Pages

June 07, 2005

நுழைவுத்தேர்வு ரத்து!!!!

அம்மா அடுத்தவாட்டியும் ஆட்சிய புடிக்கறதுக்கு அடிக்கற இன்னொரு பல்டி, தமிழ் நாட்டுல எஞ்சினீரிங் மெடிக்கல் படிப்புக்குண்டான நுழைவுத்தேர்வை ரத்து பண்ணிட்டாங்க. ஏழை எளிய மக்களால, நுழைவுத்தேர்வுல நிறைய மார்க் எடுக்க முடியலையாம். ஏழை எளிய மக்களும் படிக்கணும் தான். ஆனால், அதுக்காக, மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்கற ரகத்துலேர்ந்து, புரிஞ்சு படிக்கற பசங்களை பிரிச்சு காட்டறது இந்த நுழைவுத்தேர்வு தானே?
தமிழ் நாட்டுல 12th ல மார்க் எடுக்கறது ஒரு கஷ்டமே கிடையாது. Question எல்லாம் புஸ்தகத்துலேர்ந்து வந்தாகணும். இல்லைன்னா, எவனாவது கேஸ் போட்டுடுவான். Out of Syllabusன்னு சொல்லி முழு மார்க் கொடுக்கணும்னு கோர்டும் உத்தரவு குடுத்துடும். இதே ஜெயலலிதா அரசு 10-12 வருஷத்துக்கு முன்னாடி, CBSE'ல நிறைய மார்க் போட்டுட்டானுங்க. அதுனால state board'ல படிச்ச பசங்க நிறைய பேர் எஞ்சினீரிங் மெடிக்கல் படிக்க முடியாதுன்னு சொல்லி entrance மார்க் மட்டும் தான் valid'ன்னு சொன்னது. இந்த கூத்துக்கு ஒரு அளவே இல்லையா? இந்த உத்தரவு பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு பெரிய வரப்பிரசாதம். அவளுங்க என்னிக்கு புரிஞ்சு படிச்சாளுங்க. புக்ல என்ன எளவு இருக்கோ அதை அப்படியே உருப்போட்டு, பரீட்சைல வாந்தி எடுத்துதானே மார்க் வாங்குறாளுங்க. இதுனால பசங்களுக்கு ஒரு advantage. இனிமேல், நிறைய பொண்ணுங்க எஞ்சினீரிங் மெடிக்கல் சீட் வாங்குவாளுங்க. College'ல உள்ள ஃபிகர் index எகுரும். பசங்களுக்கெல்லாம் ஒரே ஜகால்டி தான்.

ஒரு மாசம் கஷ்டப்பட்டு படிச்சு, entrance test'ல நிறைய மார்க் வாங்கினவனுங்களெல்லாம் என்ன கேனக்கிறுக்கனுங்களா?? சரி entrance test'க்கு செலுத்தின பணத்த இந்த அரங்கம் refund பண்ணுமா?? ஒரு எளவும் கிடயாது. Entrance test'ல நிறைய மார்க் வாங்கினவங்களுக்கெல்லாம் அல்வா தான்.

கிரமாங்கள்ல இருக்கற ஏழை மக்களும் நிறைய மார்க் வாங்கணும்னா என்ன பண்ணணும்? அவங்களுக்கு நல்ல கோச்சிங் கொடுக்கணும். அவங்களையும் நகரத்து மக்களோட போட்டி போடற அளவுக்கு தயார் பண்ணணும். அதை விட்டுப்போட்டு, entrance test'னால் தான் ஏழை மக்களால சீட்டு வாங்க முடியலைன்னு சொன்னா இது என்ன நியாயம். கணக்குல 10 மார்க் கேள்விக்கு 6 மார்க் step மார்க்ன்னு போட்டே ஆகணும். பதில் தப்பா இருந்தாலுமே, ஒரு பையன், steps எழுதியிருந்தான்னா, அவனுக்கு ஸ்டெப் மார்க் உண்டு. இப்படி மார்க் எடுத்து எஞ்சினீரிங் காலேஜுக்கு போயி, அந்த பையன் எந்த லக்ஷணத்துல படிக்கப்போறான்.

இந்த மாதிரி படிப்பு விஷயத்துல அரசாங்கம் எப்படி தடீர்னு ஒரு முடிவு எடுக்கலாம். சில கல்வியாளர்களோட கலந்தாலோசித்துல இந்த முடிவு எடுத்துருக்கணும். ஏற்கனவே இங்க engineering syllabus எல்லாம் சூப்பரா இருக்கு. இந்த லக்ஷணத்துல படிக்கற மாணவர்களோட தரத்தயும் குறைச்சுட்டா இன்னும் சூப்பரா இருக்கும். என்னவோ பண்ணித்தொலைங்க. பாவம் மாணவர்களோட எதிர் காலத்துல மண்ணடிக்காதீங்க. இப்படி ஏதாவது பண்ணணும்னா, இந்த test எல்லாம் வக்கறதுக்கு முன்னாடி பண்ணித்தொலைங்க. பசங்க லீவுல கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும்.

No comments: