Pages

June 08, 2005

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!!

என்னடா ரொம்ப நாளா யாரும் அறிக்கை விடலியே, என்ன ஆச்சு நம்ம அரசியல்வாதிகளுக்கெல்லாம்னு நினைச்சுக்குட்டு இருந்தேன். திடீர்னு அத்வானி விட்டார் பாரு ஒரு அறிக்கை. (பின்ன திடீர்னு விடாம, சொல்லிட்டா விடுவாக) ஜின்னா ஒரு மதச்சார்பற்றவர்னு ஒரு திரியை கொளுத்திப்போட்டுப்புட்டார். ஏன்யா யோவ், ஜின்னாஹ் பொழுது போகாமலா இந்தியாவ பிறிச்சாரு. நாட்டுல அவர யாரும் கண்டுக்கலை. என்னடா, நாம வளர்த்து விட்ட ஆளு இந்த காந்தி, இந்தாளுக்கு நாட்டுல இவ்வளவு மருவாத, நம்மள
எவனும் கண்டுக்கமாட்டேன்றாங்களே அந்தாளுக்கு வவுத்தெறிச்சல். என்ன பண்ணலாம்னு, யோசிச்சப்ப
தான், லார்ட் இர்வின் ( நமக்கெல்லாம், தெரிஞ்ச ஒரே லார்ட், லபக்கு தாஸு தான்!!!) எலேய், உனக்கு ஒரு அடையாளம் வேணும்னா, முஸ்லிம் மக்களுக்காக ஒரு நாடு வேணும்னு கேளுலன்னு ஒண்ணா இருந்த நாட்ட பிரிக்க வழி வகுத்தான். இந்தாளும், இது தான் சரின்னு முஸ்லிம் மக்காக்களெல்லாம், இந்தியாவுல இருந்தா உருப்பட முடியாது, நாங்க பிரிஞ்சு போறோம்னு சொல்லிப்புட்டு பிரிஞ்சாங்க. அவுக நாட்டுல யாரு வேணா வந்து இருங்கப்பான்னா சொன்னாரு. இருக்கற எல்லா ஹிந்துக்களௌயும், எலேய் இனிமே நீங்க இங்க இருக்காதீங்கடான்னு வெரட்டி விட்டானுங்க. அப்படி ஓடி வந்தவரு தானே, இந்த அத்வானி. மனுஷனுக்கு ஏதேனும் Alzeimer நோய் வந்துட்டுதா? ரெண்டு நாட்டுலயும் ஓடுன ரத்த ஆறெல்லாம் மறந்து போச்சா??

நம்மாளு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவுப்பாலத்த பலப்படுத்த போறென்னு பாகிஸ்தான் போனாரு. (உள்ளூர்ல இருக்கற பாலத்தயெல்லாம் விட்டுப்புட்டானுங்க. இதுல அயல் நாடு கூட உறவு பாலத்த பலப்படுத்த போறானுங்களாம்). போனவர் போனோமா, முஷராஃப பாத்தோமான்னு தேமேன்னு வர வேண்டியது தானே. ஜின்னாவோட சமாதிக்கு போயிருக்காறு. நம்மூருக்கு யாரு வந்தாலும், நேர காந்தி சமாதிக்கு கூட்டிட்டு போக மாட்டோ மா, அந்த மாறி, அவுக ஊருலயும் கூட்டிட்டு போயிருக்கானுங்க. (சென்னைக்கு எவனாச்சும் வந்தாக்க எம்.ஜி.ஆர். அண்ணா சமாதிக்கு கூட்டிட்டு போறாங்களான்னு தெரியலை !!!!) போனவரு ஒரு நாலு பூவ அள்ளிப்போட்டோ மா, வந்தோமான்னு இருக்காம, என்ன அறிக்க வேண்டிக்கடக்கு. ஜின்னா ஒரு மதச்சார்பற்ற பாகிஸ்தானத்தான் நிறுவ நினச்சார்ன்னு சொல்லித் தொலக்கணுமா. இந்தாளூக்கு, கடைசி காலத்துல, தான் பொறந்த ஊர்ல வாழணும்னு ஆசை வந்துட்டுதோ என்னவோ. அங்கே ஒரு பிளாட் வாங்கி போட்டு வூடு கட்டலாம்னு நினச்சாரோ என்னவோ!!

சரி இந்தாளுதான், ஏதோ புத்தி கெட்டுப்போய் ஏதோ உளறி இருக்கார்னு விட மாட்டானுங்களா. இந்தாளு எப்படி இப்படி சொல்லலாம்னு ஒரு தகராறு பண்ணணுமா. அவனவன் வூட்டுல தண்ணி கரண்ட் ஒழுங்கா வரமாட்டிகுது. அத விட்டுப்போட்டு 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மனுஷன் மதவாதியா இல்லையான்னு சிண்டப்புடிச்சுக்கிட்டு நிக்கறானுங்க.

ஹிந்துத்வா ஹிந்துத்வான்னு பொலம்பிக்கிட்டுருந்த இந்தாளுக்கு ஜின்னா மதவாதியா இருந்தா என்ன, இல்லைன்னா என்ன. இந்தாளு எதுக்கு மதச்சார்பின்மை பத்தி திடீர்னு கவல. எதுக்கு மதச்சார்பின்மை ஸ்டண்ட் அடிக்கணும். ஆனா ஒரு விஷயம் பாராட்டணும். நம்ம பழய தாத்தா மாறி சொன்ன அறிக்கைக்கு வெளக்கமெல்லாம் குடுக்காம, "எலேய், நான் சொன்னது தான் சரி தான்ல. ஒன்னால என்னல பண்ணமுடியுமோ அத்த பண்ணிக்கோல"ன்னு, மனுஷன் ஸ்டிராங்கா இருக்காரு.

இதெல்லாம் பாக்கும் போது, நம்ம கௌண்ட மணி சொன்ன டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!!

No comments: