May 17, 2008
அரசாங்க ஆஸ்பத்திரி மீது காண்டு ஏன்?
May 13, 2008
உனக்கு மட்டுமா தம்பி?!
ஒரு முறை (ஆறோ ஏழோ படிக்கும் போது) சில முக்கியமான கஸ்டமர் வந்திருக்கும் போது, நான் கடைக்குள்ளே என்ட்ரி கொடுத்தேன். எப்போதும் போல தலைச் சொரிந்து கொண்டே "அப்பா" என்றேன். ஒண்ணுமே கேட்காமல் பத்து(!) ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டார். "கஸ்டமர் வந்திருக்கும் போது, இவன் மானத்தை வாங்க வேண்டாம்" என்று நினைத்தாரோ என்னவோ? "ஆஹா! இப்படி கஸ்டமர் வந்திருக்கும் போது அப்பாவிடம் பணம் கேட்காமலேயே கரந்துவிடலாம் போலிருக்கே" என்ற உண்மை வெகு நாட்களுக்குப் பிறகு தான் தெரிந்தது.
ஒரு வழியா சாப்பிட்டு முடித்தபின் பில் பத்து ரூபாய்க்குள்தான் வந்திருப்பதைப் பார்த்து நிம்மதி. அப்பாடா! மாவாட்ட வேண்டாம்! பில்லை எடுத்துக்கொண்டு கௌன்டருக்கு பணம் செலுத்தச் சென்றேன். பில்லை வாங்கிகொண்டவர் பில்லைப்பார்த்தார், என்னைப்பார்த்தார். என்ன நினைத்தாரோ, "உனக்கு மட்டுமா தம்பி?" என்று கேட்டார்.
வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம், " உன் பிள்ளை, கஸ்டமருக்கு முன்னால என் மானத்தையே வாங்கிட்டான். கொடுத்த காசு அம்புட்டையும் செலவழிச்சு தின்னுபுட்டு, ஹோட்டல்காரன் கேலியா பேசினதைக் கூட பெருமையா சொல்லிக்கிறான்" என்று தலையயிலடித்துக் கொண்டார். "ஏண்டா, என்னடா பண்ணின? எதுக்கு அப்பா கோபமா இருக்கார்?", என்று அம்மா கேட்டதற்கு, நான் நடந்ததைச் சொன்னேன். அம்மாவும் சிரித்துக் கொண்டே "நல்ல பிள்ளை டா போ" என்றாள்.
இன்றும் எனக்கு ஹோட்டல் காரன் சொன்னது பிடிபடவில்லை. அப்படியென்ன கேட்டுவிட்டான். "உனக்கு மட்டுமா தம்பி?" என்று தானே கேட்டான். என்னைக் கேலியா செய்தான்? இல்லை எல்லோர் முன்னாலும் அவன் சொன்னதை அப்பாவிடம் சொன்னேனே? அது தவறா? ஒண்ணும் விளங்கலைடா சாமி.
May 09, 2008
மொழிப்பிரச்சினை
ஆஃபீசிலும் நிறைய ஹிந்தி மக்கள் தான். கன்னடத்தில் மாத்தாட வேண்டாம். அக்கம் பக்கத்திலுள்ள கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் (கன்னடர்களாகவே இருந்தும்) நன்றாகவே தமிழ் பேசுகிறார்கள். அப்படியே யாராவது கன்னடத்தில் மாத்தாட ஆரம்பித்தால், "கன்னடா கொத்தில்லா" என்று சொல்லிடுவேன். அவர்களும் எனக்கு தெரிந்த ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ சில சமயம் தமிழிலேயே கூட பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் கன்னடம் தெரியவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது கிடையாது. என் மனைவிக்கும் கன்னடம் அவ்வளவாக தெரியாது. (தமிழே முழுசா தெரியாது. இதுல கன்னடம் மட்டும் தெரியுமா?).
