June 10, 2005
இன்டர்வியூ எடுக்க பயந்த கதை!!!
Candidate'ஓட பயோ டேடால எடுத்த உடனே ஒரு பொண்ணு பெயர் வேற போட்டிருந்திச்சா, ஒரே குஜால் தான். ( நல்ல வேளை, என் பொண்டாட்டி இதை படிக்க மாட்டா ;-)))) மேலே, படிக்க படிக்க என் வயித்துல புளிய கரைக்கற மாதிரி ஒரு ஃபீலிங். சாதாரணமா எல்லாருக்கும், interview attend பண்ணத்தான் பயப்படுவாங்க. அங்கே என்னத்தக் கேட்டு கொடயப்ப்போறானுங்களோன்னு, மனசுக்குள்ள புளிய கரைக்கும். இதென்னடா, interview எடுக்கவே பயப்படறானே இவன்னு நினைக்கிறீங்களா? அந்த பயோ டேடாவ பார்த்திருந்தா, எல்லாரும் இப்படி தான் கதி கலங்கி போயி நிப்பாங்க. மொத்தம் 13 பக்கங்கள். எம்மாடியோவ். படிக்கவே அரை மணி நேரமாச்சு. I would call it as an intimidating resume. சே, பேரு நல்லா இருக்கே. அவங்க neural networks and Fuzzy logic in DSP அப்படிங்கற சப்ஜெக்ட்ல Phd பண்ணி இருக்காங்க. அது மட்டுமா, MAtlab for Beginners அப்படிங்கற புஸ்தகம் வேற எழுதிருக்காங்க. இது தவிர ஒரு நல்ல company'ல project manager ஆ இருக்காங்க. அவங்களுக்கு கீழே 33 பேர் இருக்காங்க. (அம்மணிக்கு என்ன தொல்லையோ, அங்கேரிந்து ஏன் மாறப்பாங்கறதுதெரியலை).
சரி, மாட்டேன்னு எப்படி சொல்லறது. ஒரு மாதிரி தைரியத்த வரவழிச்சுண்டு, எடுக்கறேன்னு ஒத்துக்கிட்டேன். என் மனேஜரும் கூட இருப்பேன்னு சொன்னதும் கொஞ்சம் தைரையம் வந்தது. Interview'வும் ஆரம்பித்தது. எப்போதும் கேக்கற Tell about urself, what have u worked on, etc. கேள்விகளுக்கப்பறம், என் மனேஜர் 'what do u expect from this job' அப்படின்னு கேட்டதும், 'I would like to improve upon my managerial skills, to develop a team that works on core embedded projects' என்று சொன்னாள்.
நானும் என் மனேஜரும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டோ ம். என் மனேஜர் சொன்னார், இங்கே நான் மட்டும் தான் மனேஜர். மத்த எல்லாரும் எஞ்சினியர் தான். வேணா, நீங்க ஒரு tech architect'ஆ இருக்கலாம். அம்மணி என்ன நினைச்சாங்களோ தெரியலை. 'என்னல்லாம் மறுபடியும் coding எல்லாம் பண்ண முடியாது. மனேஜர் போஸ்ட் இருந்தா சொல்லுங்க. இல்லைன்னா நடைய கட்டறேன்.' மறுபடியும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரை பாத்துக்கிட்டோ ம். சாரி மடம். உங்களுக்கு ஏத்த வேலை இங்கே இல்லை. ரொம்ப நன்றின்னு சொல்லி வழியனுப்பி வச்சோம்.
அவங்க போனப்பறம், என் மனேஜர் சொன்னார், "இந்த HR மக்கள், எனக்கு கீழ வேலை பாக்கறதுக்கு ஆள் அனுப்பங்கடான்னு சொன்னா, என்னையே, தூக்கறதுக்கு ஆள் அனுப்பறாங்களேன்னு" நொந்துக்கிட்டார்.
இந்த மாதிரி candidates'ஓட பயோ டேடாவ process பண்ணற மக்களுக்கு ஒரு சிறு advice. Candidate என்ன விரும்பறான், அவன் எதிர்பாக்கற வேலை இங்கே இருக்கான்னு, முதல்ல தெரிஞ்சுக்கிட்டு அப்பறம், அவங்களை, இன்டர்வியூக்கு அனுப்புங்க. ஏதோ profile மட்டும் match ஆனாலே அனுப்பிடாதீங்க. எல்லாரோட நேரமும் வீணாகுது.
June 08, 2005
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!!
எவனும் கண்டுக்கமாட்டேன்றாங்களே அந்தாளுக்கு வவுத்தெறிச்சல். என்ன பண்ணலாம்னு, யோசிச்சப்ப
தான், லார்ட் இர்வின் ( நமக்கெல்லாம், தெரிஞ்ச ஒரே லார்ட், லபக்கு தாஸு தான்!!!) எலேய், உனக்கு ஒரு அடையாளம் வேணும்னா, முஸ்லிம் மக்களுக்காக ஒரு நாடு வேணும்னு கேளுலன்னு ஒண்ணா இருந்த நாட்ட பிரிக்க வழி வகுத்தான். இந்தாளும், இது தான் சரின்னு முஸ்லிம் மக்காக்களெல்லாம், இந்தியாவுல இருந்தா உருப்பட முடியாது, நாங்க பிரிஞ்சு போறோம்னு சொல்லிப்புட்டு பிரிஞ்சாங்க. அவுக நாட்டுல யாரு வேணா வந்து இருங்கப்பான்னா சொன்னாரு. இருக்கற எல்லா ஹிந்துக்களௌயும், எலேய் இனிமே நீங்க இங்க இருக்காதீங்கடான்னு வெரட்டி விட்டானுங்க. அப்படி ஓடி வந்தவரு தானே, இந்த அத்வானி. மனுஷனுக்கு ஏதேனும் Alzeimer நோய் வந்துட்டுதா? ரெண்டு நாட்டுலயும் ஓடுன ரத்த ஆறெல்லாம் மறந்து போச்சா??
நம்மாளு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவுப்பாலத்த பலப்படுத்த போறென்னு பாகிஸ்தான் போனாரு. (உள்ளூர்ல இருக்கற பாலத்தயெல்லாம் விட்டுப்புட்டானுங்க. இதுல அயல் நாடு கூட உறவு பாலத்த பலப்படுத்த போறானுங்களாம்). போனவர் போனோமா, முஷராஃப பாத்தோமான்னு தேமேன்னு வர வேண்டியது தானே. ஜின்னாவோட சமாதிக்கு போயிருக்காறு. நம்மூருக்கு யாரு வந்தாலும், நேர காந்தி சமாதிக்கு கூட்டிட்டு போக மாட்டோ மா, அந்த மாறி, அவுக ஊருலயும் கூட்டிட்டு போயிருக்கானுங்க. (சென்னைக்கு எவனாச்சும் வந்தாக்க எம்.ஜி.ஆர். அண்ணா சமாதிக்கு கூட்டிட்டு போறாங்களான்னு தெரியலை !!!!) போனவரு ஒரு நாலு பூவ அள்ளிப்போட்டோ மா, வந்தோமான்னு இருக்காம, என்ன அறிக்க வேண்டிக்கடக்கு. ஜின்னா ஒரு மதச்சார்பற்ற பாகிஸ்தானத்தான் நிறுவ நினச்சார்ன்னு சொல்லித் தொலக்கணுமா. இந்தாளூக்கு, கடைசி காலத்துல, தான் பொறந்த ஊர்ல வாழணும்னு ஆசை வந்துட்டுதோ என்னவோ. அங்கே ஒரு பிளாட் வாங்கி போட்டு வூடு கட்டலாம்னு நினச்சாரோ என்னவோ!!
சரி இந்தாளுதான், ஏதோ புத்தி கெட்டுப்போய் ஏதோ உளறி இருக்கார்னு விட மாட்டானுங்களா. இந்தாளு எப்படி இப்படி சொல்லலாம்னு ஒரு தகராறு பண்ணணுமா. அவனவன் வூட்டுல தண்ணி கரண்ட் ஒழுங்கா வரமாட்டிகுது. அத விட்டுப்போட்டு 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மனுஷன் மதவாதியா இல்லையான்னு சிண்டப்புடிச்சுக்கிட்டு நிக்கறானுங்க.
ஹிந்துத்வா ஹிந்துத்வான்னு பொலம்பிக்கிட்டுருந்த இந்தாளுக்கு ஜின்னா மதவாதியா இருந்தா என்ன, இல்லைன்னா என்ன. இந்தாளு எதுக்கு மதச்சார்பின்மை பத்தி திடீர்னு கவல. எதுக்கு மதச்சார்பின்மை ஸ்டண்ட் அடிக்கணும். ஆனா ஒரு விஷயம் பாராட்டணும். நம்ம பழய தாத்தா மாறி சொன்ன அறிக்கைக்கு வெளக்கமெல்லாம் குடுக்காம, "எலேய், நான் சொன்னது தான் சரி தான்ல. ஒன்னால என்னல பண்ணமுடியுமோ அத்த பண்ணிக்கோல"ன்னு, மனுஷன் ஸ்டிராங்கா இருக்காரு.
இதெல்லாம் பாக்கும் போது, நம்ம கௌண்ட மணி சொன்ன டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!!
June 07, 2005
நுழைவுத்தேர்வு ரத்து!!!!
தமிழ் நாட்டுல 12th ல மார்க் எடுக்கறது ஒரு கஷ்டமே கிடையாது. Question எல்லாம் புஸ்தகத்துலேர்ந்து வந்தாகணும். இல்லைன்னா, எவனாவது கேஸ் போட்டுடுவான். Out of Syllabusன்னு சொல்லி முழு மார்க் கொடுக்கணும்னு கோர்டும் உத்தரவு குடுத்துடும். இதே ஜெயலலிதா அரசு 10-12 வருஷத்துக்கு முன்னாடி, CBSE'ல நிறைய மார்க் போட்டுட்டானுங்க. அதுனால state board'ல படிச்ச பசங்க நிறைய பேர் எஞ்சினீரிங் மெடிக்கல் படிக்க முடியாதுன்னு சொல்லி entrance மார்க் மட்டும் தான் valid'ன்னு சொன்னது. இந்த கூத்துக்கு ஒரு அளவே இல்லையா? இந்த உத்தரவு பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு பெரிய வரப்பிரசாதம். அவளுங்க என்னிக்கு புரிஞ்சு படிச்சாளுங்க. புக்ல என்ன எளவு இருக்கோ அதை அப்படியே உருப்போட்டு, பரீட்சைல வாந்தி எடுத்துதானே மார்க் வாங்குறாளுங்க. இதுனால பசங்களுக்கு ஒரு advantage. இனிமேல், நிறைய பொண்ணுங்க எஞ்சினீரிங் மெடிக்கல் சீட் வாங்குவாளுங்க. College'ல உள்ள ஃபிகர் index எகுரும். பசங்களுக்கெல்லாம் ஒரே ஜகால்டி தான்.
ஒரு மாசம் கஷ்டப்பட்டு படிச்சு, entrance test'ல நிறைய மார்க் வாங்கினவனுங்களெல்லாம் என்ன கேனக்கிறுக்கனுங்களா?? சரி entrance test'க்கு செலுத்தின பணத்த இந்த அரங்கம் refund பண்ணுமா?? ஒரு எளவும் கிடயாது. Entrance test'ல நிறைய மார்க் வாங்கினவங்களுக்கெல்லாம் அல்வா தான்.
கிரமாங்கள்ல இருக்கற ஏழை மக்களும் நிறைய மார்க் வாங்கணும்னா என்ன பண்ணணும்? அவங்களுக்கு நல்ல கோச்சிங் கொடுக்கணும். அவங்களையும் நகரத்து மக்களோட போட்டி போடற அளவுக்கு தயார் பண்ணணும். அதை விட்டுப்போட்டு, entrance test'னால் தான் ஏழை மக்களால சீட்டு வாங்க முடியலைன்னு சொன்னா இது என்ன நியாயம். கணக்குல 10 மார்க் கேள்விக்கு 6 மார்க் step மார்க்ன்னு போட்டே ஆகணும். பதில் தப்பா இருந்தாலுமே, ஒரு பையன், steps எழுதியிருந்தான்னா, அவனுக்கு ஸ்டெப் மார்க் உண்டு. இப்படி மார்க் எடுத்து எஞ்சினீரிங் காலேஜுக்கு போயி, அந்த பையன் எந்த லக்ஷணத்துல படிக்கப்போறான்.
இந்த மாதிரி படிப்பு விஷயத்துல அரசாங்கம் எப்படி தடீர்னு ஒரு முடிவு எடுக்கலாம். சில கல்வியாளர்களோட கலந்தாலோசித்துல இந்த முடிவு எடுத்துருக்கணும். ஏற்கனவே இங்க engineering syllabus எல்லாம் சூப்பரா இருக்கு. இந்த லக்ஷணத்துல படிக்கற மாணவர்களோட தரத்தயும் குறைச்சுட்டா இன்னும் சூப்பரா இருக்கும். என்னவோ பண்ணித்தொலைங்க. பாவம் மாணவர்களோட எதிர் காலத்துல மண்ணடிக்காதீங்க. இப்படி ஏதாவது பண்ணணும்னா, இந்த test எல்லாம் வக்கறதுக்கு முன்னாடி பண்ணித்தொலைங்க. பசங்க லீவுல கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும்.
June 03, 2005
காதலித்துப்பார்!!!!
காதலித்துப்பார்! பல்ஸர் ஸீட் தேயும்
செல் பில் ஏறும்
காதலித்துப்பார்! பெட்ரோல் போட காசு இருக்காது.
ஆனால் பில் கேட்ஸ் போல் பேசுவாய்
காதலித்துப்பார்! கடன் மலை போல் இருக்கும்
ஆனால் ஹைக் கிடைத்தது போல் குதிப்பாய்.
காதலித்துப்பார்! பெங்களூரில் டிராஃபிக் ஜாம் இல்லை என்பாய்.
BTM'ல்லிருந்து ECக்கு இரண்டு நிமிடம் தான் என்பாய்.
காதலித்துப்பார்! பர்ஸில் காசு இருக்காது.
Credit card இருக்கே என்பாய்.
விசா மாஸ்டர் கார்ட் தெய்வமாகும்
காதலித்துப்பார்! forum கோவிலாகும்
மீடிங் பாயிண்ட் பிரகாரம் ஆகும்
காதலித்துப்பார்! இத்துப்போன பனியன் அணியும் நீ
வெஸ்ட் சைடில் தான் துணி வாங்குவாய்
காதலித்துப்பார்! பாக்கெட்டில் சீப்பு இருக்கும்
ஆனால் கையால் தான் தலை கோதுவாய்
காதலித்துப்பார்! hard disk ரொம்பினால் கூட,
Client அனுப்பிய மெயில் trash ஆகும்
அவள் அனுப்பிய மெயில்கள் மட்டும் அழியாது
காதலித்துப்பார்! Desktop'ல் ஒரு ஃபோல்டருக்கு
அவள் பெயரை rename செய்வாய்
காதலித்துப்பார்! Google'ல் காதலி
பெயரை search செய்து பார்ப்பாய்
காதலித்துப்பார்! ரிஸீவ்ட் கால்ஸில் உன்
காதலி பெயரை பார்த்து ரசிப்பாய்.
மிஸ்ட் கால்ஸ் கூட கதை சொல்லும்
காதலித்துப்பார்! பொமரேனியன் நாய்களும்
teddy bearகளும் பிடிக்கும்
காதலித்துப்பார்! சிலப்பதிகாரம் எழுதியது
sydney sheldon என்பாய்
காதலித்துப்பார்! Computer Mouse
உன் காதலி என்பாய்.
ஒவ்வொரு க்ளிக்கும் ஒரு முத்தம் என்பாய்
யாரும் பார்க்காத நேரத்தில் அவள் படத்தை
வால்பேபராக செட் செய்வாய்
காதலித்துப்பார்! மொபைலில்
"I Love you" என்று டைப் செய்வாய்
ஆனால் அனுப்ப மாட்டாய்
காதலித்துப்பார்! பிச்சைக்காரனுக்கு உனது
நோட்டுகள் தானமாகும்
Pizza Hut'ல் உனது பர்ஸ் ஊனமாகும்
கவிதை வரவில்லையா? காதலில் தோற்றுப்பார்.
