Pages

April 09, 2008

நகர வாழ்க்கையிலே தொலைத்தவை

கல்லூரி படிப்பு முடித்து, பிழைப்புக்காக நகர வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபின், கொஞ்சம் பணம், வீடு கார் எல்லாம் வாங்கியாச்சு. ஆனால், எதையாவது தொலைத்தால் தானே சில பொருட்கள் கிடைக்கும். அப்படி நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பின், நான் தொலைத்தது என்ன?
ஆற்றங்கரைக்குளியல்
எப்போ தாத்தா வீட்டிற்குப் போனாலும், ஆற்றங்கரை குளியல் இல்லாமல் திரும்பமாட்டேன். எருமை மாடு கூட இவ்வளவு நேரம் தண்ணியில இருக்காதுடா என்று அப்பா சொல்வார். அவ்வளவு நேரம் தண்ணியிலேயே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பேன். பெங்களூரிலிருந்து 140 கி.மீ தூரத்தில் இருக்கிறது பக்கத்திலுள்ள ஆற்றங்கரை :(

பாவாடை தாவணி மயில்கள்
பி.கு. நல்ல வேளை, என் மனைவிக்கு, தமிழ் படிக்கத் தெரியாது. அதனால் தைரியமாக இதை எழுதுகிறேன். எங்கள் வீட்டுப்பக்கத்தில், திருநெல்வேலியின், பெயர் 'போன' மகளிர் கல்லூரி இருக்கிறது. எங்கள் வீட்டைக்கடந்து தான் நிறைய பெண்கள் காலேஜுக்குப் போகணும். நிறைய பெண்கள் பாவாடை தாவணியில் தான் தினமும் செல்வார்கள். என்ன தான், பெங்களுர் பெண்கள் ஜீன்ஸும் டி-ஷர்டும் போட்டிருந்தாலும், பாவாடை தாவணி மாதிரி வருமா? இதைப் படித்து விட்டு, சில பெண் வாசகர்கள், நான் சரியான மஹா ஜொள்ளன் என்று நினைக்கலாம். என்ன செய்ய, உண்மையை ஒப்புக்கொண்டு தானே ஆகணும் !

பம்பரம் கோலி கிட்டிப்புல்
நாங்கள் தெருவில் அவ்வப்போது விளையாட்டு சீசனை மாற்றுவோம். சில நாட்களுக்கு பம்பரம், சில நாட்களுக்கு கோலி, சில சமயம் கிட்டிப்புல். மீதி நேரங்களில் கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டு. பம்பர விளையாட்டில் மற்றவர் பம்பரத்தில் ஆக்கர் வைப்பதை (பம்பரத்தின் ஆணியால், மற்றவர் பம்பரத்தில் ஏற்படுத்தும் விழுப்புண்க்கள்) எவ்வளவு வீர தீரமான செயல். வித விதமான கலர்களில் கோலிக்காய் வாங்கி, அம்மவுக்குத்தெரியாமல் பதுக்கி வைத்து, ஆஹா அதெல்லாம் ஒரு காலம். கிட்டிப்புல் சற்றே விவகாரமான விளையாட்டு. சற்றே ஏமாந்தாலும், உடம்பில் ஏதாவது காயம் ஏற்படுத்தி விடும். வீட்டில் நான் கிட்டிப்புல் விளையாடப் போனால் திட்டுவார்கள். இருந்தாலும், எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு விளையாட ஓடிடுவேன். என் மகனுக்கெல்லாம், இந்த விளையாட்டுக்களை காட்ட வேண்டுமென்றால், ஒரு Documentary படம் எடுத்து வைத்துதான் காட்ட வேண்டும். என் மகன் பம்பரத்தைப் பார்த்தால் ஏதோ antique பொருள் என்று நினைக்கக்கூடும்.

நகர வாழ்க்கையில் தொலைத்தவை அடுத்த பதிப்பில் தொடரும்

3 comments:

Anonymous said...

Vijay,

Do you remember our fabulous "cricket match" in vayakaadu while going to Merku athangarai one day ?. You have missed one important game in this

"Laggori" (kind of eripanthu we say)

Harish.

மங்களூர் சிவா said...

பாவாடை தாவணியா?? அப்பிடின்னா என்னன்னு பொண்ணுங்களுக்கே மறந்துபோச்சே நீங்க இன்னும் அதை நினைச்சுகிட்டு!!

:))))))))))))))))))

மங்களூர் சிவா said...

நல்லா எழுதியிருக்கீங்க!
தொடருங்கள்!