Pages

June 23, 2005

சட்டில இருந்தாத்தாம்லே அகப்பைல வரும்

நம்மாளுங்க கிரிக்கெட் வெளாண்டு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது. எல்லா பயலுவளும் அயல் நாட்டுல கவுண்டி ஆடப்போயிட்டானுங்க. ( நம்மாளுங்களுக்குத்தான் காசு கண்ட எடம் சொர்க்கமாச்சே). ஆனாலும் பேப்பருல நெதம் கிரிக்கெட் பத்தி, பத்தி பத்தியா எளுதறானுவ. அதுவும் யாரப்பத்தி. நம்ம பயலுவள புதுசா பெண்ட நிமித்தறதுக்கு வந்திருக்க கிரேக் சப்பல் பத்தி தான்.
என்னவோ இந்தாளு இந்திய கிரிக்கெட்டுக்கு இது வரை கிடைக்காத வரப்பிரசாதம் மாதிரி.
இவரால தான் நம்ம பயலுவ 2007 ஒலக கோப்பய வெல்ல முடியுமாம்.
இந்தாளு வியூகம் வகுக்குறதுல வேணா சாணக்கியனா இருக்கலாம். ஆனா நம்ம பயலுவ வெறும் வெட்டி பயலுவளா இருந்தா என்னத்த பண்ண முடியும். எலேய் இப்படி இப்படி வெளாடுன்னு ஐடியா குடுக்கறதுல வேணா இந்தாளு பெரிய ஐடியா அண்ணாசாமியா இருக்கலாம். ஆனா, அதை நம்ம பயலுவ தானே செயல் படுத்த முடியும். நம்மால குருதய கொளத்துக்குத்தான் கூட்டிட்டு போவ முடியும். ஆனா, தண்ணி குடிக்க வேண்டியது குருத தான. அப்படி நம்ம பயலுவள என்ன பண்ணப் போறேன்னு இந்தாளு இது வரைக்கும் ஒண்ணும் சொல்லல. கேட்ட டிரேடு சீக்ரெடுன்றாரு. இந்தாளு பத்தி நெதம் ஒரு கட்டுறை
எளுதிப்புடுதானுங்க. எலேய் ஒங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லுதேம்ல. சட்டில இருந்தாத்தான்ல அகப்பைல வரும் அத்த புரிஞ்சுக்கோங்க. அம்புட்டுத்தான்.

June 16, 2005

எலேய் விவேக்கு, நீயுமால???!!!

தமிழ் சினிமாவுல காமெடி எப்பவுமே அது பாட்டுக்கு ஒரு தனி கதையாத்தேன் இருக்கும். முளூசா காமெடி படம் எடுத்தாத்தேன் படத்தோட ஒட்டிக்கிட்டு காமெடி வரும். உண்மையை சொல்லணூம்னா நாகேஷ் தங்கவேலு காலத்துக்கு பெறவு எவனுமே எனக்கு பிடிக்கலை. என்னல காமெடி பண்ணுதீகன்னு தேட்டரிலேயே திட்டிப்புடுவேன். அம்புட்டு கோவம் வரும். ரொம்ப வருஷத்துக்கு பெறவு இந்த விவேக் பய பண்ணுற காமெடி நல்லா இருந்திச்சு. பய மத்தவங்களை கிண்டல் பண்ணித் தான் காலத்தை ஓட்டுறான். இருந்தாலும் என்னவோ எல்லார் கூடவும் சேர்ந்து பாக்கலாம். மத்த பயக மாறி கத்தி பேசுறதில்ல. டபுள் மீனிங் வசனம் பேசுறதில்ல. சில பட வசனத்தயும் உல்டா பண்ணி பேசறதும் நல்லாத்தான் இருந்திச்சு. நடிகர் திலகம் சிவாஜி பராசக்தி படத்துல பேசுவாரே, அந்த மாதிரி இந்த பயபுள்ள ஒரு படத்துல பேசுனான். உண்மைய சொல்லுதேம்ல, தியேட்டர்ல விழுந்து விழுந்து சிரிச்சேன். எலேய் விவேக்கு, நீ நல்லா வருவலேன்னு வாழ்த்தவும் செஞ்சேன். ஒரு படத்துல நாலு ஆளுங்க கிட்ட அடி வாங்கிட்டு டீ கடை காரனப்பாத்து சொல்லுவன், "டேய், இங்க ஒரு ரத்த ஆறே ஓடுது. ஆளே இல்லாத கடையில யாருக்குல டீ ஆத்துதே"ன்னு கேப்பான் பாரு. ஒக்கா மக்கா, அத்த நான் இன்னிக்கு நினைச்சாலும் உருண்டு புரண்டு சிரிப்பேன்.

ஆனா, பயலுக்கு கொஞ்ச காலத்துல மண்ட கனம் எகிறிப்போச்சுன்னு நினைக்கேன். கனா கண்டேன் படத்துல எல்லாமே டபுள் மீனிக் தான். கேக்கவே காது கூசுது. பொண்டாட்டிய பாத்து, " நீளமா, எதுனா பாத்துப்புட்டா வாயை பொளந்துடுவியாடீ"ன்னு கேக்கான். சீ சீ என்ன டயலாகுல இது. இந்த எளவுக்கு தான் சின்ன கலைவாணர்ன்னு பேரு வச்சிருக்கியால. கலைவாணர் இப்படியெல்லாமா தான் பேசினாரோல.
பொண்டாட்டி கூட சண்டை போட்டா டான்ஸ் பாருக்கு தான் போணுமால. அப்படி பாத்தா, நட்டுல பாதி பயலுவ ராத்திரி முளுக்க அந்த மாறி எடத்துல தான் இருப்பானுங்க. ஆணுறை பத்தி நீ சொல்லலைன்னு யாரு அளுதா. ரொம்ப முக்கியம் பாரு. நாட்டுல இருக்கற ஆளுங்களை எல்லாம் கிண்டலடிச்சு வாங்கி கட்டிக்கிட்டது போதாதா? இப்போ போய் எதுக்குல கருணானிதிய கிண்டலைடிக்கே???

எலேய், நல்ல காமெடி பண்ணு. இப்படி வக்கிரமா பண்ணின, இவ்வளவு சம்பரிச்ச பேரெல்லாம் ஒரே நாள்ல பறந்துடும். பாத்து நடந்துக்கோ. அம்புட்டு தான் சொல்லுவேன். மவனே ஒளுங்க அடுத்த படம் பண்ணு. இல்லாட்டி ரொம்ப சீக்கிரம், சினிமலேர்ந்து காணாம போயிடுவ. அம்புட்டுதான்.

June 10, 2005

இன்டர்வியூ எடுக்க பயந்த கதை!!!

நேற்று என் மேலாளர் (அதான்பா manager) என்கிட்டே வந்து, விஜய் இன்னிக்கு ஒரு candidate interviewக்கு வராங்க. Interview பண்ண முடியுமான்னு கேட்டார். திருவிளையாடல் தருமிக்கு நான் குறுக்கே பொறந்தவனாச்சே. நமக்கு கேள்வி கேக்கறதா கஷ்டம்? ஓ! எடுக்கலாமே அப்படின்னு சொல்லிட்டேன்.
Candidate'ஓட பயோ டேடால எடுத்த உடனே ஒரு பொண்ணு பெயர் வேற போட்டிருந்திச்சா, ஒரே குஜால் தான். ( நல்ல வேளை, என் பொண்டாட்டி இதை படிக்க மாட்டா ;-)))) மேலே, படிக்க படிக்க என் வயித்துல புளிய கரைக்கற மாதிரி ஒரு ஃபீலிங். சாதாரணமா எல்லாருக்கும், interview attend பண்ணத்தான் பயப்படுவாங்க. அங்கே என்னத்தக் கேட்டு கொடயப்ப்போறானுங்களோன்னு, மனசுக்குள்ள புளிய கரைக்கும். இதென்னடா, interview எடுக்கவே பயப்படறானே இவன்னு நினைக்கிறீங்களா? அந்த பயோ டேடாவ பார்த்திருந்தா, எல்லாரும் இப்படி தான் கதி கலங்கி போயி நிப்பாங்க. மொத்தம் 13 பக்கங்கள். எம்மாடியோவ். படிக்கவே அரை மணி நேரமாச்சு. I would call it as an intimidating resume. சே, பேரு நல்லா இருக்கே. அவங்க neural networks and Fuzzy logic in DSP அப்படிங்கற சப்ஜெக்ட்ல Phd பண்ணி இருக்காங்க. அது மட்டுமா, MAtlab for Beginners அப்படிங்கற புஸ்தகம் வேற எழுதிருக்காங்க. இது தவிர ஒரு நல்ல company'ல project manager ஆ இருக்காங்க. அவங்களுக்கு கீழே 33 பேர் இருக்காங்க. (அம்மணிக்கு என்ன தொல்லையோ, அங்கேரிந்து ஏன் மாறப்பாங்கறதுதெரியலை).

