Pages

August 17, 2005

நூலுக்குள் நுழைந்தேன்

சிந்து பைரவி படத்தில் சுஹாசினி பேசும் ஒரு வசனம் இது.
"நாமளா பாடறது ஒரு சுகம். நாமளா கேக்குறது ஒரு சுகம். ஆனா, சங்கீதத்தப் பத்தி நாமளா பேசுறது இன்னோரு விதமான ஒரு சுகம்."
அது மாதிரி நாம் விரும்பி படிக்கும் நூல்கள் பற்றி யாருடனாவது விவாதம் செய்வது ம் ஓர் இனிமையான அனுபவம். நான் மிகவும் ரசித்துப் படித்த சில புத்தகங்கள்:

எனக்கு ஞாபகம் வந்து நான் படித்த முதல் நாவல் சிட்னி ஷெல்டன் எழுதிய "த ரேஜ் ஆஃ ஏஞ்சல்ஸ்" (The Rage of Angels) படிக்கும் போதே இது தமிழில் மக்கள் என் பக்கம் கதை தான் என்று புரிந்து விட்டது. ஸாரி,மக்கள் என் பக்கம் படம், இந்த கதையின் அடிப்படையில் தான் எடுக்கப் பட்டது என்று தெரிந்து போய் விட்டது. நான் படித்ததிலேயே இது தான் சிறந்தது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் எனக்கு நாவல்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியதில் சிட்னி ஷெல்டனின் பங்கு அதிகம் என்பதாலும் இது என்னுடைய கன்னி நாவல் என்பதாலும் இதைச் சொல்கிறேன். சிட்னி ஷெல்டன் பற்றி இரண்டொரு வாக்கியம் எழுதாவிடில் நாவல் படிக்கும் நல்லுலகம் என்னை எந்த ஜென்மத்திலும் மன்னிக்காது. கதை சொல்லும் விதத்திலும் கதையைக் கொண்டு செல்லும் விதத்திலும் இவருக்கு இணை வேறொருவர் கிடையாது என்றால் அது மிகையாகாது. அதன் பின் இவர் எழுதிய பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் படித்துவிட்டேன். அதில் நான் மிகவும் ரசித்துப் படித்தது "இஃ டுமாறோ கம்ஸ்" (If Tomorrow Comes) குங்குமம் விளம்பரத்தில் வருவது போல் "பக்கத்துக்கு பக்கம் வித்தியாசம்; படிக்கப் படிக்க ஸ்வாரஸ்யம்" என்று. அப்படித் தான் இதுவும் இருக்கும்.

இவருக்குப் பிறகு நான் விரும்பிப் படித்த நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவரது நாவலான் "கேன் அண்டு ஏபல் (Kane And Abel)" தான் என்னை மிகவும் கவர்ந்தது. முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாகம் முதல் கியர் மாறிவிடும். இதன் தொடர்ச்சியாக "புராடிகல் டாட்டர் (Prodigal Daughter)" மற்றும் "ஷல் வி டெல் த பிரஸிடென்ட் (Shall We tell the President)" என்ற இரண்டு நாவல்கள் வந்தாலும் கேன் அண்டு ஏபல் போல் இல்லை.

இதன் பின் நிறைய எழுத்தாளர்கள் நாவல்கள் படித்தாலும் சமீபத்தில் இர்விங் வாலேஸ் மாதிரி யாராலும் குஜாலாக எழுத முடியவில்லை. குஜால் நாவல்கள் படிக்கணுமா? த செகண்டு லேடி(The Second Lady) மற்றும் த ஃபேன் கிளப் (The Fan Club) படிக்க வேண்டும். ஃபேன் கிளப்பில் ஸ்வாரஸ்யம் கிடையாது. நூறு சதவிகீதம் குஜால் மட்டர் தான். (பெண்கள் இதைப் படிக்க வேண்டாம் என அறிவுறைக்கப் படுகிறார்கள்).

சொல்ல மறந்து விட்டேனே, டான் பிரவிணின் ஒவ்வொரு நாவலையும் மூன்றே நாட்களில் படித்திருக்கிறேன். மனுஷன் இஷ்டத்துக்கு காதுல பூ சுத்தினாலும் நல்லாத்தான் சுத்துறாரு. அதுவும் ஏஞ்சல்ஸ் அன்டு டெமன்ஸ் ரொம்ப ஓவர். இந்தாளு பத்தி பேசுறதுக்கு இந்த தமிழ் போதும்.

என்ன தான் புத்தகங்கள் படித்தாலும், அவையனைத்தும் ஒரு முறை படித்து விட்டு தூக்கிப் போட்டு விடும்படியானவை தான். எதுவுமே என்னை அதில் ஐக்கியப்படுத்தியதில்லை. இம்மதிரியான புத்தகங்களைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் ஒற் அழகான வார்த்தை உண்டு.
"Books of the Hour" அந்த நேரத்தைக் கழிப்பதற்காக இவை உதவுகின்றன.
மீண்டும் மீண்டும் அந்த புத்தகத்தைப் படிப்பதற்கான உந்துதல் இருந்ததில்லை. அதில் நாமே ஒரு கதா பாத்திரமாக மாறியதில்லை. ஆனால் அந்த அதியசமும் நிகழ்ந்தது.
அந்த கதையில் நானும் ஒரு கதாபாத்திரமாக என்னை நினைத்துக் கொண்டேன். சந்திரமுகி மாதிரி. ஒவ்வொரு முறை அந்த கதாபாத்திரம் வரும் போதும், அதில் என் பிரதிபிம்பத்தைப் பார்த்தேன். அவன் பேசினால், நான் பேசுவது போலிருக்கும். அவன் சண்டை போட்டால் நானும் சண்டை போடுவடு போலிருக்கும். பெண்களிடம் நூலு விட்டால், நான் கடலை போடுவது போலிருக்கும். அந்த நாவல்.......

1 comment:

Subbu said...

Vijay,
Good post. I used to read Novels during college semester exams.. Hehe.. concentration appathan varumnu.. oru uttalakkadi ;)

I remember what happened to you while you were reading "Second Lady" !!!!! ;)

Dan Brown, Michael Crichton ellam nalla "kathula Poo" stuff. I read nothing more than 1-2 days.

Chandramukhi range ellam over.. ellam adi manasulla ulla asaigal ( i mean.. kindling the subconscious desires)

enjoy

-Subbu