Pages

December 08, 2008

வாரணம் ஆயிரம்

ரொம்ப நாளா இதோ வரேன் அதோ வரேன், வரப்போகிறேன் என்று ஜூட் விட்டுக் கொண்டிருந்த வாரணம் ஆயிரம் படத்தை பார்க்க நானும் காயத்ரியிடம், இந்த வாரம் போகலாம் அடுத்த வாரம் போகலாம் என்று தாக்காட்டிக் கொண்டிருந்தது நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இன்று படம் பார்க்கலைன்னா காலவரையற்ற போராட்டம் என்று அறிவித்தபின் என்ன தான் செய்ய முடியும்.

காலையிலேயே போராட்டம் ஆரம்பிக்கும் கிரக நிலைகள் தெரிந்ததால், பிருந்தாவனில் சாப்பிட்டுவிட்டு , லிடோவில் படம் பார்க்கலாம் என்று முடிவானது. 12.45 மணி ஷோவுக்கு 12.44 மணிக்குத் தான் பிருந்தாவனிலிருந்து புறப்பட்டோம். முன்னோரு நூற்றாண்டில் பிருந்தாவனிலிருந்து லிடோ போவதற்கு 5 நிமிஷம் தான் ஆகும். ஆனால் இப்போது பெங்களூரில் பூகோளமே மாறிய பிறகு தியேட்டரைப் போய்ச் சேர 15 நிமிடங்கள் ஆகிவிட்டது.

போறாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்றொரு பழமொழியுண்டு. அதற்கேற்ப ஒரே ஒரு டிக்கட் தான் இருக்கிறது என்று தெரிய வந்தது. அம்மணிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைத் தணிக்க வேறென்ன செய்ய முடியும். அங்கிருந்து 10 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் Innovative Multiplex'க்கு சென்றோம். 1.30’க்கு ஷோ. இவ்வளவு rash'ஆக கார் ஓட்டினதில்லை. நல்ல வேளை அங்கே டிக்கட் கிடைக்க முதலிலிருந்து படம் பார்க்க முடிந்தது.

உலகமே பார்த்து முடித்து விட்ட பிறகு படத்தின் கதையைச் சொல்ல நான் என்ன கேனையனா? தசாவதாரத்தை விட இப்படத்தில் சூர்யா அதிக கெட்-அப் களில் வருகிறார். அதிலும் பள்ளி மாணவனாக வரும் இடத்தில் அவர் உழைப்பு தெரிகிறது. ஒரு 35 வயது நிரம்பிய மனிதரை 15-16 வயது மாணவனாக மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் என்று சொன்னால் காயத்ரி முறைக்கிறாள்.

சமீரா ரெட்டி சுடிதாரில் ஏமாற்றினாலும் ஜீன்ஸில் நன்றாகவே இருக்கிறார். என்ன உயரம் தான் கொஞ்சம் ஜாஸ்தி. அசினைப் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அசினுக்கும் சூர்யாவிற்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போவதால் இனி அவர் சூர்யாவுடன் ஜோடி சேர ஜோ தடை விதித்திருப்பதாக உளவுத்துறை செய்தித் துறை தெரிவிக்கிறது. (தீவிரவதிகள் பற்றி சரியாக உளவு செய்யாத துறை, இனி இது போல் செய்திகள் வெளியிட்டாலாவது உருப்படியாக இருக்கும்.)

படத்தில் நிறைய ஸ்வாரஸ்யமான வசனங்கள். சூர்யா அமெரிக்கன் கன்சுலேட்டில் விசா இண்டர்வியூவில் பேசுவது, சமீரா ரெட்டி வீட்டுக்குப் போய், ”இந்த ஊர்ல படிச்சு, இங்கேயே வேலை பார்த்து, இங்க டேக்ஸ் கட்டினால், நம்ம ஊரு நல்லா இருக்கும். நானும் நல்லா இருப்பேன்ல” என்று வழிகிற காட்சி, ரயிலில் சமீராவைப் பார்த்ததும் கிடார் எடுத்துக் கொண்டு என் இனிய பொன் நிலாவே பாட்டு பாடுவது, இப்படி ஸ்வாரஸ்யமான விஷயங்கள் நிறைய.

சூர்யா தங்கையை சற்று Out of Focus'லேயே காட்டியிருந்தாலும் நன்றாகவே இருக்கிறார். சீரியலில் ரொம்ப கண்ணைக் கசக்காமல் இருந்தால் நாலு பேர் இவரைக் கவனிக்கலாம்.

ரம்யாவோ, திவ்யாவோ, என்ன பெயராக இருந்தாலென்ன, நல்ல தேர்வு. படத்தில் தொய்வு ஏற்படும் போது, பாலைவனத்து ரோஜாவகப் பூத்து, என்னைப் போன்ற இளந்நெஞ்ஜங்களில் T20 ஆடுகிறார். ஒரு நல்ல பாட்டு கொடுத்திருக்கலாம்.

சிம்ரன் பற்றி சொல்லவில்லையென்றால் தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது. தனது பாத்திரத்தை அறிந்து செய்திருக்கிறார். முன்னாள் கனவுக்கன்னியாக இருந்தோமே, இப்படி ஒப்பனை போட்டு கிழவியாக மாற்றிவிட்டார்களே என்று அவர் நினைக்கக்கூடும். ஆனால் பாத்திரத்திக்கேற்ப கலைஞர்களை மாற்றுவதில் தான் ஒரு இயக்குனரின் வெற்றி ஒளிந்திருக்கிறது. அந்த வகையில் கௌதம் மேனன் வெற்றியடைந்திருக்கிறார். ஆனானப் பட்ட கமல்ஹாசனையே தன்னிஷ்டம் போல் இயக்கிவராச்சே.

படத்தின் பெரும் பலம் இசை. சூர்யாவை கிடாரிஸ்டாகக் காட்டுவதால் கிடாரை நன்கு உபயோகப்ப்டுத்தியிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாட்டுக்களும் படத்தோடு பயணிக்கின்றன. எடுத்து விட்டோம் இங்கே சொருகி விடுவோம் என்ற ரகத்தில் எந்தப் பாட்டும் இல்லை. கௌதமுக்கும் ஹாரீசுக்கும் சண்டையாம். பிரிந்து விட்டார்களாம். அடுத்த படட்தில் ரஹ்மான் தான் இசையமைக்க்ப் போகிறாராம். Why would all beautiful things in the world come to an end? மீண்டும் இருவரும் இணை சேர பிரார்த்திப்போம். This pair complements each other very well. ரஹ்மான் ஷங்கர் மணிரத்னம் தவிர யாருக்கும் உருப்படியாக இசையமைத்ததில்லை. கௌதம் தவிர யாரும் ஹாரீசுக்கு Operating Freedom கொடுத்ததில்லை. இதை இருவரும் உணர்ந்தால் நல்லது.

படம் ரொம்ப மெதுவாகப் போகிறது. தவமாய் தவமிருந்து போலிருக்கிறது என்று பல விமர்சனங்கள். இருக்கலாம். இரண்டுமே தந்தைகளுக்காக அர்ப்பணிக்கப் பட்ட படம். ஆனால் எந்தவொரு இடத்திலும் கூட ஒன்றில் மேல் இன்னொன்றின் சாயல் இல்லை. ஆங்கிலத்தில் நிறைய உரயாடல்கள், இந்தப் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கொடுக்கக் கூடாது என்று கூச்சல் போடும் ஆட்டு மந்தைகளுக்கு நல்ல ரசனை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அருமையான ஆஹா ஓஹோ படமாக இல்லாவிட்டாலும், சூர்யாவின் உழைப்பிற்காகவும், ஜீன்ஸ் போட்ட சமீராவிற்காகவும், திவ்யாவிற்காகவும், முன் பாதி சிம்ரனுக்காகவும், இன்னொரு முறை இப்படத்தை low cost budget’ல் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கிறாள் காயத்ரி. எதற்காக இன்னொரு அறிவிக்கப்படாத காலவரையற்றப் போராட்டத்தை சந்திக்க வேண்டும். போனால் போகிறது. முடிந்தால் அடுத்த வாரம் பார்த்துத் தொலைப்போம்.

56 comments:

மேவி... said...

me first

ths time

மேவி... said...

ya.
i was flying in the sky when i again saw simran in a duet. for the time being i was there in the song in the place of surya for time being.
the director might have given a item song for simran. he he he
(habits die hard)
because i passed +2 by watching simran songs oly; it used motivate me a lot.
sameera reddy rocks with her smile.
i too applied in university of california for MS but.....
tht university lost a good student like me (he he he)
"kuthu" divya might hav got some amount for not acting in the movie.

"சூர்யா தங்கையை சற்று Out of Focus'லேயே காட்டியிருந்தாலும் நன்றாகவே இருக்கிறார்"
she is th girl who comes in one of th vijay tv serial.

for Surya dfinitly ths movie is a brickstone sorry milestone in his "courier".

director made simran to sit in dog van. i feel sorry for it. she is my kannavu panni sorry kanni.

harris music really rocks. his songs always find a place in my ipod.

தமிழ் said...

நேற்று தான் நானும் படம் பார்த்தேன்.
நல்ல படத்தை பார்த்த மன நிறைவு

மேவி... said...

after seeing this movie i have decided to build a temple for the chudidar angel sameera reddy in pittsburgh near to venkateswara temple.

those who wish to donate for ths cause; just go to near by temple and BANG YOUR HEAD IN THE WALL THERE.

anyways its a good movie to be seen without a girl by your side.

முகுந்தன் said...

//இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் //

அடுத்த படத்துல சூர்யா பத்து வயசு பையனா நடிக்க இருக்கிறார்.
நீங்கள் தான் டூப் :))

//முன்னாள் கனவுக்கன்னியாக இருந்தோமே, இப்படி ஒப்பனை போட்டு கிழவியாக மாற்றிவிட்டார்களே என்று அவர் நினைக்கக்கூடும்.//

மேக்கப் இல்லன்னா இன்னும் கிழவியா தெரிவாரோ என்னமோ?

Karthik said...

Dialogues are cute.. Songs are beautiful.. Surya's amazing..

kanagu said...

என்னங்க ஒரு சுமாரான படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் கொடுத்து இருக்கீங்க..

Vijay said...

\\i was flying in the sky when i again saw simran in a duet. for the time being i was there in the song in the place of surya for time being.\\
Hahaha. Same blood

\\because i passed +2 by watching simran songs oly; it used motivate me a lot.\\

Die Hard Simran Fan :-)

Vijay said...

\\ திகழ்மிளிர் said...
நேற்று தான் நானும் படம் பார்த்தேன்.
நல்ல படத்தை பார்த்த மன நிறைவு\\

எனக்கும் அதே மன நிறைவு
இருந்தது. வருகைக்கு ரொம்ப நன்றி திகழ்..

Vijay said...

\\ MayVee said...
i have decided to build a temple for the chudidar angel sameera reddy
those who wish to donate for ths cause; just go to near by temple and BANG YOUR HEAD IN THE WALL THERE.\\

என் நன்கொடையையும் நீங்களே கொடுத்துடுங்களேன் :-)

Vijay said...

\\முகுந்தன் said...
அடுத்த படத்துல சூர்யா பத்து வயசு பையனா நடிக்க இருக்கிறார்.
நீங்கள் தான் டூப் :)) \\

என் மனைவி கேட்டால் உங்களுக்கு இரண்டு அடி குரியரில் அனுப்பி வைப்பாள்

Anonymous said...

நல்லா வர்ணிச்சு இருக்கீங்க...இரசிப்புத்தன்மையை சொன்னேன் :-)

Vijay said...

\\Dialogues are cute.. Songs are beautiful.. Surya's amazing..\\

YUp. Did you see the movie on first day first show?

Vijay said...

\\ kanagu said...
என்னங்க ஒரு சுமாரான படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் கொடுத்து இருக்கீங்க\\

ஆஹா ஓஹோ படம் இல்லைன்னு சொல்லியிருக்கேனே பார்க்கலியா. ஆனா சூர்யாவின் உழைப்பும் ஒளிப்பதிவும் இசையும் நல்லா இருப்பதால் ரொம்ப பிடித்திருக்கிறது

Vijay said...

\\ இனியவள் புனிதா said...
நல்லா வர்ணிச்சு இருக்கீங்க...இரசிப்புத்தன்மையை சொன்னேன் :-)\\

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புனிதா. நான் படத்தைத் தானே வர்ணிச்சிருக்கேன்.வேறெதையும் வர்ணிக்கலியே :-)

மேவி... said...

"என் நன்கொடையையும் நீங்களே கொடுத்துடுங்களேன் :-) "

ok done basu.

all roads lead to simran's house.
he he he he

Divyapriya said...

//அருமையான ஆஹா ஓஹோ படமாக இல்லாவிட்டாலும், சூர்யாவின் உழைப்பிற்காகவும், ஜீன்ஸ் போட்ட சமீராவிற்காகவும், திவ்யாவிற்காகவும், முன் பாதி சிம்ரனுக்காகவும், இன்னொரு முறை இப்படத்தை low cost budget’ல் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கிறாள் காயத்ரி.//



நானும் படம் பாத்துட்டு இதயே தான் நினச்சேன் :)

தாரணி பிரியா said...

சூரியா பிரமாதப்படுத்தி இருக்கிறார்ன்னுதான் எனக்கு தோணுது. நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் நேருக்கு நேர் படம் பார்த்துட்டு இந்த பையனுக்கு பதிலா சிவக்குமார் சாரே நடிச்சு இருக்கலாம் கமெண்ட் அடிச்சோம். ஆனா வாரணம் ஆயிரத்தில சான்ஸே இல்லை சூர்யா கலக்கிட்டார்.

சூரியாவுக்காக ஒரு தடவை, சிம்ரன், சமீரா, திவ்யாவுக்காக ஒரு தடவை இப்படி பார்த்துட்டே இருக்கலாம்.

ம் ஹாரிஸ் இல்லாத கெளதம் படம் எப்படி இருக்க போகுதுன்னு தெரியுலை பார்ப்போம்.

தாரணி பிரியா said...

//இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் என்று சொன்னால் காயத்ரி முறைக்கிறாள்.//

அடிக்காம விட்டாங்களேன்னு சந்தோஷப்படுங்க‌

புதியவன் said...

//படத்தில் நிறைய ஸ்வாரஸ்யமான வசனங்கள். சூர்யா அமெரிக்கன் கன்சுலேட்டில் விசா இண்டர்வியூவில் பேசுவது, சமீரா ரெட்டி வீட்டுக்குப் போய், ”இந்த ஊர்ல படிச்சு, இங்கேயே வேலை பார்த்து, இங்க டேக்ஸ் கட்டினால், நம்ம ஊரு நல்லா இருக்கும். நானும் நல்லா இருப்பேன்ல” என்று வழிகிற காட்சி, ரயிலில் சமீராவைப் பார்த்ததும் கிடார் எடுத்துக் கொண்டு என் இனிய பொன் நிலாவே பாட்டு பாடுவது, இப்படி ஸ்வாரஸ்யமான விஷயங்கள் நிறைய.//

படத்தில் சூர்யாவின் குறும்புகள் ரசிக்கக் கூடியவை...

சமீரா தான் உணர்ந்த காதலை சொல்லும் விதம்
அழகான கவிதை...

அனல்மேலே பனித்துளி பாடல் அருமை...

முகுந்தன் said...

//என் மனைவி கேட்டால் உங்களுக்கு இரண்டு அடி குரியரில் அனுப்பி வைப்பாள் //

எனக்கு பதிலா நீங்களே வாங்கிக்கோங்க :))

You Know Phoo said...

//இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் என்று சொன்னால் காயத்ரி முறைக்கிறாள்.//

Appa rolrku correcta irukkum!!

//இந்த ஊர்ல படிச்சு, இங்கேயே வேலை பார்த்து, இங்க டேக்ஸ் கட்டினால், நம்ம ஊரு நல்லா இருக்கும். நானும் நல்லா இருப்பேன்ல//

mahajangale, ilaingargale, ilangigale.. kethukoonga..


//சூர்யா தங்கையை சற்று Out of Focus'லேயே காட்டியிருந்தாலும் நன்றாகவே இருக்கிறார்.//

Ethana Pearu kilampirikeenga??


//ன்னைப் போன்ற இளந்நெஞ்ஜங்களில்//

ennadhu?? Sema comedy sir neenga.. REPEATUUU!!!


//ரஹ்மான் ஷங்கர் மணிரத்னம் தவிர யாருக்கும் உருப்படியாக இசையமைத்ததில்லை//

Jillunu oru kaadal, Kaadal desam, Duet, Pudiya Mugam paathu kekalaya thalaivaa??? AR fan idhai kadumaiyyaga kanikiren.. yaarange.. Vijay annaku Perarasu paathu podunga!!!

You Know Phoo said...

innoru thadava warching ah?? Ennadu idhu?? LollU karthik thaan na.. Account maathi commentiten.. Adjust seisunaaru!!

Anonymous said...

//ஆனா சூர்யாவின் உழைப்பும் ஒளிப்பதிவும் இசையும் நல்லா இருப்பதால் ரொம்ப பிடித்திருக்கிறது //

ஆனால் அது மட்டுமே ஒரு படத்தை வெற்றி படம்மாக்கி விடாதுங்க.. எனக்கு இன்னும் கூட வருத்தமா இருக்கு.. இப்படி ஒரு படத்துக்கு இவ்வளவு நல்ல இசை கிடைத்துள்ளதே என்று.

Vijay said...

\\ Divyapriya said...
நானும் படம் பாத்துட்டு இதயே தான் நினச்சேன் :)\\
அப்ப இனொரு தடவை பார்க்கப் போறீங்க!!!

Vijay said...

\\ தாரணி பிரியா said...
நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் நேருக்கு நேர் படம் பார்த்துட்டு இந்த பையனுக்கு பதிலா சிவக்குமார் சாரே நடிச்சு இருக்கலாம் கமெண்ட் அடிச்சோம். ஆனா வாரணம் ஆயிரத்தில சான்ஸே இல்லை சூர்யா கலக்கிட்டார்.\\

நேருக்கு நேர் சூர்ய சிம்ரன் இருவருக்குமே முதல்படம். அந்தப் படத்திற்கு இந்தப் படத்திற்கும் எவ்வளவு வித்தியாசம், இருவரது நடிப்பிலும்.


\\ம் ஹாரிஸ் இல்லாத கெளதம் படம் எப்படி இருக்க போகுதுன்னு தெரியுலை பார்ப்போம்.\\
இந்தப் படத்திலேயே கூட பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாட்டு கூட படலை. இவங்க கூட்டணியில் எப்போதுமே ஒரு பாட்டு அவங்களுக்கு உண்டு. அது படத்துல இல்லை.

Vijay said...

\\புதியவன் said...
படத்தில் சூர்யாவின் குறும்புகள் ரசிக்கக் கூடியவை...

சமீரா தான் உணர்ந்த காதலை சொல்லும் விதம்
அழகான கவிதை...

அனல்மேலே பனித்துளி பாடல் அருமை...\\

வருகைக்கு ரொம்ப நன்றி புதியவன். அனல் மேலே பனித்துளி கூட நல்ல பாட்டு தான். சுதா ரகுனாதன் பாடியிருக்கிறார். ஆனால் படத்தின் பின் பாதியில் வருவதால், நிறைய பேர் கவனிக்கமாட்டார்கள்.

Vijay said...

\\ Karthik said...
Jillunu oru kaadal, Kaadal desam, Duet, Pudiya Mugam paathu kekalaya thalaivaa??? AR fan idhai kadumaiyyaga kanikiren.. yaarange.. Vijay annaku Perarasu paathu podunga!!!\\

கார்த்திக், ஜில்லுனு ஒரு காதல் படத்துல அன்பே வா பாட்டு தவிர வேறெதும் உருப்படியான பாட்டு கிடையாது. மேலும் நான் இசையென்று சொல்வது, வெறும் பாட்டுக்கள் மட்டுமே இல்லை. பின்னணி இசையும் ஒரு படத்தின் தரத்தை மாற்ற முடியும். அந்த வகையில் ரஹ்மான் ஷங்கர் மணிரத்னம் தவிர யாருக்கும் பின்னணி இசை செய்வது கிடையாது. புதிய முகம் டூயட் எல்லாம் அவர் வளர்ந்து வந்த கால கட்டத்தில் செய்த படங்கள். அதே dedication இப்போது தமிழ் படங்கள் அவருக்கு இல்லை என்று தான் சொல்வேன். ஒரு கட்டத்தில் எல்லா இசையமைப்பாளர்களும் இந்த நிலையை எய்தி விடுகிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

Vijay said...

