Pages

October 30, 2007

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்??

அரசியல்வாதிகளையும் சினிமா நடிகர்களையும் கடவுளுக்கு நிகராக மதித்து வணங்கும் கேவலமான கலாச்சாரம், நமது நாட்டைத்தவிர வேறெங்கும் காண முடியாது. அதுவும் அரசியல் தொ(கு)ண்டர்கள் தனது தலைவர்களுக்கு செய்யும் மரியாதை (கொஞ்சம் கேவலமா சொல்லணும்னா "காக்கா பிடி") அடிமைத் தனத்தின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பது பழமொழி. இதற்கு மாற்றாக "அரசியல்வாதி வருவார்(ன்) பின்னே; தொ(கு)ண்டர்களின் வாழ்க கோஷம் வரும் முன்னே" என்று சொல்லலாம்.

இந்த அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் இந்த வாழ்த்தொலி கேட்காமலிருக்கவே முடியாது போலும். எங்கு போனாலும் ஒரு தொண்டர் படை கூடவே வேண்டும். கட்சியின் அடிமட்ட வட்டச் செயலாளரிலிருந்து கட்சியின் தலைவர் முதல் அவரவர் வசதிக்கேற்ப தொண்டர் படை உண்டு. ஒரு அரசியல்வாதி எழும் முதல் இரவு உரங்கச் செல்லும் வரை தனது கட்சியாளர்களின் கோஷம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.


இந்த அரசியல் தொண்டர்களுக்கு தனது கட்சித் தலைவனே கடவுள். தனது குடும்பம் எக்கேடு கெட்டுப் போனாலும் அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், தலைவரின் குடும்பம் தழைக்க வேண்டும். தனது மனைவி மக்களின் பிறந்த நாட்கள் அவன் நினைவில் இருக்காது. ஆனால் தலவரின் மைத்துணன் பிறந்த நாள் ஒரு வாரம் முன்பாகவே அவன் மூளையில் உதித்து விடும். மனைவியின் பிறந்த நாளன்று அவளுக்கு ஒரு முழ பூ வாங்கிக் கொடுக்க காசிருக்காது. ஆனால் தலைவனின் வப்பாட்டியின் (மன்னிச்சுக்கோங்க! என் வயித்தெறிச்சல் இப்படிப்பட்ட வார்த்தைகளெல்லாம் வந்து தொலைக்கிறது) பிறந்த நாளுக்கு கடன் வாங்கி கட் வைத்து, பாலபிஷேகம் செய்வான். தந்தையின் சொல் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கும். ஆனால் தலைவனின் சொல் மந்திரமாகும். தலைவனுக்காக உயிரை விடும் கேவலமான எண்ணமும் நமது தொண்டர்களிடையே உண்டு.

அடிமைத்தனத்தை 60 ஆண்டுகளுக்கு முன் தகர்த்தெறிந்த நமது நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் அடிமைகள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட அடிமைகள் இருப்பது தான் ஒவ்வொரு அரசியவாதியின் பலம். இவர்கள் அடிமையாக இருக்கும் வரை தான் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய முடியும். இந்த அடிமைத்தனத்தின் நதி மூலம் ரிஷி மூலம் என்ன?

நமது நாட்டில் மன்னராட்சி நிலவ வந்த காலத்திலிருந்தே, இப்படி அடிமைத்தனத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பண்டைய காலத்து மக்கள், மன்னரை கடவுளுக்கு நிகராக வணங்கினர். மன்னனும் மக்கள் சேவை மகேசன் சேவை என்று நினைத்த காலம் அது.

ஒரு மன்னன் ஒரு நாட்டை அபகரித்து அந்நாட்டில் வெற்றி நடை செய்யும் போது, மன்னனை ஆதரித்தால் தான், தங்களால் அமைதியாக வாழ முடியும் என்பதை மக்கள் நங்கு அறிந்திருந்தனர். ஆதலால் எந்த மன்னன் தங்களது நாட்டை ஆண்டாலும் அவனுக்கு வாழ்க கோஷம் போட்டே பழகிக்கொண்டனர். இப்படி ஆரம்பித்தது தான், இந்த கோஷம் போடும் பழக்கம். இப்படி தோன்றியது தான் இந்த அடிமைத்தனப் போக்கு.

பிறகு நம் மன்னர்களை புகழ்ந்து பாடிய புலவர்கள். இப்புலவர்களுக்கு மன்னர்களை குஷிப்படுத்தினால்தான், அவர்களுக்கு வரும்படி. தான் கற்ற கல்வியை, தனது புலமையை, ஒரு தனி மனித வழிபாட்டிற்காகப் பயன் படுத்தினர். ஆக ஆட்சியில் இருப்பவனை ஒரு கடவுளாக நினைத்து, தன்னை கடவுளின் அடிமையாக பாவித்து, இந்த அடிமைத்தனத்திற்கு வித்திட்டனர்.

பின்னர் வந்த மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும், நமது இந்த அடிமைப் போக்கை நன்றாக பயன் படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நாம் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுக்காதது தான்.

இப்படி காலம் காலமாக ஊறிய இந்த அடிமைத்தனம், இன்றும் வெகுவான நம் மக்களின் மனதிலே ஊறிக்கிடக்கிறது. அது தான் அவர்களை, ஒரு அரசியல்வாதியையோ சினிமா நடிகனையோ கடவுளுக்கு நிகராக எண்ண வைக்கிறது?

இந்த அடிமைத்தனம் அரசியல் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் இருப்பது தான் மனதை உறைய வைக்கும் உண்மை. இன்று மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் எல்லோருமே ஒரு விதமான அடிமைகள் தான். மென் பொருள் தயாரிப்பு இந்தியாவிலிருந்து நடப்பதால் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணச்செலவை குறைக்கின்றனர். இந்தியாவின் மேலுள்ள எந்த மோகத்திலும் அவர்கள் இந்த வேலையை இந்தியாவிற்கு அனுப்பிவிடவில்லை. இதனால், ஏராளமான நமது மக்களுக்கு வேலை கிடைத்தது உண்மை தான். ஆனால், வெளிநாட்டிலுள்ள client என்ன சொல்கிறானோ அதுவே வேத மந்திரம். அவன் நம்மை இரவு நேர conference 'க்கு அழைத்தால் நாம் இருந்து தான் ஆக வேண்டும். அவன் இரவு வெகு நேரம் அலுவலகத்தில் இருந்து விட மாட்டான். ஆனால் நாம் இருந்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவன் client. நமக்கு தீபாவளி பொங்கல் என்றாலும், நமது அரசு விடுமுறை அளித்திருந்தாலும், அப்பண்டிகளைக் கொண்டாட அவனிடம் ஒப்புதல் வாங்க வாங்க வேண்டும். நீ இந்த வார இறுதியில் தீபாவளி கொண்டாடிக்கொள் என்று அவன் சொன்னாலும் அதற்கு மறு பேச்சு கிடையாது. "அப்படியே ஆகட்டுங்க" என்று தலையாட்ட வேண்டும். இதையும் அடித்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது?

ஏன் நமக்கிந்த அடிமைத்தனம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?


