(Deccan Chronicle Ad ராகத்தில் வாசிக்கவும்)
வந்தாச்சு வந்தாச்சு புதிய ரூல்ஸு வந்தாச்சு
பின்ச் ஹிட்டருக்கு ஆப்பு வக்க
புதிய ரூல்ஸு வந்தாச்சு
"ஸ்ரீ லங்காவுல நடக்கப்போகற திரிகோண போட்டிகள்லேர்ந்து தான் புதிய ஒரு நாள் ஆட்டத்துக்கான விதிமுறைகள் நடைமுறல வரும்னு முதல்ல சொன்னாங்க. ஆனா, நம்மூர் ஆடி தள்ளுபடிய ஆனி மாசத்துலயே ஆரம்பிச்சுட்ட மாதிரி இங்கிலாந்துல நடக்குற Natwest challenger series'லேர்ந்தே ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க."
எலேய் எலேய் கொஞ்சம் நிறுத்து. என்ன நீ பாட்டுக்கு சொல்லிட்டே போற. என்ன விதிமுறைங்க. என்ன மாறிச்சு. யாரு என்னத்த சொன்னாங்க. ஒரு முன்னுரையே கொடுக்காம நீ பாட்டுக்கு இப்படி டாப் கியர்ல போனா யாருக்கு என்னல புரியும்னு நினைக்கிறீயேளா??
கொஞ்ச நாளாகவே ஒரு நாள் சர்வதேச ஆட்டத்துல யாரு ஜெயிப்பா யாரு தோப்பான்றது கொஞ்சம் predictive'ஆ அகிட்டுது. நம்ம தமிழ் சினிமா மாதிரி. அதனால ஆட்டத்துல என்ன மாறியான மாற்றம் கொண்டுட்டு வரலாம்னு கிரிக்கெட் வாரியம் யோசிச்சு. எலேய் இது நம்மூரு தண்ணீரு வாரியம் மாதிரி இல்ல. யோசிச்சுட்டே இருக்கறதுக்கு. கொஞ்சம் ரோசன பண்ணி அத செயல் படுத்தவும் செய்யப் போறாங்க. அந்த யோசனையின் முடிவுதான் இந்த மாற்றங்கள்.
ஒரு நாள் ஆட்டம் ஒவ்வொரு அணியும், தலா 50 ஓவர் வரைக்கும் வெளாடலாம். இதுல மொத 15 ஓவருக்கு 2 பயலுவ தான் வெளி வட்டத்துல நிக்கலாம். மத்த பயலுவளெல்லாம் உள் வட்டத்துக்குள்ள தான் நின்னாகணும் (என்னல ஏதோ தேர்தல்ல நிக்க வட்டம் மாவட்டம்'னு சட்டு புட்டுனு விஷயத்துக்கு வா)
சரி ரூல் நம்பர் 1:
இனிமே மொத பத்து ஓவருக்குத்தான் 2 பேரு வெளிய நிப்பானுவ. அப்புறம் மீதி 40 ஓவருல ஃபீல்டிங் கப்டன் எப்போ வேணாலும் இந்த மாதிரி ரெண்டு பேத்த மட்டும் வெளிய நிப்பாட்டலாம். ஆனா, இந்த மாதிரி நிப்பாட்டும் போது 5 ஓவருக்கு கொறயாம நிப்பாட்டணும். அதுவும் ரெண்டு வாட்டி இந்த மாதிரி நிப்பாட்டணும்.
ரூல் நம்பர் 2:
ஸப்ஸ்டிட்யூட் ஆளு இனிமே பேட்டும் டிரிங்ஸும் மட்டும் கொண்டு வந்துட்டு பந்து பொறுக்கிப்போட்டுட்டிருக்க வேண்டாம். அவனுங்களும் பேட்டிங்கும் பவுலிங்கும் செய்யலாம். எப்ப வேணாலும் இந்தாளுங்கள உள்ள கொண்டாந்துக்கலாம்.