சரி, மாட்டேன்னு எப்படி சொல்லறது. ஒரு மாதிரி தைரியத்த வரவழிச்சுண்டு, எடுக்கறேன்னு ஒத்துக்கிட்டேன். என் மனேஜரும் கூட இருப்பேன்னு சொன்னதும் கொஞ்சம் தைரையம் வந்தது. Interview'வும் ஆரம்பித்தது. எப்போதும் கேக்கற Tell about urself, what have u worked on, etc. கேள்விகளுக்கப்பறம், என் மனேஜர் 'what do u expect from this job' அப்படின்னு கேட்டதும், 'I would like to improve upon my managerial skills, to develop a team that works on core embedded projects' என்று சொன்னாள்.
நானும் என் மனேஜரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டோ ம். என் மனேஜர் சொன்னார், இங்கே நான் மட்டும் தான் மனேஜர். மத்த எல்லாரும் எஞ்சினியர் தான். வேணா, நீங்க ஒரு tech architect'ஆ இருக்கலாம். அம்மணி என்ன நினைச்சாங்களோ தெரியலை. 'என்னல்லாம் மறுபடியும் coding எல்லாம் பண்ண முடியாது. மனேஜர் போஸ்ட் இருந்தா சொல்லுங்க. இல்லைன்னா நடைய கட்டறேன்.' மறுபடியும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரை பாத்துக்கிட்டோ ம். சாரி மடம். உங்களுக்கு ஏத்த வேலை இங்கே இல்லை. ரொம்ப நன்றின்னு சொல்லி வழியனுப்பி வச்சோம்.

அவங்க போனப்பறம், என் மனேஜர் சொன்னார், "இந்த HR மக்கள், எனக்கு கீழ வேலை பாக்கறதுக்கு ஆள் அனுப்பங்கடான்னு சொன்னா, என்னையே, தூக்கறதுக்கு ஆள் அனுப்பறாங்களேன்னு" நொந்துக்கிட்டார்.

இந்த மாதிரி candidates'ஓட பயோ டேடாவ process பண்ணற மக்களுக்கு ஒரு சிறு advice. Candidate என்ன விரும்பறான், அவன் எதிர்பாக்கற வேலை இங்கே இருக்கான்னு, முதல்ல தெரிஞ்சுக்கிட்டு அப்பறம், அவங்களை, இன்டர்வியூக்கு அனுப்புங்க. ஏதோ profile மட்டும் match ஆனாலே அனுப்பிடாதீங்க. எல்லாரோட நேரமும் வீணாகுது.

June 08, 2005

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!!

என்னடா ரொம்ப நாளா யாரும் அறிக்கை விடலியே, என்ன ஆச்சு நம்ம அரசியல்வாதிகளுக்கெல்லாம்னு நினைச்சுக்குட்டு இருந்தேன். திடீர்னு அத்வானி விட்டார் பாரு ஒரு அறிக்கை. (பின்ன திடீர்னு விடாம, சொல்லிட்டா விடுவாக) ஜின்னா ஒரு மதச்சார்பற்றவர்னு ஒரு திரியை கொளுத்திப்போட்டுப்புட்டார். ஏன்யா யோவ், ஜின்னாஹ் பொழுது போகாமலா இந்தியாவ பிறிச்சாரு. நாட்டுல அவர யாரும் கண்டுக்கலை. என்னடா, நாம வளர்த்து விட்ட ஆளு இந்த காந்தி, இந்தாளுக்கு நாட்டுல இவ்வளவு மருவாத, நம்மள
எவனும் கண்டுக்கமாட்டேன்றாங்களே அந்தாளுக்கு வவுத்தெறிச்சல். என்ன பண்ணலாம்னு, யோசிச்சப்ப
தான், லார்ட் இர்வின் ( நமக்கெல்லாம், தெரிஞ்ச ஒரே லார்ட், லபக்கு தாஸு தான்!!!) எலேய், உனக்கு ஒரு அடையாளம் வேணும்னா, முஸ்லிம் மக்களுக்காக ஒரு நாடு வேணும்னு கேளுலன்னு ஒண்ணா இருந்த நாட்ட பிரிக்க வழி வகுத்தான். இந்தாளும், இது தான் சரின்னு முஸ்லிம் மக்காக்களெல்லாம், இந்தியாவுல இருந்தா உருப்பட முடியாது, நாங்க பிரிஞ்சு போறோம்னு சொல்லிப்புட்டு பிரிஞ்சாங்க. அவுக நாட்டுல யாரு வேணா வந்து இருங்கப்பான்னா சொன்னாரு. இருக்கற எல்லா ஹிந்துக்களௌயும், எலேய் இனிமே நீங்க இங்க இருக்காதீங்கடான்னு வெரட்டி விட்டானுங்க. அப்படி ஓடி வந்தவரு தானே, இந்த அத்வானி. மனுஷனுக்கு ஏதேனும் Alzeimer நோய் வந்துட்டுதா? ரெண்டு நாட்டுலயும் ஓடுன ரத்த ஆறெல்லாம் மறந்து போச்சா??

நம்மாளு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவுப்பாலத்த பலப்படுத்த போறென்னு பாகிஸ்தான் போனாரு. (உள்ளூர்ல இருக்கற பாலத்தயெல்லாம் விட்டுப்புட்டானுங்க. இதுல அயல் நாடு கூட உறவு பாலத்த பலப்படுத்த போறானுங்களாம்). போனவர் போனோமா, முஷராஃப பாத்தோமான்னு தேமேன்னு வர வேண்டியது தானே. ஜின்னாவோட சமாதிக்கு போயிருக்காறு. நம்மூருக்கு யாரு வந்தாலும், நேர காந்தி சமாதிக்கு கூட்டிட்டு போக மாட்டோ மா, அந்த மாறி, அவுக ஊருலயும் கூட்டிட்டு போயிருக்கானுங்க. (சென்னைக்கு எவனாச்சும் வந்தாக்க எம்.ஜி.ஆர். அண்ணா சமாதிக்கு கூட்டிட்டு போறாங்களான்னு தெரியலை !!!!) போனவரு ஒரு நாலு பூவ அள்ளிப்போட்டோ மா, வந்தோமான்னு இருக்காம, என்ன அறிக்க வேண்டிக்கடக்கு. ஜின்னா ஒரு மதச்சார்பற்ற பாகிஸ்தானத்தான் நிறுவ நினச்சார்ன்னு சொல்லித் தொலக்கணுமா. இந்தாளூக்கு, கடைசி காலத்துல, தான் பொறந்த ஊர்ல வாழணும்னு ஆசை வந்துட்டுதோ என்னவோ. அங்கே ஒரு பிளாட் வாங்கி போட்டு வூடு கட்டலாம்னு நினச்சாரோ என்னவோ!!

சரி இந்தாளுதான், ஏதோ புத்தி கெட்டுப்போய் ஏதோ உளறி இருக்கார்னு விட மாட்டானுங்களா. இந்தாளு எப்படி இப்படி சொல்லலாம்னு ஒரு தகராறு பண்ணணுமா. அவனவன் வூட்டுல தண்ணி கரண்ட் ஒழுங்கா வரமாட்டிகுது. அத விட்டுப்போட்டு 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மனுஷன் மதவாதியா இல்லையான்னு சிண்டப்புடிச்சுக்கிட்டு நிக்கறானுங்க.

ஹிந்துத்வா ஹிந்துத்வான்னு பொலம்பிக்கிட்டுருந்த இந்தாளுக்கு ஜின்னா மதவாதியா இருந்தா என்ன, இல்லைன்னா என்ன. இந்தாளு எதுக்கு மதச்சார்பின்மை பத்தி திடீர்னு கவல. எதுக்கு மதச்சார்பின்மை ஸ்டண்ட் அடிக்கணும். ஆனா ஒரு விஷயம் பாராட்டணும். நம்ம பழய தாத்தா மாறி சொன்ன அறிக்கைக்கு வெளக்கமெல்லாம் குடுக்காம, "எலேய், நான் சொன்னது தான் சரி தான்ல. ஒன்னால என்னல பண்ணமுடியுமோ அத்த பண்ணிக்கோல"ன்னு, மனுஷன் ஸ்டிராங்கா இருக்காரு.

இதெல்லாம் பாக்கும் போது, நம்ம கௌண்ட மணி சொன்ன டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!!

June 07, 2005

நுழைவுத்தேர்வு ரத்து!!!!

