Pages

April 20, 2008

கிரிக்கெட் திருவிழா(வா)?

கோடை விடுமுறைக்கு முன்னெல்லாம் புதுப்படம் தான் ரிலீஸ் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது, சினிமாவையும் கிரிக்கெட்டையும் கலந்து ஒரு காக்டெயில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஐ.பி.அல் லீக் ஆட்டங்கள் பயங்கர ஆர்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. முதல் மூன்று ஆட்டங்களிலும் த்ரில் இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே சென்றுள்ளன. பேட்ஸ்மனுங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த லீக் முறை ஆட்டங்களில் இது வரை அசத்தியவர்கள் அந்நிய நாட்டு வீரர்கள் தான். மண்ணின் மைந்தர்களான ராஹுல் டிராவிட், தோனி, காங்குலி, யுவ்ராஜ், செஹ்வாக் போன்றவர்கள் இது வரை சோபிக்க வில்லை. இனி வரும் ஆட்டங்களில் இவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு வளர்வதற்குக்காரணம், விளையாட்டையும் மீறிய ஒரு தேசிய உணர்வு தான். அப்படி இருக்கையில் இந்திய அணியில் விளையாடும் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்யும் மெக்குல்லம், ஹஸ்ஸி போன்றவர்களின் ஆட்டம் பார்க்க நன்றாக இருந்தாலும், மனதோரத்தில் ஒரு சின்ன நெருடல். இந்த லீக் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் திறமை காட்டினார்களேயன்றி, இந்த மாதிரியான லீக் ஆட்டங்களுக்கு வெகு சீக்கிரமே மக்களிடம் வரவேற்பு குறைந்து விடும். இப்போதே மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்திலேயே பாதி காலி கேலரிதான் காணப்பட்டது.
இவ்வளவு விலை கொடுத்து தங்களை வாங்கியுள்ள கிளப் முதலாளிகள் முகம் சுளிக்காமல் இருக்க இந்திய வீரர்கள் தங்கள் திறமையை காட்டியே ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை இந்திய வீரர்களை விட்டுவிட்டு அந்நிய நாட்டு வீரர்களை ஏலம் எடுத்து விடுவார்கள்.




No comments: