Pages

October 30, 2007

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்??

அரசியல்வாதிகளையும் சினிமா நடிகர்களையும் கடவுளுக்கு நிகராக மதித்து வணங்கும் கேவலமான கலாச்சாரம், நமது நாட்டைத்தவிர வேறெங்கும் காண முடியாது. அதுவும் அரசியல் தொ(கு)ண்டர்கள் தனது தலைவர்களுக்கு செய்யும் மரியாதை (கொஞ்சம் கேவலமா சொல்லணும்னா "காக்கா பிடி") அடிமைத் தனத்தின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பது பழமொழி. இதற்கு மாற்றாக "அரசியல்வாதி வருவார்(ன்) பின்னே; தொ(கு)ண்டர்களின் வாழ்க கோஷம் வரும் முன்னே" என்று சொல்லலாம்.

இந்த அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் இந்த வாழ்த்தொலி கேட்காமலிருக்கவே முடியாது போலும். எங்கு போனாலும் ஒரு தொண்டர் படை கூடவே வேண்டும். கட்சியின் அடிமட்ட வட்டச் செயலாளரிலிருந்து கட்சியின் தலைவர் முதல் அவரவர் வசதிக்கேற்ப தொண்டர் படை உண்டு. ஒரு அரசியல்வாதி எழும் முதல் இரவு உரங்கச் செல்லும் வரை தனது கட்சியாளர்களின் கோஷம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.


இந்த அரசியல் தொண்டர்களுக்கு தனது கட்சித் தலைவனே கடவுள். தனது குடும்பம் எக்கேடு கெட்டுப் போனாலும் அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், தலைவரின் குடும்பம் தழைக்க வேண்டும். தனது மனைவி மக்களின் பிறந்த நாட்கள் அவன் நினைவில் இருக்காது. ஆனால் தலவரின் மைத்துணன் பிறந்த நாள் ஒரு வாரம் முன்பாகவே அவன் மூளையில் உதித்து விடும். மனைவியின் பிறந்த நாளன்று அவளுக்கு ஒரு முழ பூ வாங்கிக் கொடுக்க காசிருக்காது. ஆனால் தலைவனின் வப்பாட்டியின் (மன்னிச்சுக்கோங்க! என் வயித்தெறிச்சல் இப்படிப்பட்ட வார்த்தைகளெல்லாம் வந்து தொலைக்கிறது) பிறந்த நாளுக்கு கடன் வாங்கி கட் வைத்து, பாலபிஷேகம் செய்வான். தந்தையின் சொல் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கும். ஆனால் தலைவனின் சொல் மந்திரமாகும். தலைவனுக்காக உயிரை விடும் கேவலமான எண்ணமும் நமது தொண்டர்களிடையே உண்டு.

அடிமைத்தனத்தை 60 ஆண்டுகளுக்கு முன் தகர்த்தெறிந்த நமது நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் அடிமைகள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட அடிமைகள் இருப்பது தான் ஒவ்வொரு அரசியவாதியின் பலம். இவர்கள் அடிமையாக இருக்கும் வரை தான் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய முடியும். இந்த அடிமைத்தனத்தின் நதி மூலம் ரிஷி மூலம் என்ன?

நமது நாட்டில் மன்னராட்சி நிலவ வந்த காலத்திலிருந்தே, இப்படி அடிமைத்தனத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பண்டைய காலத்து மக்கள், மன்னரை கடவுளுக்கு நிகராக வணங்கினர். மன்னனும் மக்கள் சேவை மகேசன் சேவை என்று நினைத்த காலம் அது.

ஒரு மன்னன் ஒரு நாட்டை அபகரித்து அந்நாட்டில் வெற்றி நடை செய்யும் போது, மன்னனை ஆதரித்தால் தான், தங்களால் அமைதியாக வாழ முடியும் என்பதை மக்கள் நங்கு அறிந்திருந்தனர். ஆதலால் எந்த மன்னன் தங்களது நாட்டை ஆண்டாலும் அவனுக்கு வாழ்க கோஷம் போட்டே பழகிக்கொண்டனர். இப்படி ஆரம்பித்தது தான், இந்த கோஷம் போடும் பழக்கம். இப்படி தோன்றியது தான் இந்த அடிமைத்தனப் போக்கு.

பிறகு நம் மன்னர்களை புகழ்ந்து பாடிய புலவர்கள். இப்புலவர்களுக்கு மன்னர்களை குஷிப்படுத்தினால்தான், அவர்களுக்கு வரும்படி. தான் கற்ற கல்வியை, தனது புலமையை, ஒரு தனி மனித வழிபாட்டிற்காகப் பயன் படுத்தினர். ஆக ஆட்சியில் இருப்பவனை ஒரு கடவுளாக நினைத்து, தன்னை கடவுளின் அடிமையாக பாவித்து, இந்த அடிமைத்தனத்திற்கு வித்திட்டனர்.

பின்னர் வந்த மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும், நமது இந்த அடிமைப் போக்கை நன்றாக பயன் படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நாம் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுக்காதது தான்.

இப்படி காலம் காலமாக ஊறிய இந்த அடிமைத்தனம், இன்றும் வெகுவான நம் மக்களின் மனதிலே ஊறிக்கிடக்கிறது. அது தான் அவர்களை, ஒரு அரசியல்வாதியையோ சினிமா நடிகனையோ கடவுளுக்கு நிகராக எண்ண வைக்கிறது?

இந்த அடிமைத்தனம் அரசியல் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் இருப்பது தான் மனதை உறைய வைக்கும் உண்மை. இன்று மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் எல்லோருமே ஒரு விதமான அடிமைகள் தான். மென் பொருள் தயாரிப்பு இந்தியாவிலிருந்து நடப்பதால் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணச்செலவை குறைக்கின்றனர். இந்தியாவின் மேலுள்ள எந்த மோகத்திலும் அவர்கள் இந்த வேலையை இந்தியாவிற்கு அனுப்பிவிடவில்லை. இதனால், ஏராளமான நமது மக்களுக்கு வேலை கிடைத்தது உண்மை தான். ஆனால், வெளிநாட்டிலுள்ள client என்ன சொல்கிறானோ அதுவே வேத மந்திரம். அவன் நம்மை இரவு நேர conference 'க்கு அழைத்தால் நாம் இருந்து தான் ஆக வேண்டும். அவன் இரவு வெகு நேரம் அலுவலகத்தில் இருந்து விட மாட்டான். ஆனால் நாம் இருந்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவன் client. நமக்கு தீபாவளி பொங்கல் என்றாலும், நமது அரசு விடுமுறை அளித்திருந்தாலும், அப்பண்டிகளைக் கொண்டாட அவனிடம் ஒப்புதல் வாங்க வாங்க வேண்டும். நீ இந்த வார இறுதியில் தீபாவளி கொண்டாடிக்கொள் என்று அவன் சொன்னாலும் அதற்கு மறு பேச்சு கிடையாது. "அப்படியே ஆகட்டுங்க" என்று தலையாட்ட வேண்டும். இதையும் அடித்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது?

ஏன் நமக்கிந்த அடிமைத்தனம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?


3 comments:

gayathre said...

Hi Vijay,
I appreciate ur thought.but the downside is that all youngsters of today(including us)are more behind the"I.T.dream".we are interested in these glamorous,high paying jobs,abroad trips,western work culture etc.,The number of people aspiring for Indian Civil Services or other government jobs,that are not so attractive, is very,very less.The society also worships the first kind and it has become the norm.The government policies also play a significant role in this.But u might know my cousin Nagarajan,2005,IAS topper and he had to undergo a lot of struggle to achieve this,when most of his friends were in this "high-paying"software jobs or studying abroad.but his desire to serve his country paid at last.i dont know how much of a change he can bring by himself but i salute his passion.we need more such guys to realize a really "free india".

Unknown said...

Vijay
Good Narration ...
Among the all, the final paragraph is really makes the final touch ...

Good Work!! Keep It Up

Jay

Anonymous said...

Hi da,

Konjam, overa tension ahiirukkirai ena ninaikkiran. I agree with you on most of the issues. I think the fundamental issue is about education and opportunity for a good life. No educated fellow will go behind politician/actor and shout for money. How many rasikar mandram are there in the cities. mostly you will see only in the rural areas.
About the IT adimai - It is the attitude of the Managers above you, who have cultivated this Habit. It is time we change this. We are no more doing cheap jobs. We are delivering best of the work. We can command them and get off days if we need and we dont have to take calls everytime in the night only.

Irshadh