Pages

Showing posts with label புலம்பல்கள். Show all posts
Showing posts with label புலம்பல்கள். Show all posts

July 28, 2008

கூட்டாஞ்சோறு

தசாவதாரம் இரண்டாம் முறை பார்த்தபோது இன்னும் நிறைய ரசிக்க முடிந்தது. சென்ற முறை பார்த்த போது கவனிக்காத வசனங்களை இம்முறை கவனிக்கவும் ரசிக்கவும் முடிந்தது.
உதாரணத்திற்கு, புஷ் பேசும் ஒரு வசனம்.
புஷ் தனது உதவியாளரிடம்: "Could you please explain it to me?"
உதவியாளர்: "Mr. President, it is a bit complicated:
புஷ் : "Don't explain it to me if it is complicated"
இன்னும் அசினையும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் விட்டுக்களையும் ரசிக்க இன்னும் 2 தடவை பார்க்க வேண்டும். அது வரை பெங்களூருவில் படம் ஓட வேண்டும்.

பெங்களூருவில் வெடி குண்டு பற்றிய பீதி அடங்குவதற்கு முன்பாகவே அஹமதாபாத் வெடி குண்டு வெடித்து இன்னும் நெஞ்சில் புளியைக் கரைத்துவிட்டது. அஹமதாபாதிலுள்ள எனது மாமா நலமாகவே இருக்கிறார்.

எல்லாவற்றையும் விட மிக மோசமான கொடுமையான செயல், இலங்கைக்கு எதிராக இந்தியா சந்தித்த படு தோல்வி. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், முரளிதரனும் மென்டிஸும் செய்த சூழ்ச்சிக்கு நிஜமாகவே ஆட்டம் போட்டனர். இனிமேலும் தொடரில் விளையாடாமல், "போங்கடா நீங்களும் உங்க ஸ்பின்னும்" என்று சொல்லிவிட்டு "மற்ற இரண்டு போட்டிகளிலும் நீங்களே ஜெயித்து விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு வந்து விடலாம். ஏதோ அம்பயர் பரிதாபப்பட்டு கையைத் தூக்காமலிருந்தாலும் இந்த மூன்றாவது அம்பயர் வந்து ரொம்பவே படுத்தி விட்டார். முதலில் இந்த அப்பீல் முறையை ஒழித்தாக வேண்டும்.
"ஆமாம், சொல்லறதுல ஒண்ணும் குறைச்சலே இல்லை. அடுத்த மேட்ச் ஆரம்பிக்கட்டும், எந்த தீத்தாலாண்டியோ ஒக்காந்து பேச ஆரம்பிக்கதுலேர்ந்து பார்த்தாகிடும்" என்று என் மேலிடம் புலம்புவதை நான் யருக்கும் சொல்ல மாட்டேன்.
அலுவலகத்தில், சக உழைப்பாளினி(!!!) (அதாங்க colleague) கொடுத்த "மிஸ்டர் கிச்சா" என்ற கதைகளடங்கிய கிரேஸி மோஹன் எழுதிய புத்தகம் படித்தேன். புண்பட்ட நெஞ்சை இப்படித்தான் ஆற்ற வேண்டியிருந்தது. கிச்சா வந்து மூட்டிய கிச்சு கிச்சுவில் விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது.
வாய் விட்டு சிரித்தால் நோய் மட்டும் தான் போகுமா? நம்மை சூழ்ந்த துன்பங்கள் கூட பறந்து போயிடும். கிச்சாவால் இந்திய கிரிக்கெட் வீரர்களைத் திட்டித் தீர்ப்பதை கொஞ்சமேனும் குறைக்க முடிந்தது.
இனிமேலும் இவர்களை வீரர்கள் என்று தான் சொல்ல வேண்டுமா. தமிழில் வேறு வார்த்தைகளே இல்லையா?

July 26, 2008

இனிமேலாவது விழித்துக் கொள்ளட்டும்

உதயகீதம் படத்தில் கௌண்ட மணி தேங்காயில் பாம்ப் என்றொரு புரளியைக் கிளப்பி விடுவார். அதற்கு ஒரு அர்ச்சகர், "கோயில்ல வச்சா. பஸ் ஸ்டாப்புல வச்சா, தியேட்டர்ல வச்சா, இப்படி தேங்காயில பாம்ப் வைக்கலோமோ?" என்று கேட்பார். அதற்கு கௌண்டர், தனக்கேயுரிர்ய நக்கலில் "வச்சுட்டாளே" என்பார்.
அது மாதிரி , "ஜம்முல வச்சா, காஷ்மீர்ல வச்சா, டில்லில வச்சா மும்பையில வச்சா. இப்ப பெங்களூரிலும் வைக்கலோமோ"

"வச்சுட்டாளே" என்று நக்கலிடித்து பதில் சொல்ல முடியவில்லை. குண்டு வெடிப்பின் சேதமென்னவோ பெரியதாக இல்லை. இருந்தாலும், நாம் தினமும் போய்க்கொண்டிருக்கும் இடத்திலேயே பாம்ப் வெடித்திருக்கிறதென்று நினைத்தாலே கிலி ஏற்படுகிறது. இதைத் தான் பாம்ப் வைத்தவன் எதிர்பார்த்தானோ? பாம்ப் வெடித்த கோரமங்களா பஸ் நிறுத்தத்தில், எத்தனையோ முறை என் மனைவியை இறக்கி விட்டிருக்கிறேன். இனி் அதே பேரூந்து நிலையத்தில் அவளை இறக்கி விடும் போது எனக்கு இந்த குண்டு வெடிப்பு தான் நினைவில் வரும்.
இன்னொரு குண்டு வெடித்த இடமான மடிவாலா என் அலுவலகத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. என் நண்பர்கள் நிறைய பேர் அங்கே சென்று மதிய உணவிற்குச் செல்வார்கள். அங்கேயே உள்ள விப்ரோ அலுவலகத்தில் 3 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். ஏதோ ஆண்டவன் கருணையால் குண்டு வெடித்த இடங்களில் எங்கேனும் நான் இல்லை என்று தான் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.
குண்டு வெடிப்பில் பலியான அந்தப் பெயர் அறியாத நபரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நான் நாலமா, என்று விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும், "நாங்கள் எல்லோரும் இங்கு தற்சமயம் நலமாக இருக்கிறோம். தொடர்ந்து நலமாக இருப்பது கடவுள் கையில் தான் இருக்கிறது". அவர் தான் குண்டு வைக்கும் நபர்களின் மனதை மாற்ற வேண்டும். வேறென்னத்தைச் சொல்ல.

தொலைக்காட்சி ஊடகங்கள் ஆருஷி தல்வார் கொலையில் காட்டிய ஆவலை இந்த குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதிலும் காட்டினால், நிஜமாகவே இவர்களுக்கு நாட்டு நலனில் அக்கரையிருக்கிறது என்று ஒற்றுக்கொள்ளலாம்.
கர்னாடகா அரசுக்கு இது ஒரு wake up call. புலி வருது புலி வருது என்று சொல்லியே இவ்வளவு நாள் கடத்தியவர்கள் இன்று புலியை நேரிலேயே பார்த்தாயிற்று. இனிமேலாவது இவர்கள் ஒரு Anti-Terrorist Squad அமைப்பது உசிதம். நேற்று நடந்த குண்டு வெடிப்பின் அளவு மாட்டும் ஜாஸ்தியாகிருந்தால், It is completely unimaginable.

என் மேல் அக்கறை கொண்டு என் நலம் பற்றி விசாரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி........ நன்றி.