Pages

May 25, 2008

ஊடகங்களின் நாடகம்


இன்று கர்னாடகா தேர்தல் முடிவுகள் தான் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியிலும் ஹாட் டாபிக். 100 தொகுதிகளின் முடிவுகள் தெரிந்த நிலையில் பி.ஜே.பி. தான் தனிப்பட்ட முதலிடம் வகிக்கும் பொழுது, சில செய்தித் தொலைக்காட்சிகள் அக்கட்சியை இரண்டாவது நிலைக்குத்தள்ளிவிட்டு, இரண்டாவது நிலையிலுள்ள காங்ரஸிற்கு முதலிடம் கொடுத்து அறிவிக்கின்றன.

உண்மையை மக்களுக்குச்சொல்வதில் பாரபட்சமின்றிக் கொடுப்பது தான் செய்தியாளர்களின் தலையாய கடமை. ஆனால் இப்படி ஒரு அரசியல் கட்சிக்குப் பாரபட்சமாக நடக்கும் செய்தியாளர்களை என்னவென்று சொல்ல?இந்தப்பதிப்பை எழுதும் பொழுது, யாருமே பெரும்பான்மை பலம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இப்பொழுதே யாரும் யாரும் கூட்டு சேரக்கூடும் என்று இப்போதே தொலைக்காட்சியில் அலசத்தொடங்கி விட்டார்கள். எது எப்படியோ, நல்லதொரு அரசு அமைந்தால் நல்லது தான்.

No comments: