா முடியாது. நெல்லை மக்கள் கதி அதோகதி தான்.

கடவுள் தான் காப்பாத்தணும்.