அம்மா அடுத்தவாட்டியும் ஆட்சிய புடிக்கறதுக்கு அடிக்கற இன்னொரு பல்டி, தமிழ் நாட்டுல எஞ்சினீரிங் மெடிக்கல் படிப்புக்குண்டான நுழைவுத்தேர்வை ரத்து பண்ணிட்டாங்க. ஏழை எளிய மக்களால, நுழைவுத்தேர்வுல நிறைய மார்க் எடுக்க முடியலையாம். ஏழை எளிய மக்களும் படிக்கணும் தான். ஆனால், அதுக்காக, மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்கற ரகத்துலேர்ந்து, புரிஞ்சு படிக்கற பசங்களை பிரிச்சு காட்டறது இந்த நுழைவுத்தேர்வு தானே?
தமிழ் நாட்டுல 12th ல மார்க் எடுக்கறது ஒரு கஷ்டமே கிடையாது. Question எல்லாம் புஸ்தகத்துலேர்ந்து வந்தாகணும். இல்லைன்னா, எவனாவது கேஸ் போட்டுடுவான். Out of Syllabusன்னு சொல்லி முழு மார்க் கொடுக்கணும்னு கோர்டும் உத்தரவு குடுத்துடும். இதே ஜெயலலிதா அரசு 10-12 வருஷத்துக்கு முன்னாடி, CBSE'ல நிறைய மார்க் போட்டுட்டானுங்க. அதுனால state board'ல படிச்ச பசங்க நிறைய பேர் எஞ்சினீரிங் மெடிக்கல் படிக்க முடியாதுன்னு சொல்லி entrance மார்க் மட்டும் தான் valid'ன்னு சொன்னது. இந்த கூத்துக்கு ஒரு அளவே இல்லையா? இந்த உத்தரவு பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு பெரிய வரப்பிரசாதம். அவளுங்க என்னிக்கு புரிஞ்சு படிச்சாளுங்க. புக்ல என்ன எளவு இருக்கோ அதை அப்படியே உருப்போட்டு, பரீட்சைல வாந்தி எடுத்துதானே மார்க் வாங்குறாளுங்க. இதுனால பசங்களுக்கு ஒரு advantage. இனிமேல், நிறைய பொண்ணுங்க எஞ்சினீரிங் மெடிக்கல் சீட் வாங்குவாளுங்க. College'ல உள்ள ஃபிகர் index எகுரும். பசங்களுக்கெல்லாம் ஒரே ஜகால்டி தான்.

ஒரு மாசம் கஷ்டப்பட்டு படிச்சு, entrance test'ல நிறைய மார்க் வாங்கினவனுங்களெல்லாம் என்ன கேனக்கிறுக்கனுங்களா?? சரி entrance test'க்கு செலுத்தின பணத்த இந்த அரங்கம் refund பண்ணுமா?? ஒரு எளவும் கிடயாது. Entrance test'ல நிறைய மார்க் வாங்கினவங்களுக்கெல்லாம் அல்வா தான்.

கிரமாங்கள்ல இருக்கற ஏழை மக்களும் நிறைய மார்க் வாங்கணும்னா என்ன பண்ணணும்? அவங்களுக்கு நல்ல கோச்சிங் கொடுக்கணும். அவங்களையும் நகரத்து மக்களோட போட்டி போடற அளவுக்கு தயார் பண்ணணும். அதை விட்டுப்போட்டு, entrance test'னால் தான் ஏழை மக்களால சீட்டு வாங்க முடியலைன்னு சொன்னா இது என்ன நியாயம். கணக்குல 10 மார்க் கேள்விக்கு 6 மார்க் step மார்க்ன்னு போட்டே ஆகணும். பதில் தப்பா இருந்தாலுமே, ஒரு பையன், steps எழுதியிருந்தான்னா, அவனுக்கு ஸ்டெப் மார்க் உண்டு. இப்படி மார்க் எடுத்து எஞ்சினீரிங் காலேஜுக்கு போயி, அந்த பையன் எந்த லக்ஷணத்துல படிக்கப்போறான்.

இந்த மாதிரி படிப்பு விஷயத்துல அரசாங்கம் எப்படி தடீர்னு ஒரு முடிவு எடுக்கலாம். சில கல்வியாளர்களோட கலந்தாலோசித்துல இந்த முடிவு எடுத்துருக்கணும். ஏற்கனவே இங்க engineering syllabus எல்லாம் சூப்பரா இருக்கு. இந்த லக்ஷணத்துல படிக்கற மாணவர்களோட தரத்தயும் குறைச்சுட்டா இன்னும் சூப்பரா இருக்கும். என்னவோ பண்ணித்தொலைங்க. பாவம் மாணவர்களோட எதிர் காலத்துல மண்ணடிக்காதீங்க. இப்படி ஏதாவது பண்ணணும்னா, இந்த test எல்லாம் வக்கறதுக்கு முன்னாடி பண்ணித்தொலைங்க. பசங்க லீவுல கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும்.

June 03, 2005

காதலித்துப்பார்!!!!

இது சத்தியமா நான் எழுதினது இல்லை. ஒரு ஹிந்தி கவிதையின் மொழிபெயர்ப்பு. அங்கங்கெ என் இடைச்செருகல்களும் உண்டு ;-))

காதலித்துப்பார்! பல்ஸர் ஸீட் தேயும்
செல் பில் ஏறும்

காதலித்துப்பார்! பெட்ரோல் போட காசு இருக்காது.
ஆனால் பில் கேட்ஸ் போல் பேசுவாய்

காதலித்துப்பார்! கடன் மலை போல் இருக்கும்
ஆனால் ஹைக் கிடைத்தது போல் குதிப்பாய்.

காதலித்துப்பார்! பெங்களூரில் டிராஃபிக் ஜாம் இல்லை என்பாய்.
BTM'ல்லிருந்து ECக்கு இரண்டு நிமிடம் தான் என்பாய்.

காதலித்துப்பார்! பர்ஸில் காசு இருக்காது.
Credit card இருக்கே என்பாய்.
விசா மாஸ்டர் கார்ட் தெய்வமாகும்

காதலித்துப்பார்! forum கோவிலாகும்
மீடிங் பாயிண்ட் பிரகாரம் ஆகும்

காதலித்துப்பார்! இத்துப்போன பனியன் அணியும் நீ
வெஸ்ட் சைடில் தான் துணி வாங்குவாய்

காதலித்துப்பார்! பாக்கெட்டில் சீப்பு இருக்கும்
ஆனால் கையால் தான் தலை கோதுவாய்

காதலித்துப்பார்! hard disk ரொம்பினால் கூட,
Client அனுப்பிய மெயில் trash ஆகும்
அவள் அனுப்பிய மெயில்கள் மட்டும் அழியாது

காதலித்துப்பார்! Desktop'ல் ஒரு ஃபோல்டருக்கு
அவள் பெயரை rename செய்வாய்

காதலித்துப்பார்! Google'ல் காதலி
பெயரை search செய்து பார்ப்பாய்

காதலித்துப்பார்! ரிஸீவ்ட் கால்ஸில் உன்
காதலி பெயரை பார்த்து ரசிப்பாய்.
மிஸ்ட் கால்ஸ் கூட கதை சொல்லும்

காதலித்துப்பார்! பொமரேனியன் நாய்களும்
teddy bearகளும் பிடிக்கும்

காதலித்துப்பார்! சிலப்பதிகாரம் எழுதியது
sydney sheldon என்பாய்

காதலித்துப்பார்! Computer Mouse
உன் காதலி என்பாய்.
ஒவ்வொரு க்ளிக்கும் ஒரு முத்தம் என்பாய்
யாரும் பார்க்காத நேரத்தில் அவள் படத்தை
வால்பேபராக செட் செய்வாய்

காதலித்துப்பார்! மொபைலில்
"I Love you" என்று டைப் செய்வாய்
ஆனால் அனுப்ப மாட்டாய்

காதலித்துப்பார்! பிச்சைக்காரனுக்கு உனது
நோட்டுகள் தானமாகும்
Pizza Hut'ல் உனது பர்ஸ் ஊனமாகும்

கவிதை வரவில்லையா? காதலில் தோற்றுப்பார்.
கட்டாயம் கவிதை வரும்.

காதலித்துப்பார்! கடிதம் கூட ஒழுங்காக
எழுதிப்பழகாத நீ கவிதை எழுத முயற்சிப்பாய்

கவிதை வரவில்லையா? காதலில் தோற்றுப்பார்
கட்டாயம் கவிதை வரும்.


இதற்கு மாற்றுக் கவிதை எழுதினால் super'ஆ இருக்கும். அதாவது 'காதலில் தோற்றுப்பார்' என்று.