October 24, 2007

நாங்க சிங்கம்'ல

முதலில் தலைப்பை வடிவேலு ஸ்டைலில் (புருவத்தை உயர்த்திக்கொண்டு) படித்துக்கொள்ளவும்.
கடந்த மூன்று வாரமாக, இந்தியா ஆஸ்திரேலியாவிடம் படு மோசமாக விளையாடி ஒரு நாள் தொடரை இழந்தது. சைமண்ட்ஸ், பான்டிங், கில்க்ரிஸ்ட், ஹேடன் மட்டுமல்லாமல் வற்ரவன் போறவன் எல்லாம் நமது பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். அதிலும் சைமன்ட்ஸின் ஆட்டத்திற்கு எதிராக நமது பந்து வீச்சாளர்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை. போதாக்குறைக்கு கைக்கு வந்த கட்சையும் விட்டு வயித்தெறிச்சலை கிளப்பினான் சிரிசாந்த். பந்து வீச்சு தான் இப்படி என்றால் பட்டிங் கேட்கவே வேண்டாம். உத்தப்பா தவிர்த்து யாரிடமும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை துணிந்து எதிர்க்கும் துணிச்சல் எவரிடமும் இல்லை. சரி, என்னத்தைப் புலம்பி என்ன பண்ண?
இப்படி உடைந்து வெதும்பியிருந்த நேரத்தில் தான் வந்தது 20- 20 போட்டி. நமது வீரர்கள் 3 வாரங்களுக்கு முன் தான் உலகக்கோப்பையை வென்றிருந்த நேரத்தில் மீண்டும் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் நிர்பந்தம். 20- 20 உலக்கோப்பை போட்டியில் நாம் வென்றது வெறும் அதிர்ஷ்டமில்லை என்று மீண்டும் நிரூபிக்க வேண்டிய தருணம். துவண்டு போயிருந்த இந்திய அணியை ஆஸ்திரேலியர்கள் துவைத்தெடுத்து துவட்டிவிடுவார்கள் (ஆ! ரைமிங் சூப்பராக்கீதுபா) என்று எல்லா பத்திரைகளும், ஊடகங்களும் பந்தயம் கட்டினர். ஆனால், நமது வீரர்கள், கிரிக்கெட்டின் இந்த புதிய ரூபத்தில் யார் சாம்பியன் என்பதை மீண்டும் நீருபித்து விட்டனர். தோனிக்கு பதில் வடிவேலு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்திருந்தால், "ஹ 20-20'ல மட்டும் நாங்க சிங்கம்ல" என்று அவர் பாணியில் சொல்லியிருப்பார்.
எதற்க்காக கிரிக்கெட்டிற்கு இந்த புதிய பரிணாமம்? ஏன் இவ்வளவு விளம்பரம்? இவ்வளவு பணச்செலவு?
கிரிக்கெட்டை உலக்குக்கு கொடுத்த பெருமை ஆங்கிலேயர்களுக்கே சேரும். முதலில் 5 நாட்கள் (டெஸ்ட்) விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டை, ஒரு நாள் போட்டியாக மாற்றியவர்கள், ஆஸ்திரேலியர்கள். டெஸ்ட் போட்டிகள் மந்தமாக நடந்ததால், கிரிக்கெட்டை விட மற்ற விளையாட்டுகளில் மக்கள் ஆர்வம் காட்ட அரம்பித்தனர். இதற்காகத்தான் ஒரு நாள் போட்டிகள் கொண்டுவரப்பட்டன.
இந்த ஒரு நாள் போடிகளும், ஒரு மாதிரி யூகிக்கும் படியாக (predictable) ஆனபிறகு, ஒரு நாள் போட்டியும் கசக்க ஆரம்பித்தது. மக்கள் (இந்திய உபகண்ட நாடுகளைத் தவிற) பிற விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். குழந்தைகளும் கிரிக்கெட்டை விட, மற்ற விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்து வந்தனர். மேலும், ஒரு நாள் போட்டி குறைந்த பட்சம் 9 மணி நேரம் நடக்கக் கூடியது. இதைப் பார்க்க வேண்டுமானால், ஒரு நாள் முழுக்க வீணாக்க வேண்டும். இதற்கெல்லாம், வடிகாலாக வந்தது, 20 - 20 போட்டிகள். இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் மட்டும் விளையாடும் போட்டி.
இதில் விறுவிறுப்பு, உற்சாகம், வேகம் என எல்லாமே அதிகம். ஒவ்வொரு பந்திலும் ரன் எடுக்க வேண்டிய நிர்பந்தம். கடைசி பந்து வீசும் வரையில் ஆட்டம் எந்த திசையிலும் திரும்பலாம். யார் வெற்றி பெறுவர் என்ற யூகிப்புத்தன்மை (predictablility) மிகக் குறைவு. உதாரணம், ஆஸ்திராலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தியது. ஏன் உலக்கோப்பை இறுதி ஆட்டம் கூட கடைசி வரையில் யார் வெற்றி பெறுவர் என்று எண்ண முடியவில்லை. ஹர்பஜனின் ஒரு ஓவர் (மிஸ்பா உல் கக் வ்ளாசியது) ஆட்டத்தின் திசையைத் திருப்பியது.
ஒரு சினிமா பார்ப்பது போல் ஒரு கிரிக்கெட் போட்டியையும் 3 மணி நேரத்தில் பார்த்து விட்டு மற்ற வேலையை கவனிக்கலாம்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட்டை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்ல இது ஒரு நல்ல யுக்தி. உடனடி முடிவு (instant result) நாடும் வேகமான உலக கலாசாரத்திற்கு 20 - 20 ஒரு நல்ல ஊடகம். இப்போட்டியினால், கிரிக்கெட்டே அறிந்திராத சீனா, ஜப்பான், அமெரிக்கா, மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட்டை தெரிந்து கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு.
மற்ற பிற நாடுகள் கிரிக்கெட்டில் நல்ல தேர்ச்சி கொண்டு நம்மை வீழ்த்தும் வரை நாம் சொல்லிக்கொண்டிருக்கலாம், "20 - 20 ல நாங்க சிங்கம்'ல" !!!!!!!!

September 20, 2007

இயற்கையை அழித்திடலாகுமா


இன்று நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் விஷயம் ராமர் பாலத்தை உடைக்கலாகாது என்பது தான். இதை கலாச்சாரச் சின்னம் வேறு சொல்கிறார்கள். தி.மு.க அரசு ஹிந்துக்கள் மேல் உள்ள த்வேஷத்தில் இந்த பாலத்தை உடைத்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். ராமர் என்ன கொத்தனாரா என்ற கேவலமான அறிக்கை வேறு.





