Pages

July 13, 2005

கேக்கறவன் கேனையன்னா, கேழ் வெரகுல நெய் வடியுதும்பாங்க


டுபாகூர் வுடறதுல நம்ம பயலுவள அடிச்சுக்கறதுக்கு ஆளே இல்லை. லேட்டஸ்ட் டுபாகூர் அஹமதாபாதுல நடந்திருக்கு. அஞ்சுல் பாண்டியான்ற பதினெட்டு வயசு பையன், மைக்ரொஸாஃப்ட்ல (Microsoft) வேலை பாக்கறதா ஒரு பெரிய கதை கட்டி அத மத்தவங்க நம்பும்படியா பண்ணியிருக்கான். ஐயா கூட பில் கேட்ஸ் அப்பப்போ சட் (chat) பண்ணுவாராம். இவரு microsoft நடத்துன நிறைய கோர்ஸ்ல உலகத்துலயே நம்பர் ஒண் ரங்க் வாங்கியிருக்காராம். இவரு தான் மைக்ரொசாஃப்டோட டெக்னாலஜி டிபார்ட்மென்டையே அட்மினிச்டர் பண்ணுறாராம். இவருக்கு ஒரு வாரத்துக்கு 5000 $ சம்பளம் தரேன்னு பில் சொன்னாராம். ஆனா இவர் அதுக்கு ஒத்துக்கிடலையாம். இவரு B.E கம்பியூடர் சயின்ஸ் படிக்கிறாராம். Harvard Universityல M.Phil பண்ணுறாராம்.

ஐயா சொவத்துல நிறைய சான்றிதழெல்லாம் மாட்டி வச்சிருக்காறாம். இத பத்தி இன்னும் நிறைய படிக்கணூம்னா, http://timesofindia.indiatimes.com/articleshow/1169345.cms



இது தான் இப்படின்னா, இதே ஊர்ல ஹர்ஷில் பாரீக்ன்ற 19 வயசு பையன் ஒரு படி மேல போயிட்டான். இவரு ISROல வேலை பாக்குறாராம். இவரு தான் ISRO Moon Mission இயக்குனராம். இப்படி ஒரு டுபாகூர சொல்லி ஒரு பொண்ணோட அப்பாவ ஏமாத்தி அந்த பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான். ஐயா ரொம்ப பேஸுறாரேன்னு யாரோ சந்தேகப்பட, போலீஸு வந்து வெசாரிச்சப்போ தான் குட்டு வெளிப்பட்டிருக்கு. இவரு 10th படிக்கும் போதே ஒரு பொண்ணுக்கு நூலு வுட்டாறாம். அது நீ வாழ்க்கைல செட்டில் ஆனப்பறம் பாப்போம்னுட்டுதான். (பொண்ணுங்கல்லாம் இப்போ ரொம்ப உஷார்மா) அதை வளைக்க தான் ஐயா இப்படி ஒரு டுபாகூர் நாடகத்த நடத்துனாராம். இந்த டுபாகூர்ல அந்த பொண்ணும் பொண்ணப்பெத்த அப்பனும் மயங்கிட்டானுவ. இதோட நிறுத்திக்கிட்டாலாவது சரி. இப்பவே கல்யாணமும் பண்ணீக்கிடணும். இல்லைன்னா 20 வருஷத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட முடியாதுன்னு வேற அளந்து வுட்டிருக்காரு. இதுக்கு அப்துல் கலாம் உதாரணம்னு சொல்லவும், கல்யாணமும் முடிஞ்சாச்சு. இப்போ மாமியாரு வூட்டுல ஒக்காந்து களி தின்னுக்கிட்டுருக்காரு.

கேக்கறவன் கேனையன்னா, கேழ் வெரகுல நெய் வடியுதுன்னும் சொல்லுவானுங்கன்றது எவ்வளவு உண்மையாப் போச்சு???

1 comment:

Subbu said...

Kekkaravan kenayana iruntha Erumammadu kooda Aeroplane ottumama :)