கட்டாயம் கவிதை வரும்.
காதலித்துப்பார்! கடிதம் கூட ஒழுங்காக
எழுதிப்பழகாத நீ கவிதை எழுத முயற்சிப்பாய்
கவிதை வரவில்லையா? காதலில் தோற்றுப்பார்
கட்டாயம் கவிதை வரும்.
இதற்கு மாற்றுக் கவிதை எழுதினால் super'ஆ இருக்கும். அதாவது 'காதலில் தோற்றுப்பார்' என்று.
May 31, 2005
குழிக்குள் நெல்லை
ஏதாவது ஒரு ஏரியாவுல, வேலையை முழுசா முடிச்சப்பறம், அடுத்த ஏரியவை தோண்டலாம்ல. அந்த அறிவே கெடயாது. ஊருல ஒரு ரோடு கூட உருப்படியா இல்லை. ஒண்ணு தோண்டி போட்டிருப்பானுங்க. இல்லை, தோண்டின ரோட்டை, கல்லும் மண்ணும் போட்டு மூடிருப்பானுங்க.
பெருமாள் புரத்துல ஒரே ஒரு ரோடு மட்டும் புதுசா போட்டிருக்கானுங்க. அதுவும் முழுசா போடலை. நடுவுல ஒரு segment மட்டும் தார் ரோடு போட்டுருக்கானுங்க. அதுவும் ஒரு மழை பெஞ்சா புட்டுக்கும். அங்கே, ஏதேன் MLA வீடோ கட்சிகாரன் வீடோ இருக்குது போலிருக்கு.
பாளை பஸ் ஸ்டாண்டிலேர்ந்து முருகன் குறிச்சி வரைக்கும் பஸ்ஸே கெடையாது. வாய்க்கா பாலம் ரூட்டுல டூ வீலர் தவிர வேற எந்த வண்டியும் போக முடியாது. அட, அட் லீஸ்ட் இந்த வண்டிங்களை எல்லாம், பாளை பஸ் ஸ்டாண்டிலேயே ஒரு போர்டு வச்சு வேற வழில போங்கடான்னு சொல்லலாம்ல. அதுவும் கெடயாது. Rajendra Sports வரைக்கும் வந்தப்பரம் திரும்ப போன்னு சொல்லிடுவானுங்க. இத்த சொல்லறதுக்கு ரெண்டு மாமா நிப்பானுங்க.
கொடுமை, பழைய பஸ் ஸ்டாண்டிலேர்ந்து மதுரை ரோடு தான். இந்த ரோட்டையும் தோண்டிப்போட்டுடானுங்க. ஒரு jeep போக தான் வழியே இருக்கு. இதுலயும், ஏதாவது KPN வண்டி வந்து ரோட்டை மறிச்சுடும். இப்போ தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஜெயலலிதா வறான்னு, A.R Lane ரோட்டை புதுசா போட்டாங்க. ரோடு எங்கன்னு தேடணும். அப்படி இருக்கு.
இதுல உள்ள கொடுமை என்னான்னா, ஜெயலலிதா ஆட்சி முடியறதுக்குள்ள, இந்த பாதாள சாக்கடை project'ஐ முடிக்கல, அவ்வளவு தான், நெல்லை நகர மக்களுக்கு, இந்த ஜென்மத்துக்கு நல்ல ரோடு கெடக்காது. சத்தியமா அடுத்த ஆட்சி வந்த ஒடனே, இந்த project'ஐ நிறுத்துவானுங்க. கேஸ் போடுவானுங்க. கேஸ் நம்ம ஆயிசு காலத்துல சத்தியமா முடியாது. நெல்லை மக்கள் கதி அதோகதி தான்.
கடவுள் தான் காப்பாத்தணும்.
April 29, 2005
இவர்களுடன் ரஜினி
கதைப்படி எல்லோருமே பணக்காரர்கள் தான். அதற்காக சாதாரணமாக இருக்கும் போது கூட பட்டுச் சேலை தான் உடுத்த வேண்டுமா?? வடிவேலு மனைவியை வைத்து ரஜினி அடிப்பது காமெடி அல்ல, காமநெடி. வடிவேலு செய்யும் நகைச்சுவை, பார்த்துப் பார்த்து புளித்துப் போன அதே நடிப்பு. இதை நகைச்சுவை என்று ஒத்துக்கொள்ளக் கூட முடியவில்லை. ப்ச் கொட்டச் செய்கிறது.
ரஜினியிடம் ஒரு வேண்டுகோள். தயவு செய்து, உங்கள் படங்களுக்கு தேவாவை மட்டுமே இசையமைக்கச் செய்யுங்கள். நீங்கள் நடந்து வரும் போது அந்த "ஹே ஹே" சத்தம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தோன்றுகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு பன்ச் டயலாக் இல்லாமல் ரஜினி படம் வந்திருக்கிறது. ஒரு பெரிய ஆறுதல். தளபதிக்கு பிறகு அறிவுரை இல்லாத படம். இயக்குனரின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்.
ரஜினியின் குறல் ஒரு மாதிரியாக இருக்கிறது. பிளாஸ்டிக் ஸர்ஜரி செய்து கொண்டதன் விளைவோ??
ஜோதிகா பற்றி எழுதவில்லையென்றால், தமிழ் கூறும் நல்லுலகம் என்னை எப்பிறவியிலும் மன்னிக்காது. Stupendous Performance Jyothika. You outclassed every one. அதென்ன ஜோதிகாவுக்கு மட்டும் ஆங்கில பாராட்டு என்று எண்ணுபவர்களுக்கு என் விளக்கம், "ஜோதிகாவால் தமிழ் படிக்க முடியாதே. அதனால் தான் அங்கிலத்தில் எழுதினேன்". முதல் பாதியில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலும், பின் பாதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும் சந்திரமுகியாக மாறும் காட்சியில் மிரட்டுகிறார்.
ரஜினிக்கு ஜோடி இல்லாமல் டூயட் இல்லாமல் படம் எடுக்க முடியுமா?? அதற்காக நயந்தாரா வந்து போகிறார். அய்யாவை விட இதில் கொஞ்சம் உப்பியிருக்கிறார்.
இளைய திலகம் இளைக்கவே மாட்டாரோ?? பிரபு ஸார், கொஞ்சம் உங்க உடம்பை இளைக்க வைக்க ஏதாவது பண்ணக் கூடாதா? பார்க்கவே சகிக்கலை. எல்லோரும் மூக்காலேயே பேசுவது போல் ஒரு ஆடியோ எஃபெக்ட். எக்கச்செக்க கதா பாத்திரங்கள். மாளவிகா, நாசர், செம்மீன் ஷீலா etc. எதற்காக இவ்வளவு பேர் என்று தெரியவில்லை. ஆஹா ஓஹோ என்று மற்ற விமர்சனங்கள் கூறுவது போல் அப்படி ஒன்றும் இல்லை. I wouldn't say it is an 100% entertainer. Nevertheless, it aint boring.
சரி, தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைக்கிறீர்களா? படத்தில் எழுத்து போடும் போது, SUPER STAR என்று கிரஃபிக்ஸில் போடாமல் "இவர்களுடன் ரஜினி" என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கு.
டெயில் பீஸ்:
எப்படியெல்லாம் ரஜினியை கடவுளுக்கு நிகராக சித்தரித்து படம் எடுத்தார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று?? தமிழ் நாட்டையே ஆட்டி வைத்திருந்த ஒரு மாமனிதருக்கே இந்த நிலைமையென்றால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களெல்லாம் எம்மாத்திரம். இனியாவது தலையும் மலையும், தனது படங்களில் பன்ச் டயலாக் அடிக்காமல், தன்னை ஒரு super Man'ஆக சித்தரித்துக் கொள்ளாமலிருந்தால் நல்லது.
ரஜினியின் இந்த நிலையை பார்க்கும் போது, விவேக்கின் ஒரு டயலாக் தான் நினைவிற்கு வருகிறது. இனியும் நான் இந்த கட்டுரையை தொடர்ந்தேனானால், சிலர் என்னை ஆள் வைத்து அடிக்க கூடும். அதனால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
Mr. Rajini, I think its time for you to pad up for the second innings. You may have to change your playing style. Remember your are made to follow on.
April 12, 2005
ஆதலினால் தாய்மொழியும் பயிற்றுவீர்
ஆனால், இன்று வெகுவான பெற்றோர்கள், தமது குழந்தைகளுக்கு தாய்மொழியை போதிக்க மறந்துவிட்டனர். தாய் மொழியிலே பேசினால் கூட அது ஒரு கௌரவக் குறைச்சல் என்று எண்ணுகிறார்கள். A for Apple , B for Ball என்று கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் அம்மா, ஆடு, இலை, என்று சொல்லிக்கொடுப்பதில்லை. ஒரு குழந்தையிடம் யானையின் படத்தைக்காட்டி, இது என்ன என்று கேட்டால், elephant என்று பதில் வருகிறதே தவிர, யானை என்று சொல்லத் தெரியவில்லை. One two three four என்று நூறு வரை சொல்லும் குழந்தைக்கு ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லத் தெரியவில்லை. என் பிள்ளை mummy daddy என்று தான் கூப்பிடுவான் என்று சில பெற்றோர்கள் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சங்களிலே தாய்மொழி ஏதோ தவறான மொழி என்ற ஒரு மாயை ஏற்படுத்திவ்விட்டார்கள். நான் சில அரசியல் வாதிகளைப்போல, தாய் மொழியிலே தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை. சத்தியமாக இல்லை. போட்டி மிகுந்த இன்றைய உலகத்தில் எதிர் நீச்சல் போட வேண்டும் என்றால், ஆங்கிலத்திலே பயில்வது அவசியமாகிவிட்டது. இது ஒரு மறுக்க முடியா உண்மை. தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. தாய்மொழியைப் புறக்கணிக்காமல் கல்வி கற்ப்பிப்போம் என்பதே என் வேண்டுகோள்.
பெற்றோர்களே, குழந்தைகளுக்கு Ba Ba Black Sheep சொல்லிக்கொடுக்கும் போது, அம்மா இங்கே வா வா என்ற பாட்டும் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். At least திருவள்ளுவர் யார் என்று கேட்க வைக்காதீர்கள். ஔவ்வையாரும், பாரதியாரும், கம்பரும் எழுதாததை, மில்டனும், டென்னிசனும் வேர்ட்ஸ்வொர்தும் எழுதிவிடவில்லை. முடிந்தவரை வீட்டிலே, தாய் மொழியில் உறையாடுங்கள். சச்சின் டெண்டுல்கரே, வீட்டில் மராட்டியில் பேசுகிறார். தம் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.