ரூல் நம்பர் 3:
ரன் அவுட்டுக்கு மட்டுமில்லாம, இனிமே எல்லா விதமான அவுட்டுக்கும் மூணாவது அம்பயர கேட்டுக்கலாம்.
ஆனா, மூணாவது அம்பயர் மொத ரெண்டு அம்பயரின் முடிவுல தலையிட முடியாது.
Test rules are Partial to bowlers.
One Day rules are Partial to batsmen.
Cricket rules are always partial to Umpires
சரி இதுனால அப்படி என்ன மாற்றம் வரும்னு கேக்கியேளா???
ஆட்டத்துக்கு முன்னாலேயே ரெண்டு அணியும் தங்கள நல்லா தயார் படுத்திக்கணும். ஒவ்வொரு கட்டத்துக்கு தகுந்த மாதிரி வியூகம் அமைச்சக்கணும். இங்கே தான் கப்டனும் கோச்சும் நல்லா யோசிக்கணும். More than a coach every team would need a strategeist.
நம்மாளுங்க பிட்ச்ல, ஸ்பின் எடுக்கும்னு நினச்சு முரளி கார்த்திக் மாதிரி ஒரு ஸ்பின்னர டீம்ல வச்சிருப்பானுங்க. ஆனா, பந்து சுழலவே செய்யாது. கில்கிரிஸ்டு மாதிரி ஆளு விளாசு விளாசுன்னு விளாசரான்னா, முரளிய தூக்கிப் போட்டுட்டு வேற ஒரு ஃபாஸ்ட் பவுலர கொண்டாரலாம். திடீர்னு லக்ஷ்மணன் நடுவுல ரன் எடுக்காம கட்ட போட்டான்னா அவன தூக்கிட்டு அதிரடியா ஆடுற தோனிய கொண்டாரலாம். இதுனால விளையாடரவனுங்களும் உஷாரா இருப்பானுங்க. ஒழுங்கா ஆடல, "ஆப்பு என்பது எல்லோர் முன்னிலயிலும் வைக்கப்படும்"
அதே மாதிரி தான் ரெண்டு பேத்த வெளிய நிக்க வைக்கற விதியும். மொத பத்து ஓவரிலேயே பட்டிங் டீம் 3 விக்கட்ட எழந்திரிச்சின்னா, இன்னும் அஞ்சு ஓவருக்கு 2 பேத்த வெளிய நிக்க வக்கலாம். எதிராளி இன்னும் தடுத்தாடுற மூடுல தான் இருப்பான். இல்ல மொத 10 ஓவரிலேயே 100 ரன் அடிச்சுப்புட்டானுங்களா? ஃபீல்டிங்க கொஞ்சம் தளர்த்தி ஸ்பின் கொண்டாரலாம். அடிச்சு ஆடுறவனுக்கு திடீர்னு தடுத்தாடுறது கொஞ்சம் கஷ்டம். எப்படியும் தூக்கி அடிப்பான். எல்லா பந்தும் பவுண்டரிய எகிறாது. ஆக இந்த மாதிரி ஆட்டம் இன்னும் பரவசமா இருக்கலாம்னு நம்புறாங்க. இது வெற்றி அடைஞ்சா, இதையே தொடர்றதா உத்தேசம்.
பாப்போம். இந்த மாற்றங்கள் எந்தளவுக்கு கிரிக்கெட்ட இன்னும் எந்தளவுக்கு பரவசமாக்குத்துன்னு??
July 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Dai Vijay,
Unakku office la velaiyey kidayatha. sari sari vishayathukku vaaren...Leave oyunga plan pannikolaa...poravatti ennoda kalyanathukku leave illa athu illantu yemathi podatheyla...yenna velangichaa illaiyaa...unnoda ponsaathikittayum marakkama sollidula...
Post a Comment