Pages

May 17, 2008

அரசாங்க ஆஸ்பத்திரி மீது காண்டு ஏன்?

"கழுத்துவலித்தொல்லையால் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி" - செய்தி. ராமசந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் இவரை பரிசோதித்து வருகிறார்களாம். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், ஏன் அரசாங்க ஆஸ்பத்திரியில் போய் சிகிச்சை செய்துகொள்ளவில்லை? இவரே அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலைன்னா, அங்கே வசதிகள் சரியா இல்லைன்னு தானே அர்த்தம்? இல்லை, அங்கு வேலை பார்க்கும் டாக்டர்கள் மேல் நம்பிக்கை இல்லையா? அவர்கள் திறமையில் சந்தேகமா? ஏன் இடஒதுக்கீட்டில் மருத்துவம் படித்து, இட ஒதுக்கீட்டிலேயே அரசாங்க ஆஸ்பத்திரியிலே வேலையும் கிடைத்தவர்கள் எந்த அளவிற்கு சிகிச்சை கொடுப்பார்கள் என்ற அச்சமா? இல்லை, இவர் அங்கு போனதால் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை கொடுக்காமல், டாக்டர்கள் தன்னை கவனிக்க வந்துவிடுவார்கள் என்பதற்காக அங்கு போகாமலிருக்கிறாரா? எந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாலும் நுழைவாயிலில் கருணாநிதியின் படத்தைத்தான் மாட்டி வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு மாநிலத்தின் முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர், இப்படி செய்வது ஒரு தப்பான முன்னுதாரணம்.
இதைப்பற்றியெல்லாம் ஞானி தனது 'ஓ' பக்கங்களின் குட்டு என்று எழுதுவாரா தெரியாது. அதனால் தான் நான் முந்திக்கொண்டேன்.

1 comment:

Anonymous said...

உங்களுக்கு முன்னாடியே ஒருத்தரு இங்கே கேட்டுட்டாரு.

http://mayavarathaan.blogspot.com/2008/05/421.html