\\ kanaguonline said...
எனக்கு இன்னும் கூட வருத்தமா இருக்கு.. இப்படி ஒரு படத்துக்கு இவ்வளவு நல்ல இசை கிடைத்துள்ளதே என்று.\\

கனகு, நான் மீண்டும் சொல்கிறேன். இது ஆஹா ஓஹோ படம் இல்லை. ஆனால் முகம் சுளிக்க வைக்காத படம்.
The most interesting aspect of Human mind is the difference of taste. அது தான் வாழ்க்கையை ரொம்ப இண்டெரஸ்டிங்காக ஆக்குகிறது. உங்கள் ரசனை முற்றிலும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. என் ரசனை உங்களுக்கு முற்றிலும் பிடித்திருக்கணும் என்ற கட்டாயமும் இல்லை.

Anonymous said...

enadhu கருத்துக்கள் உங்களது மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

Vijay said...

\\ kanaguonline said...
enadhu கருத்துக்கள் உங்களது மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\\


ஐயையோ கனகு, நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. I am not at all ”punpattified” with your comments. எனது கருத்து என்னவென்றால், ” இப்படி ஒரு படத்துக்கு இவ்வளவு நல்ல இசை கிடைத்துள்ளதே” என்று நீங்கள் சொல்லியிருந்ததால் நான் விளக்கம் கொடுத்தேன்.



இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருக்கலாம், பிடிக்காமல் போகலாம். அது உங்களுடைய சுய விருப்பம். இதைத்தான் Greatness of Human மிண்ட் என்று குறிப்பிட்டிருந்தேன்.

Please don't post such things!

You have really hurt me like posting such a comment. Just kidding.
You can vigorously refute my thoughts when you comment.

”எலேய் வெண்ணை, என்னல எளுதியிருக்க. இது ஓரு படம் இத்தப்பத்தி ஒரு பதிவு, அதுக்கு நான் வேற பின்னூட்டம் போட்டு, மொத்தத்துல 15 நிமிஷம் வேஸ்ட் “என்று நீங்கள் எழுதியிருந்தால் கூட எனக்கு சந்தோஷமே. :-)

Karthik said...

//”எலேய் வெண்ணை, என்னல எளுதியிருக்க. இது ஓரு படம் இத்தப்பத்தி ஒரு பதிவு, அதுக்கு நான் வேற பின்னூட்டம் போட்டு, மொத்தத்துல 15 நிமிஷம் வேஸ்ட் “என்று நீங்கள் எழுதியிருந்தால் கூட எனக்கு சந்தோஷமே. :-)

Ha..ha. Point taken.
:P

Karthik said...

Idhu piriyyira season polanga...

u1 selva ku kodutaaru alwa

Goutam harris kaatitaaru taata

aana U1 selva ilama ennala panna mudhiyumnu Prove pannirukaar.. Pala padangaluku nalla musiqum pothurukkar..

Harris innum prove pannanum (Ghajini matrume vetri)

MSK / Saravana said...

இவ்ளோ அழகான Template இதுவரை நான் பார்த்ததே இல்லீங்க்ணா.. செம அழகு..

MSK / Saravana said...

//இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் என்று சொன்னால் காயத்ரி முறைக்கிறாள்..//

இருந்தாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம்.. :)

MSK / Saravana said...

//சமீரா ரெட்டி சுடிதாரில் ஏமாற்றினாலும் ஜீன்ஸில் நன்றாகவே இருக்கிறார். //

ரசிக்கிறேன்.. :)

MSK / Saravana said...

//கௌதமுக்கும் ஹாரீசுக்கும் சண்டையாம். பிரிந்து விட்டார்களாம். அடுத்த படட்தில் ரஹ்மான் தான் இசையமைக்க்ப் போகிறாராம். Why would all beautiful things in the world come to an end? மீண்டும் இருவரும் இணை சேர பிரார்த்திப்போம். This pair complements each other very well. ரஹ்மான் ஷங்கர் மணிரத்னம் தவிர யாருக்கும் உருப்படியாக இசையமைத்ததில்லை. கௌதம் தவிர யாரும் ஹாரீசுக்கு Operating Freedom கொடுத்ததில்லை. இதை இருவரும் உணர்ந்தால் நல்லது.//

rippeettu.. :)

MSK / Saravana said...

38 :)

MSK / Saravana said...

39 :)

MSK / Saravana said...

40
40
40
40

Poornima Saravana kumar said...

hi
hi
hi

Poornima Saravana kumar said...

//படத்தின் பெரும் பலம் இசை. சூர்யாவை கிடாரிஸ்டாகக் காட்டுவதால் கிடாரை நன்கு உபயோகப்ப்டுத்தியிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாட்டுக்களும் படத்தோடு பயணிக்கின்றன. எடுத்து விட்டோம் இங்கே சொருகி விடுவோம் என்ற ரகத்தில் எந்தப் பாட்டும் இல்லை.//

சரியா சொன்னிங்க விஜய் அனைத்து பாடல்களும் அவ்ளோ அழகா அமைந்திருக்கு. அதிலும் "அஞ்சலே" பாடல் சான்சே இல்லங்க!!

Poornima Saravana kumar said...

//கௌதமுக்கும் ஹாரீசுக்கும் சண்டையாம். பிரிந்து விட்டார்களாம்//

சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு!!

Poornima Saravana kumar said...

//வாரணம் ஆயிரம் படத்தை பார்க்க நானும் காயத்ரியிடம், இந்த வாரம் போகலாம் அடுத்த வாரம் போகலாம் என்று தாக்காட்டிக் கொண்டிருந்தது நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது//

வீட்டம்மாவே கொஞ்சம் நல்லாவே கவனிங்கோ:))

Poornima Saravana kumar said...

//இன்று படம் பார்க்கலைன்னா காலவரையற்ற போராட்டம் என்று அறிவித்தபின் என்ன தான் செய்ய முடியும்.
//

போட்டு தாக்குங்க காயத்ரி!!

Poornima Saravana kumar said...

ஹை நான் தான் 45..

Poornima Saravana kumar said...

படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு :))

Poornima Saravana kumar said...

//இந்த ரோலுக்கு டூப் கேட்டிருந்தால், நானே போயிருக்கலாம் //

எதற்கு இந்த கொலவெறி??

Poornima Saravana kumar said...

// kanaguonline said...
//ஆனா சூர்யாவின் உழைப்பும் ஒளிப்பதிவும் இசையும் நல்லா இருப்பதால் ரொம்ப பிடித்திருக்கிறது //


//ஆனால் அது மட்டுமே ஒரு படத்தை வெற்றி படம்மாக்கி விடாதுங்க.. எனக்கு இன்னும் கூட வருத்தமா இருக்கு.. இப்படி ஒரு படத்துக்கு இவ்வளவு நல்ல இசை கிடைத்துள்ளதே என்று.//

உங்க பேச்சு கா :(

Poornima Saravana kumar said...

me the 50.....

Divya said...

51.....மொய் வைச்சுடுறேன்:))

தமிழ் தோழி said...

//PoornimaSaran said...
//கௌதமுக்கும் ஹாரீசுக்கும் சண்டையாம். பிரிந்து விட்டார்களாம்//

சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு!!///

ஆமா யெக்கா

Vijay said...

\\ Divya said...
51.....மொய் வைச்சுடுறேன்:))\\

51ஆவதா மொய் வைச்சதுக்கு ரொம்ப நன்றி.

Vijay said...

\\ தமிழ் தோழி said...
//PoornimaSaran said...
//கௌதமுக்கும் ஹாரீசுக்கும் சண்டையாம். பிரிந்து விட்டார்களாம்//

சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு!!///

ஆமா யெக்கா\\

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் தோழி :-)

கார்த்திகா said...

Cinema-vai vida neelama irukkunna review. :)

கார்த்திகா said...

Review-va vida neelam comments list. En comment sariya vandhirukka-nu paakara asaiyai vittuttu 2nd comment podaren. :(