சரி, இந்த ராமர் பாலப் பிரச்னை எங்கிருந்து திடீரென்று முளைத்தது?கீழை நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் தமிழகத் துறைமுகங்களுக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இந்த திட்டத்தினால் தமிழகத்தில் வர்த்தகம் பெருகும், வருமானமும் பெருகும் என்ற எண்ணத்தில், பாக் ஜலசந்தியை ஆழப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த திட்டம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு புறமிருக்க இத்திட்டட்தினால் யாதொரு பயனுமில்லை என்று ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இப்பாலத்தை உடைக்கக் கூடாதென்று சொல்பர்கள், இத்திட்டம் தொடங்கும் போது எங்கு போனார்கள்? இது ராமர் கட்டியது தான் என்று சொல்கிறது ஒரு கும்பல். ராமர் என்ன கொத்தனாரா என்று (கேவலமான) கேட்கிறது மற்றொரு கும்பல். இவ்விரண்டிற்கும் இடையே மாடிக்கொண்டு இரண்டு உயிர்கள் வேறு பரிதாபமாக பரிபோயின.


ஆனால் எல்லோரும் மறந்து போனதொரு விஷயம், கடலை ஆழ்படுத்தும் செயல். மனித குலம் தோன்றிய நாள் முதலே மனிதனுக்கு பெரிய விந்தையாக இருந்து வருவது காற்று, ஆகாயம், நெருப்பு, நிலம் மற்றும் நீர். ஆதலால் தான் இதை ஐம்பூதங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உலகிலுள்ள எல்லா பொருளும் இவற்றிலிருந்து தான் வந்ததென்று நம் முன்னோர்கள் கருதினர். இதில் ஆத்திகமோ நாத்திகமோ இல்லை. ஆதலால் தான் மனிதன் இந்த சக்திகளுக்கு மனித உருவம் கொடுத்து வணங்கலானான். இயற்கையை வணங்குவது தவறல்லவே.


தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில் கப்பல்கள் செல்லுமளவு ஆழமில்லாதது தமிழகத்திற்கும் நாட்டுக்கும் நல்லதாககூட இருக்கலாமே. இந்த ஜலசந்தியை ஆழப்படுத்தினால், இந்த கடற்பகுதி சர்வ்வதேச கடல் பகுதியாகிவிடும். அமெரிக்க உளவுத்துறை இந்திய கடற்பகுதிகளை வேவு பார்க்க நாமே வசதி செய்து கொடுக்கிறோம்.
நாம் ஏன் இயற்கையின் நியதியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? இப்பகுதியில் ஏற்கனவே சுனாமி வந்து பேரழிவை ஒன்றை ஏற்படுத்திச் சென்று விட்டது. இன்னமும் தமிழக கடற்கறையோரம் கடல் கொந்தளித்துக்கொன்டிருக்கிறது. அமைதியாய் இருக்கும் என்னை ஏண்டா சீண்டுகிறீர்கள் என்று கடல் சொல்வது போல் உள்ளது.
ராமர் பாலம் (அல்லது ஆதாம் பாலமோ) இயற்கையாகப் படைத்த ஒரு பாறை என்றால், அதை ஏன் உடைத்திட இவ்வலவு நாட்டம் காட்ட வேண்டும். சில நாட்களுக்கு முன் பெங்களூர் அருகே ஷிவ சமுத்திரம் என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு காவிரிக்கு குறுக்கே இரண்டு பாலங்கள். ஒன்று இன்றைய தொழில் நுட்பத்து வைத்து, குறைந்த தொலைவில் கவிரிக்கு குறுக்கே ஒரு பாலம். அங்கிருந்து சில தொலைவில், பல வருடங்களு முன் கற்களால் கட்டப்பட்ட இன்னொரு பாலம். இதில் ஸ்வாரஸ்யமான இஷயம் என்னவென்றால், அப்பாலம் சற்றே வளைந்து சென்றது. அதைக்கட்டியவர்கள், காவிரி எங்கெல்லாம் ஆழம் குறைவாகவும், ஆற்றின் போக்கு சற்றே குறைவாக இருந்ததோ அந்த இடஙளின் வழியே பாலத்தை அமைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினரோ, ஆற்றின் போக்கை எதிர்த்து பாலத்தைக் கட்டியிருந்தனர். பழைய பாலத்தைப் பார்க்கும் போது, "காவிரி அன்னையே, உன்னை வணங்குகிறேன். உன் போக்கிற்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல், நான் பாலத்தைக் கட்டுகிறேன்" என்று மனிதன் கூருவது போல் உள்ளது. அன்றைய மக்கள் இயற்கையை வணங்கினர். இன்றைய தலைமுறையினர் இயற்கையை எதிர்க்கின்றனர்.

இந்த பாழாப்போன திருவள்ளுவர் இயற்கயின் போக்கை மாற்றக்கூடாதுன்னு ஏதாவது குறள் எழுதித் தொலைத்திருக்கக் கூடாதா?
மனிதர்களே, இயற்கையை வெல்ல நினைத்தோமேயேனால், இயற்கை நம்மை அழித்து விடும்