Pages

September 20, 2007

இயற்கையை அழித்திடலாகுமா


இன்று நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் விஷயம் ராமர் பாலத்தை உடைக்கலாகாது என்பது தான். இதை கலாச்சாரச் சின்னம் வேறு சொல்கிறார்கள். தி.மு.க அரசு ஹிந்துக்கள் மேல் உள்ள த்வேஷத்தில் இந்த பாலத்தை உடைத்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். ராமர் என்ன கொத்தனாரா என்ற கேவலமான அறிக்கை வேறு.





சரி, இந்த ராமர் பாலப் பிரச்னை எங்கிருந்து திடீரென்று முளைத்தது?கீழை நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் தமிழகத் துறைமுகங்களுக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இந்த திட்டத்தினால் தமிழகத்தில் வர்த்தகம் பெருகும், வருமானமும் பெருகும் என்ற எண்ணத்தில், பாக் ஜலசந்தியை ஆழப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த திட்டம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு புறமிருக்க இத்திட்டட்தினால் யாதொரு பயனுமில்லை என்று ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இப்பாலத்தை உடைக்கக் கூடாதென்று சொல்பர்கள், இத்திட்டம் தொடங்கும் போது எங்கு போனார்கள்? இது ராமர் கட்டியது தான் என்று சொல்கிறது ஒரு கும்பல். ராமர் என்ன கொத்தனாரா என்று (கேவலமான) கேட்கிறது மற்றொரு கும்பல். இவ்விரண்டிற்கும் இடையே மாடிக்கொண்டு இரண்டு உயிர்கள் வேறு பரிதாபமாக பரிபோயின.


ஆனால் எல்லோரும் மறந்து போனதொரு விஷயம், கடலை ஆழ்படுத்தும் செயல். மனித குலம் தோன்றிய நாள் முதலே மனிதனுக்கு பெரிய விந்தையாக இருந்து வருவது காற்று, ஆகாயம், நெருப்பு, நிலம் மற்றும் நீர். ஆதலால் தான் இதை ஐம்பூதங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உலகிலுள்ள எல்லா பொருளும் இவற்றிலிருந்து தான் வந்ததென்று நம் முன்னோர்கள் கருதினர். இதில் ஆத்திகமோ நாத்திகமோ இல்லை. ஆதலால் தான் மனிதன் இந்த சக்திகளுக்கு மனித உருவம் கொடுத்து வணங்கலானான். இயற்கையை வணங்குவது தவறல்லவே.


தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில் கப்பல்கள் செல்லுமளவு ஆழமில்லாதது தமிழகத்திற்கும் நாட்டுக்கும் நல்லதாககூட இருக்கலாமே. இந்த ஜலசந்தியை ஆழப்படுத்தினால், இந்த கடற்பகுதி சர்வ்வதேச கடல் பகுதியாகிவிடும். அமெரிக்க உளவுத்துறை இந்திய கடற்பகுதிகளை வேவு பார்க்க நாமே வசதி செய்து கொடுக்கிறோம்.
நாம் ஏன் இயற்கையின் நியதியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? இப்பகுதியில் ஏற்கனவே சுனாமி வந்து பேரழிவை ஒன்றை ஏற்படுத்திச் சென்று விட்டது. இன்னமும் தமிழக கடற்கறையோரம் கடல் கொந்தளித்துக்கொன்டிருக்கிறது. அமைதியாய் இருக்கும் என்னை ஏண்டா சீண்டுகிறீர்கள் என்று கடல் சொல்வது போல் உள்ளது.
ராமர் பாலம் (அல்லது ஆதாம் பாலமோ) இயற்கையாகப் படைத்த ஒரு பாறை என்றால், அதை ஏன் உடைத்திட இவ்வலவு நாட்டம் காட்ட வேண்டும். சில நாட்களுக்கு முன் பெங்களூர் அருகே ஷிவ சமுத்திரம் என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு காவிரிக்கு குறுக்கே இரண்டு பாலங்கள். ஒன்று இன்றைய தொழில் நுட்பத்து வைத்து, குறைந்த தொலைவில் கவிரிக்கு குறுக்கே ஒரு பாலம். அங்கிருந்து சில தொலைவில், பல வருடங்களு முன் கற்களால் கட்டப்பட்ட இன்னொரு பாலம். இதில் ஸ்வாரஸ்யமான இஷயம் என்னவென்றால், அப்பாலம் சற்றே வளைந்து சென்றது. அதைக்கட்டியவர்கள், காவிரி எங்கெல்லாம் ஆழம் குறைவாகவும், ஆற்றின் போக்கு சற்றே குறைவாக இருந்ததோ அந்த இடஙளின் வழியே பாலத்தை அமைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினரோ, ஆற்றின் போக்கை எதிர்த்து பாலத்தைக் கட்டியிருந்தனர். பழைய பாலத்தைப் பார்க்கும் போது, "காவிரி அன்னையே, உன்னை வணங்குகிறேன். உன் போக்கிற்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல், நான் பாலத்தைக் கட்டுகிறேன்" என்று மனிதன் கூருவது போல் உள்ளது. அன்றைய மக்கள் இயற்கையை வணங்கினர். இன்றைய தலைமுறையினர் இயற்கையை எதிர்க்கின்றனர்.

இந்த பாழாப்போன திருவள்ளுவர் இயற்கயின் போக்கை மாற்றக்கூடாதுன்னு ஏதாவது குறள் எழுதித் தொலைத்திருக்கக் கூடாதா?
மனிதர்களே, இயற்கையை வெல்ல நினைத்தோமேயேனால், இயற்கை நம்மை அழித்து விடும்

2 comments:

gayathre said...

hi vijay,
its all totally political and no politician seems to have the knowledge or compassion to think abt the long term effects on the environment or mankind.they just want to be quoted in the headlines.There must be a total reform in the system,to bring in young and passionate minds.according to me,only that can save us.

Unknown said...

Hello Vijay

Really you have written a vary good analysis over Rama-sethu project.Everybody should read this blog, esp., T.R.Balu and MK & Parties ..

Also nobody is funding this project.. UTI Bank & Foreign banks very afraid to Issue the loan to Shipping Corporation of India...

Good thinking...keep it up!!!