பிற மொழி கற்பது பாபமல்ல. தாய்மொழியைப் புறக்கணிப்பது புண்ணியமுமல்ல.
பெற்றோர்களே, ஆதலினால் உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியும் பயிற்றுவீர்!!!!!!!
பி.கு. மேலே நான் சொன்ன இலக்கிய உதாரணங்கள் யாவும் தமிழிலே உள்ளதால், நான் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் என்று சொல்லவில்லை. என் தாய்மொழி தமிழ் என்பதால், தமிழ் உதாரணங்கள் கொடுத்துள்ளேன். மலையாளம் எண்ட மாத்ரு பாஷா என்று பரைபவர்கள், மலையாள உதாரணங்கள் போட்டுக்கொள்ளலாம் :))))
April 07, 2005
திரையில் உலர்ந்த கவிதைகள்
சில அற்புதமான கவிதைகளுக்கு நல்ல இசை சேர்த்தால், அந்த இசை அதில் மறைந்திருக்கும் கவிதை வரிகளை வெகுவாகவே overshadow செய்த்துள்ளன. அப்படி இசையால் overshadow செய்யப்பட்ட சில கவிதைகள் இங்கே.
அதனால் இந்த blog'க்கு திரையில் மலராமல் உலர்ந்த கவிதைகள், என்று பெயரிட்டுள்ளேன்.
படம்: ஒரு தலை ராகம்
கவிஞர்: டி.ராஜேந்தர்
இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம்.
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப்பார்க்கிறேன்,
வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்.
வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொட்டுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்,
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி, உலகை நான் வெறுக்கிறேன்.
உளமறிந்த பின் தானோ, அவளை நான் நினைத்தது,
உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக்கொண்டு, கவிதை நான் வடிப்பது
ஒரு தலையா காதலிலே, ஏத்தனை நாள் வாழ்வது.
அதே படத்திலே இடம் பெற்ற இன்னொரு பாடல். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாடல் hit ஆன அளவிற்கு, மேலே உள்ள பாடல் ஹிட் ஆக வில்லை.
வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது
வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது
ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,
அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்
பாட்டுக்கொரு ராகம், ஏற்றி வரும் புலவா,
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை,
உனக்கேன் ஆசை கலைமகள் மேலே
என்ன சுகம் கண்டாய் இன்று தொடர்ந்து,
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே.
மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது
வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத்தேடுது
ஏதேதோ ராகம், என்னாளும் பாடும்,
அழையாதார் வாசல் அலை வைத்து ஓடும்
நமக்கெல்லாம் டி.ராஜேந்தரை அடுக்கு மொழி வசனம் எழுதும் ஒரு வசன கர்த்தாவாகத்தான் தெரியும். அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மாபெரும் கவிஞனை நிறைய மக்களுக்கு தெரியாது.
இன்னும் சில பல உலர்ந்த கவிதைகள் அடுத்த blog'இல் பார்ப்போம்.
March 28, 2005
காதல் கொண்டேன்
"ஆஹா இப்படி கேட்டுப்புட்டாளே, இதுக்கு நான் என்னத்தைச்சொல்ல" என வடிவேலு ஸ்டைலில் யோசிக்க ஆரம்பித்தேன். நான் என் வாயை திறப்பதற்குள், "என்ன பயங்கர ஆலோசனை?" என்றாள். "ஒன்றும் இல்லை. யாரிடமிருந்து ஆரம்பிக்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்." அவ்வளவு தான். அவள் முகம் சிவந்து புருவம் உயர்ந்து, எங்கள் ஊரில் கார்த்திகைக்கு கொளுத்தும் சொக்கப்பானை போல் கொழுந்து விட்டு எரியத்தொடங்கி விட்டது. "அடப்பாவி மனுஷா!! எத்தனை பொண்ணுங்க பின்னாடிடா சுத்தி இருக்கே" என்று தொடங்கி விட்டாள். அதற்குப்பின் அவள் சொன்னதெல்லாம் "unparliamentary" சொற்கள். அவள் சற்று நிறுத்தியதும் நான் சொன்னேன், "அடி பைத்தியக்காரி. உன்னிடம் தான் என் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கிறேனே. நான் sight அடித்த, என்னை sight அடித்த எல்லா பெண்கள் பற்றியும் சொல்லி இருக்கிறேனே. நான் உன்னிடம் விளையாடுகிறேன் என்பது கூட உனக்கு புரியவில்லையா?" என்று சமாதானம் கூறினேன். "இந்த மொகரக்கட்டையை sight வேற அடிச்சிருக்காங்களாம். நான் நம்ப மாட்டேன்" என்று முணுமுணுத்த்தாள்.
"சரி, ஒரு பொண்ணு கூட உங்களை disturb பண்ணலியா??ஒருத்தியைப்பார்த்தும் உங்களுக்கு காதல் என்னும் உணர்வே வரவில்லையா?" என்றாள். இவ்வார்த்தைகள் என்னை ஒரு முறை உலுக்கிப்போட்டு விட்டது. சற்று தனிமையிலே அமர்ந்து யோசித்தேன். "எத்தனை பெண்களை கடந்திருப்பேன். இப்படி என் மனம் துடித்ததில்லை" என்ற பாடல் வரிகளை எத்தனை தடவை ஹம் செய்திருப்பேன். இந்த வரிகளுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், என்னை யாருமே cross செய்யவில்லையா" என சிந்தித்தேன்.
அப்போது தான் என் சிந்தையிலே சில நாள் குடிகொண்டிருந்து என்னை சில நாள் அவள் நினைவாலேயே என்னை பித்துப்பிடித்தவன் போல் அலையச்செய்தவள் என் நினைவ்வுக்கு வந்தாள். ஆம் அவளிடம் நான் கொண்டிருந்தது காதல் தான்.
சென்றேன் என் மனைவி இருக்கும் இடம் நோக்கி. (ஆமாம் இவுக இருக்கிறது அந்தப்புறம் பாரு!!!)
சொன்னேன் அவளிடம். "கொண்டேன் கொண்டேன். நானும் காதல் கொண்டேன்"."அப்படியா, யாரந்த நாரிமணி. கல்லுக்கு நிகரான நெஞ்சுடைய என் கணவனையும் கரைத்த அந்த மாதரசி யார்" எனக்கேட்பாள் என நினைத்தேன். ஒரே ஒரு பார்வ்வையிலேயே இவையனைத்தையும் கேட்டாள்.
அவளை நான் கண்டதில்லை. ஆனால், அவளைக்கண்டால் மன்மதன் ரதியை விவாகரத்து செய்துவிடுவான்.
அவள் குரல் கேட்டதில்லை. ஆனால், அவள் பாடினால், கலைமகளும் அவளிடம் இசை பயில ஏங்குவாள்.
அவளிடம் நான் பழகியதில்லை. ஆனல், அவள் ஈகையிலே கர்ணனையும், கருணையிலே புத்தரையும் மிஞ்சியவள்.
ஐஷ்வர்யா ராயை எட்டாவது அதியசயம் என வைரமுத்து பாடினார். இவளைக்கண்டிருந்தால், இவள் தான் முதல் அதியசம். மற்றவை, இவ்வளுக்கு பிறகு தான் என்று பாடியிருப்பார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒன்று மட்டும் அழகு. இவளுக்கு மட்டும் ஒவ்வொன்றுமே அழகு. இப்படி சொல்லிக்கொண்டே போனேன்.
"நான் நினச்சது சரி தான்" என்றாள். "என்ன நினைத்தாய்", என்றேன். "இல்லை கொஞ்ச நாளாவே, உங்க போக்கே சரியில்லை. தனியா பேசிக்கிறீங்க. சிரிச்சுக்கறீங்க. தூக்கத்துல பொலம்புரீங்க. ஏதோ நட்டு கழண்டிருக்குன்னு நான் நினைத்தது சரி தான்" என்றாள். "அடியே என் நட்டு loose'ஆ இருக்கட்டும், இல்லை டைட்டா இருக்கட்டும். நான் காதலித்த பெண் யாரென்று நீ கேட்கமாட்டாயா". "நான் கேக்காட்டாலும் நீங்க சொல்லாம இருக்கப்போரதில்லை. ம்ம் சொல்லுங்க. நீங்கள் காதல் கொண்ட பெண்ணின் பெயரை" என்றாள். "அவள் பெயர் குந்தவை" என்றேன். என் மனைவியின் முகபாவனையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்த பாவத்தின் பெயரும் தெரியவில்லை. நவரசங்க்களிலே fit ஆகாத ஒரு ரசம் என்று தான் சொல்ல வேண்டும். "இப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை. சரி யாரவள். எங்கே இருக்கிறாள். என்ன செய்கிறாள்" என்று அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தாள். அவள் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவள் என்றும் சோழ பேரரசன் ராஜ ராஜ சோழனின் தமக்கை என்று கூறியது தான் தாமதம், "perfectly confirmed. ரொம்ப முத்தியே போச்சு. ஏதாவது நல்ல psychiatrist'இடம் காட்ட வேண்டிய கேஸ்" என்றாள் என் காதலை புரிந்து கொள்ளாத என் மனைவி.
ஆம் நான் காதல் கொண்டது சுந்தர சோழரின் புதல்வியை. தன் இளவல் அருமொழி வர்மனை ராஜ ராஜனாக மாற்றியவளை. வீரத்திருமகனான வந்தியத்தேவனின் நெஞ்சையும் கரைத்தவளை. ஒரு முறை குடந்தை சென்றிருந்த போது, தஞ்சையைக்கடக்க நேரிட்டது. காவிரிக்கரையிலே உள்ள ஒவ்வொரு மண்டபத்தைப்பார்க்கும் போதும், "என் குந்தவை இந்த இடத்திற்கு வந்து நீராடியிருப்பாளோ என்று எண்ணி அகமகிழ்ந்தேன்.
என் தாய் என்னிடம், "உனக்கு எப்படிப்பட்ட பெண்ணடா மனைவியாக வரவேண்டும்" எனக்கேட்டபோது, சட்டென என் மன வானில் தோன்றிய மின்னலின் பெயர் "குந்தவை". "அம்மா, எனக்கு குந்தவை போல் ஒரு பெண் மனைவியாக வரவேண்டும்" என்றேன். எனக்கு திருமணம் நிச்சயம் ஆன போது, குந்தவையின் எந்தெந்த குணங்கள் என் fiancee'யிடம் இருக்கிறது எண்ணிப்பார்த்தேன்.
என்னுடைய இந்த காதல், ஏனோ ஒரு சாமான்னிய மனித உள்ளம் படைத்த எவருக்கும் புலப்பட மறுக்கிறது.
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல.. காதல் அல்ல...
