Pages

October 26, 2010

எந்திரன் சொதப்பல்கள்

நீங்கள் ஒரு தீவிர ரஜினி ரசிகர் எனில் மேற்கொண்டு படிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களைப் புண்படுத்தும். ஏன் என் மீது பயங்கர கோபமும் வரும். வரலாம் என்று ஆரூடம் கூறவில்லை. வரும் என்றே கூறுகிறேன். எந்திரன் என்ற சொதப்பல் படத்தைப் பார்த்து விட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். படத்தில் பல லாஜிக்கல் ஓட்டைகள். அப்படியும் படித்தே தீருவேன் நீங்கள் எண்ணினால், ஒரு டிஸ்கி. எனது ஆற்றாமை எந்திரத்தின் படம் மீது தானே தவிர ரஜினியோ அவரது நடிப்பு மீதோ அல்ல.

சொதப்பல் # 1:
என்னதான் கண்ணிலேயே ஸ்கானர் இருந்தாலும் ஒரு புத்தகத்தின் அட்டையைக் கூடப் பிரிக்காமல் ஒரு ஆட்டு ஆட்டி விட்டு அதையெல்லாம் கிரகித்துக் கொள்ள முடியவே முடியாது. இல்லை புத்தகத்தின் பெயரை மட்டும் படித்து விட்டு அந்த புத்தகத்தை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளப்பட்டதா? அதையும் சொல்லவில்லை. சொதப்பணும் என்று முடிவெடுத்தாச்சு, அப்புறம் எப்படிச் செய்தால் என்ன?

சொதப்பல் # 2:
பறக்கவேண்டுமென்றால் இறக்கைகள் அவசியம். அவையில்லாமல் பறக்கவே முடியாது. இல்லை கற்றை கீழே அழுத்த தலைக்கு மேல் ஒரு காற்றாடியாவது வேண்டும். இவையெதுவும் இல்லாமல் பறக்கவே முடியாது. ஆனால் இது எதுவுமே இல்லாமல் சிட்டி பறந்து பறந்து தீயில் அகப்பட்டவர்களை காப்பாற்றுகிறது.

சொதப்பல் # 3:
ஒரு இயந்திரத்திற்கு அறிவு புகட்டப்பட வேண்டுமெனில் அதற்கு மென்பொருள் தான் அறிவு புகட்டப் பட முடியும். மனித உணர்வுகளை அறிந்து கொள்வதற்கு ஸைகாலஜியை ஒரு மாதிரி பென்பொருளாக்கி விட முடியும். கொஞ்சம் சிரமம் இருந்தாலும் செய்யலாம். ஆனால் ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவது போல் செய்வது ரஜினி / ஷங்கரால் மட்டுமே முடியும்.

சொதப்பல் # 4:
வில்லனான பிறகு சிட்டியே, Upgraded version 2.0 என்று கூறுகிறது. அப்படியெனில் உண்ர்வுகளற்ற சிட்டி version 1.0. உணர்வுகளுள்ள சிட்டி ver 1.1. உணர்வுகள் வந்த சிட்டியை வசீகரனுக்குப் பிடிக்கவில்லையா, உணர்வுகளற்ற சிட்டியின் வெர்ஷனுக்கு டவுன்கிரேட் செய்திருக்கலாம். அதை விடுத்து அதை அழித்திருக்க வேண்டாம். அதன் பிறகு வில்லன் கோஷ்டியோ சந்தானம் / கருணாஸ் கோஷ்டியோ மீண்டும் வெர்ஷன் அப்கிரேட் அஎய்வது போல் காட்டியிருக்கலாம். முன் வரிசையில் உட்கார்ந்து விசிலடிக்கும் மக்களுக்கு இதெல்லாம் புரியாதே என்ற நினைப்பை கூட ஒரு மாதிரி வசனம் எழுதி சரி செய்து விடலாம்.

சொதப்பல் # 5:
ஹாலிவுட்டில் வேலை பார்த்த வல்லுனர்கள் தான் இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறார்களாம். டாம் & ஜெர்ரி கூட இதை விட நன்றாக இருக்கும். கிராஃபிக்ஸ் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.

சொதப்பல் # 6:
க்ளைமாக்ஸில் எந்திரங்களெல்லாம் கை கோர்த்துக் கொண்டு பல ஸ்வரூபங்கள் எடுக்கின்றன. ஏதோ விட்டலாசாரியார் படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது.

சொதப்பல் # 7:
மாச்சு பிச்சு என்ற அருமையான இடத்தில், ரசனையற்ற ஒப்பனையோடு ரஜினி / ஐஷ்வர்யாவை ஆடவிட்டது இன்னொரு பெரிய சொதப்பல். அந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியாவது வைத்திருக்கலாம்.

சுஜாதா இல்லாத குறைகள் படம் நெடுக தொடர்ந்து கொண்டே இருந்தன. அவர் இருந்தால் இம்மாதிரியான சொதப்பல்கள் நேர்ந்திருக்க விட மாட்டார் என்று நம்புகிறேன். ஏற்கனவே ராவணன் படத்தில் அவர் இல்லாததால் சுஹாசினியின் வசனங்கள் பல் இளித்தன. மணிரத்னம் திரைக்கதையில் ஓட்டை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

நல்ல வேளை கமல்ஹாசனும் ஷாருக் கானும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இவ்வளவு (டெக்னா)லாஜிகல் சொதப்பல்கள் நிறைந்த படத்தில் அவர்கள் நடிக்காமல் இருந்ததே நல்லது. ஆனால் எல்லா சொதப்பல்களையும் தாண்டி படம் நகர்வது, அல்லது நகர்த்திச் செல்லும் விசை, என்றால் அந்த விசையின் பெயர்ரஜினி. பல படங்களுக்குப் பிறகு மனிதர் பின்னி பெடலெத்திருக்கிறார். டயலாக் டெலிவரி அவ்வளவு நேர்த்தி. வசீகரனாகட்டும், சிட்டி 1.0 ,வில்லன் சிட்டி, எல்லா இடத்திலும் அவரது வசங்களும் பாடி லாங்குவேஜும் தான் “படத்தை எப்போடா முடிக்கப் போறாங்க” என்ற எண்ணம் ஏற்படாமல் காப்பாற்றுகிறது.

ஆனால் கதை திரைக்கதையை நம்பாமல் ஒரு தனிமனிதரின் கரிஸ்மாவை மட்டுமே நம்பிப் படம் எடுப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இது சினிமாவுக்கு ஆரோக்கியமானதுமல்ல. இதனால் சிம்பு, விஜய் விஷால் போன்ற துக்கடாக்கள், தாங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மமதையில், கதை திரைக்கதையை நம்பாமல் தம் மீது ஓவர் கான்ஃபிடெண்ட் ஆகி, கேவலமான படங்கள் தருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் ஏன் எந்திரனின் வசன குறுந்தகடு ரிலீஸ் செய்யவில்லை? அதை மட்டும் போட்டுக் கேட்டால் பாடல்களை விட அவை நன்றாயிருக்கும்.