முதன் முதலில் மொழிப்பிரச்சினை உருவானது, எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண்மணி மூலமாக. அவளுக்கு தமிழ் தெரியாது, ஹிந்தியும் ஆங்கிலமும் புரியாது. கன்னடம் மட்டுமே தெரியும். மைசூர் பக்கத்திலுள்ள
மாண்டியா தான் சொந்த ஊர். (எப்போ தமிழ் நாட்டிற்கு எதிராக கலவரம் வந்தாலும் இங்கு தான் ஆரம்பமாகும்) அவள் எதோ கேட்க, நான் எதோ சொல்ல, அவள் கேட்டதற்கும் நான் (என் மனைவியையும் சேர்த்து தான்) சொன்னதற்கும் சம்பந்தமே இருந்திருக்காது போலும். அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பாள். என் முகம், பணத்தை எல்லாம் இழந்து விட்ட வடிவேல் மூஞ்சி கணக்கா ஆகிடும். தொடப்பம் எங்கேன்னு கேட்டிருப்பாள், இவ்வளவு தான் பாத்திரம் இதை மட்டும் தேய்த்தால் போதும் என்பேன். நான் சொல்வது அவளுக்கு புரியாமல் அவளே தொடப்பத்தைத் தேடி எடுத்து கொள்வாள். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், துணியை நானே உலர்த்தி கொள்கிறேன் என்பாள் என் மனைவி.
இந்த மாதிரி அவள் என்ன சொல்கிறாள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல், நிறையவே சர்க்கஸ் கூத்துக்கள் நடக்கும்.
இப்படி அல்லல் பட்டு இன்றளவும், கன்னட சரஸ்வதி என் நாவில் குடி கொள்ள மறுக்கிறாள்.
April 28, 2008
எங்கே போனார்கள் கலாசர பாதுகாவலர்கள்
இவ்வளவு பணம் விரயம் செய்து, படம் மட்டும் ஊத்திக்கொண்டதென்றால், தயாரிப்பளர் 'அம்பேல்' என்பது மட்டும் உறுதி.
April 20, 2008
கிரிக்கெட் திருவிழா(வா)?
கோடை விடுமுறைக்கு முன்னெல்லாம் புதுப்படம் தான் ரிலீஸ் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது, சினிமாவையும் கிரிக்கெட்டையும் கலந்து ஒரு காக்டெயில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஐ.பி.அல் லீக் ஆட்டங்கள் பயங்கர ஆர்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. முதல் மூன்று ஆட்டங்களிலும் த்ரில் இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே சென்றுள்ளன. பேட்ஸ்மனுங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த லீக் முறை ஆட்டங்களில் இது வரை அசத்தியவர்கள் அந்நிய நாட்டு வீரர்கள் தான். மண்ணின் மைந்தர்களான ராஹுல் டிராவிட், தோனி, காங்குலி, யுவ்ராஜ், செஹ்வாக் போன்றவர்கள் இது வரை சோபிக்க வில்லை. இனி வரும் ஆட்டங்களில் இவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு வளர்வதற்குக்காரணம், விளையாட்டையும் மீறிய ஒரு தேசிய உணர்வு தான். அப்படி இருக்கையில் இந்திய அணியில் விளையாடும் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்யும் மெக்குல்லம், ஹஸ்ஸி போன்றவர்களின் ஆட்டம் பார்க்க நன்றாக இருந்தாலும், மனதோரத்தில் ஒரு சின்ன நெருடல். இந்த லீக் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் திறமை காட்டினார்களேயன்றி, இந்த மாதிரியான லீக் ஆட்டங்களுக்கு வெகு சீக்கிரமே மக்களிடம் வரவேற்பு குறைந்து விடும். இப்போதே மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்திலேயே பாதி காலி கேலரிதான் காணப்பட்டது.
இவ்வளவு விலை கொடுத்து தங்களை வாங்கியுள்ள கிளப் முதலாளிகள் முகம் சுளிக்காமல் இருக்க இந்திய வீரர்கள் தங்கள் திறமையை காட்டியே ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்த முறை இந்திய வீரர்களை விட்டுவிட்டு அந்நிய நாட்டு வீரர்களை ஏலம் எடுத்து விடுவார்கள்.
April 16, 2008
அழிக்கப்பட்டு வரும் காலச்சுவடுகள்
என்னைப் பொறுத்தவரை, கல்வெட்டுக்கள் எதோ கதை சொல்லும் விஷயங்கள் மட்டுமல்ல. அக்காலத்து மனிதர்கள் தன்னைத் தொடர்ந்து வரும் தலைமுறைக்குச் சொல்ல நினைத்த சில முக்கியமான விஷயங்கள். இப்போ ஆஃபிஸிலே நாம் செய்யும் ப்ரோஜெக்ட்டை, நம்மைத்தொடர்ந்து, அதை மெயின்டெய்ன் பண்ணுபவர்களுக்கு வசதியாக இருக்க டாகுமெண்ட் செய்வதில்லையா? அது போலத்தான், ஏதோ ஒரு முக்கியமான செய்தியை தலைமுறை தலைமுறையாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செதுக்கப்பட்டவை தான் கல்வெட்டுக்கள். இன்றும் வரலாற்றுச் சான்றாக விளங்குவது, கோயில்களில் காணப்படும் எண்ணிலடங்கா கல்வெட்டுக்கள் தான்.
சென்ற வாரம் ஹோசூர் கோயிலுக்குச் சென்றிருந்த போதுதான் கவனித்தேன், கோயில் சுவர்களை, செப்பனிடுகிறோம் வெள்ளையடிக்கிறோம் பேர்வழியென்று, அக்கெல்வெட்டுக்கள் அழியும் வண்ணம் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கோவிலில் திருப்பணி மேற்கொள்ளும் மனிதர்கள் இது கூடவா தெரியாமலிருப்பர்கள்? கல்வெட்டுக்கள், எவ்வளவோ அந்நிய படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி காலத்தினால் அழிக்க முடியாத காலச்சுவடுகளை, இப்படியா, பொறுப்பில்லாமல் அதன் மேல் வெள்ளை பூசி, சிமெண்ட் பூசி நம் மனிதர்களே அழிக்கப் புறப்படுவார்கள்?
April 11, 2008
தினம் ஒரு பதிப்பு
நம்ம சாலமன் பாப்பைய்யா எப்படி சன் டி.வி'ல தினம் ஒரு திருக்குறள் சொல்றாரோ, அது மாதிரி நான், தினம் ஒரு பதிப்பு எழுதணும்'னு ஒரு ஆசை. தினமும் ஏதாச்சும் எழுதணும்'னா நான் நெசாமவே வெட்டித்தண்டமாத்தான் சுத்திட்டுத்திரியறேன்னு நினைக்கப்படாது.
எங்க வூட்டம்மாவுக்குக்கூட இப்போ நான் இன்னா எழுதுதேன்னு படிக்கற ஆர்வம் வந்திருக்கு. நான் எழுதுறதை தப்புத்தப்பா படிச்சு தமிழை கொலை பண்ணுவது வேறு விஷயம்.
இருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகம் பயன் பெறுமாரு எழுதட்டாலும், ஏதோ டைம் பாசுக்காச்சும் படிக்கற மாதிரி ஏதாவது எழுதி எல்லாரையும் பதம் பார்க்க போறேன்.
So Guys n Gals, watch out this space daily for more updates from tomorrow.
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க? ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??
April 09, 2008
நகர வாழ்க்கையிலே தொலைத்தவை
ஆற்றங்கரைக்குளியல்
பாவாடை தாவணி மயில்கள்
பம்பரம் கோலி கிட்டிப்புல்
நகர வாழ்க்கையில் தொலைத்தவை அடுத்த பதிப்பில் தொடரும்
March 26, 2008
வெயிலோடு உறவாடி
எங்கள் ஊர் வெயிலுக்கு பெயர் போன ஊர். வருஷத்திலுள்ள அனைத்து மாதங்களிலும் எங்கள் ஊர் மீது ஆதவனின் பார்வை உக்கிரமாகவே இருக்கும். கோடை விடுமுறையில் பெரும்பாலும் என் தாத்தா ஊருக்குச் சென்றுவிடுவோம். அங்கு சென்று விட்டால், என்னை கையிலே பிடிக்க முடியாது. அம்மாவின் ஜம்பமும் அங்கு பலிக்காது. தாத்தா முன் என்னைத் திட்டினால் அவருக்குக் கோபம் வந்து விடும்.
எப்போதும் நண்பர்கள் படை சூழ பேட்டும் பாலுமாகத் தான் திரிவோம்.
வெயிலிலே அலைந்து திரிந்து வரும் என்னை என் அம்மா கறி வண்டிச்சூலன் என்று அழைப்பாள்.