அதையும் தாண்டி புனிதமானது... புனிதமானது...
March 23, 2005
ஏழு நாட்களில் 5 கிலோ குறைக்க எளிய வழி
இதனால் எந்த side effect 'உம் கிடையாது.
முதல் நாள்:
இன்று நீங்கள் காட்டு வாசியாக வாழ வேண்டும். பயப்பட வேண்டாம். இன்று வெறும் பழங்கள் தான் ஆகாரம். ஆனால் வாழை சேர்க்கக்கூடாது. வ்வாழை தவிர வேறு எந்த பழத்தையும் உண்ணலாம். அளவே கிடையாது. நிறைய பழச்சாறும் அருந்தலாம். இதிலும் வாழை கூடாது. தர்பூஷணி மிகவும் நல்லது.
தர்பூஷணி மிகவும் நல்லது. இந்த உணவால் ஒரே கஷ்டம் என்னவென்றால், மிகுதி நேரம் கழிப்பரையிலேயே செலவிட நேரிடும். (என்னடா இது??) உடலில் நிறைய நீர் சுரக்கும். அதனால் சிறு நீர் நிறைய போகும். அச்சம் வேண்டாம்.
இரண்டாம் நாள்:
இன்றும் நீங்கள் காட்டுவாசி தான். ஒரே வித்தியாசம். இன்று பழங்களுக்கு பதிலாக காய்களை உண்ண வேண்டும். இதிலும் அளவே கிடையாது. உருளைக்கிழங்கு சேர்க்கலாகாது. நிறைய நீர் அருந்த வேண்டும். முடிந்தால் எல்லா காய்களையும் போட்டு மிளகு தூவி சூப் வைத்து குடிக்கலாம். பழச்சாறும் அருந்தலாம். "டேய், எங்களை எல்லாம் ஒரு வழி பண்ணறதுன்னே முடிவ்வு பண்ணிட்டியா" என்று யாரும் திட்ட வேண்டாம்.
மூன்றாம் நாள்:
இன்றும் நீங்கள் நாட்டுவ்வாசியாக முடியாது. இன்று காய் மற்றும் கானிகளை உண்ண வேண்டும். "வரும் வாரம் காய் கறி வாரம்" என்று நினைக்கிறீர்களா??? இன்றும் வாழை கூடாது. இன்று சூப் மற்றும் பழச்சாற்றை அருந்தலாம். காலை உணவிற்கு ஒரு பெரிய உருளைக்கிழங்கை சற்றே நெய் விட்டு வெந்து உண்ணலாம். "எலேய் அறை படப்போறே" என்று நீங்கள் சொல்வது என் காதில் நன்றாகவே விழுகிறது :)
நாங்காம் நாள்:
கடந்த 4 நாட்களாக எதை தவிர்த்தோமோ அது தான் இன்று தான் உணவு. ஆம். இன்று வெரும் வாழைப்பழம் தான். எவ்வளவு உண்ண முடிகிறதோ அவ்வளவு உண்ணலாம். எவ்வளவு தான்டா வாழைப்பழம் திங்கறது'ன்னெல்லாம் கேக்கப்படாது. சொன்னா செய்யணும். அது தான் சமத்துப்பையனுக்கு அழகு. இரண்டு கப் பாலும் குடிக்கலாம். ஆனால் சர்க்கரை கூடாது. ஏன் விட்டா மாட்டுக்காம்பிலிருந்து நேரா குடிச்சா இன்னும் நல்லது'ன்னு சொல்லுவே பொலிருக்கு :((
ஐந்தாம் நாள்:
இன்று கொழுப்பு சத்து சேர்க்கும் நாள். (ஆமாமாம் கண்டிப்பா தேவை. உன்னை வந்து நாலு சாத்து சாத்தரதுக்கு இது ரொம்ப தேவை). காலை உணவுகு இரண்டு பன்னும் கொஞ்சம் வேக வைத்த பன்னீரும் உண்ணலாம். இதை பர்கர் போல் கொஞ்சம் தக்காளியும் சேர்த்து உண்ணலாம். சுவைக்கு மிளகு பொடியும் உப்பும் சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர வெரும் தக்காளி தான் இன்று உணவு. நான் சொல்லுவது காய்கறியான தக்காளியை. வேறேதும் அர்த்தம் கொள்ள வேண்டாம். உங்கள் நீர் அளவையும் இரண்டு மடங்காக அதிகறிக்க வேண்டும். (கிழிஞ்சது போ)
ஆறாம் நாள்:
நேற்று உண்டதை இன்று அளவில்லாமல் உண்ணலாம். நிறைய காய்களும் சேர்க்கலாம். உருளை கூடாது. நிறைய நீர் அருந்த வேண்டும்.
ஏழாம் நாள்:
எப்போடா இந்த நாள் வரும் என்ற எதிர்பார்ப்பு உங்களுள் அதிகறித்து விடும். இன்று கொஞ்சம் சோறும் பழச்சாறும், காய்காளும் உண்ணலாம். ஒரு வேளைக்கு மட்டும் தான் சோறு. மற்ற வேளைகளுக்கு காய்கள் தான். என்ன வேண்டுமானாலும் உண்ணலாம். எண்ணெய் கூடாது.
இந்த ஏழு நாட்கள் கழிந்ததும் 5 கிலோ எடை குறைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மீண்டுமொரு வாரம் இதை repeat செய்ய வேண்டும். நீங்க repeat செய்யுங்க. நான் appeat ஆகிக்கறேன். :))))))
Belive me this works.

