Pages

October 24, 2007

நாங்க சிங்கம்'ல

முதலில் தலைப்பை வடிவேலு ஸ்டைலில் (புருவத்தை உயர்த்திக்கொண்டு) படித்துக்கொள்ளவும்.
கடந்த மூன்று வாரமாக, இந்தியா ஆஸ்திரேலியாவிடம் படு மோசமாக விளையாடி ஒரு நாள் தொடரை இழந்தது. சைமண்ட்ஸ், பான்டிங், கில்க்ரிஸ்ட், ஹேடன் மட்டுமல்லாமல் வற்ரவன் போறவன் எல்லாம் நமது பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். அதிலும் சைமன்ட்ஸின் ஆட்டத்திற்கு எதிராக நமது பந்து வீச்சாளர்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை. போதாக்குறைக்கு கைக்கு வந்த கட்சையும் விட்டு வயித்தெறிச்சலை கிளப்பினான் சிரிசாந்த். பந்து வீச்சு தான் இப்படி என்றால் பட்டிங் கேட்கவே வேண்டாம். உத்தப்பா தவிர்த்து யாரிடமும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை துணிந்து எதிர்க்கும் துணிச்சல் எவரிடமும் இல்லை. சரி, என்னத்தைப் புலம்பி என்ன பண்ண?
இப்படி உடைந்து வெதும்பியிருந்த நேரத்தில் தான் வந்தது 20- 20 போட்டி. நமது வீரர்கள் 3 வாரங்களுக்கு முன் தான் உலகக்கோப்பையை வென்றிருந்த நேரத்தில் மீண்டும் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் நிர்பந்தம். 20- 20 உலக்கோப்பை போட்டியில் நாம் வென்றது வெறும் அதிர்ஷ்டமில்லை என்று மீண்டும் நிரூபிக்க வேண்டிய தருணம். துவண்டு போயிருந்த இந்திய அணியை ஆஸ்திரேலியர்கள் துவைத்தெடுத்து துவட்டிவிடுவார்கள் (ஆ! ரைமிங் சூப்பராக்கீதுபா) என்று எல்லா பத்திரைகளும், ஊடகங்களும் பந்தயம் கட்டினர். ஆனால், நமது வீரர்கள், கிரிக்கெட்டின் இந்த புதிய ரூபத்தில் யார் சாம்பியன் என்பதை மீண்டும் நீருபித்து விட்டனர். தோனிக்கு பதில் வடிவேலு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்திருந்தால், "ஹ 20-20'ல மட்டும் நாங்க சிங்கம்ல" என்று அவர் பாணியில் சொல்லியிருப்பார்.
எதற்க்காக கிரிக்கெட்டிற்கு இந்த புதிய பரிணாமம்? ஏன் இவ்வளவு விளம்பரம்? இவ்வளவு பணச்செலவு?
கிரிக்கெட்டை உலக்குக்கு கொடுத்த பெருமை ஆங்கிலேயர்களுக்கே சேரும். முதலில் 5 நாட்கள் (டெஸ்ட்) விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டை, ஒரு நாள் போட்டியாக மாற்றியவர்கள், ஆஸ்திரேலியர்கள். டெஸ்ட் போட்டிகள் மந்தமாக நடந்ததால், கிரிக்கெட்டை விட மற்ற விளையாட்டுகளில் மக்கள் ஆர்வம் காட்ட அரம்பித்தனர். இதற்காகத்தான் ஒரு நாள் போட்டிகள் கொண்டுவரப்பட்டன.
இந்த ஒரு நாள் போடிகளும், ஒரு மாதிரி யூகிக்கும் படியாக (predictable) ஆனபிறகு, ஒரு நாள் போட்டியும் கசக்க ஆரம்பித்தது. மக்கள் (இந்திய உபகண்ட நாடுகளைத் தவிற) பிற விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். குழந்தைகளும் கிரிக்கெட்டை விட, மற்ற விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்து வந்தனர். மேலும், ஒரு நாள் போட்டி குறைந்த பட்சம் 9 மணி நேரம் நடக்கக் கூடியது. இதைப் பார்க்க வேண்டுமானால், ஒரு நாள் முழுக்க வீணாக்க வேண்டும். இதற்கெல்லாம், வடிகாலாக வந்தது, 20 - 20 போட்டிகள். இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் மட்டும் விளையாடும் போட்டி.
இதில் விறுவிறுப்பு, உற்சாகம், வேகம் என எல்லாமே அதிகம். ஒவ்வொரு பந்திலும் ரன் எடுக்க வேண்டிய நிர்பந்தம். கடைசி பந்து வீசும் வரையில் ஆட்டம் எந்த திசையிலும் திரும்பலாம். யார் வெற்றி பெறுவர் என்ற யூகிப்புத்தன்மை (predictablility) மிகக் குறைவு. உதாரணம், ஆஸ்திராலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தியது. ஏன் உலக்கோப்பை இறுதி ஆட்டம் கூட கடைசி வரையில் யார் வெற்றி பெறுவர் என்று எண்ண முடியவில்லை. ஹர்பஜனின் ஒரு ஓவர் (மிஸ்பா உல் கக் வ்ளாசியது) ஆட்டத்தின் திசையைத் திருப்பியது.
ஒரு சினிமா பார்ப்பது போல் ஒரு கிரிக்கெட் போட்டியையும் 3 மணி நேரத்தில் பார்த்து விட்டு மற்ற வேலையை கவனிக்கலாம்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட்டை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்ல இது ஒரு நல்ல யுக்தி. உடனடி முடிவு (instant result) நாடும் வேகமான உலக கலாசாரத்திற்கு 20 - 20 ஒரு நல்ல ஊடகம். இப்போட்டியினால், கிரிக்கெட்டே அறிந்திராத சீனா, ஜப்பான், அமெரிக்கா, மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட்டை தெரிந்து கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு.
மற்ற பிற நாடுகள் கிரிக்கெட்டில் நல்ல தேர்ச்சி கொண்டு நம்மை வீழ்த்தும் வரை நாம் சொல்லிக்கொண்டிருக்கலாம், "20 - 20 ல நாங்க சிங்கம்'ல" !!!!!!!!

2 comments:

Unknown said...

Vijay

Have gone thru your New blog about 20-20.Really a nice one.

Written a Blog at the correct time.also the way in which u narrated the article is simply superb. You have mixed a humorous and message in the perfect combination

Keep it up

Jayaharan

Anonymous said...

Super!
Hungarians are picking cricket very fast, and they would very soon be visiting India. watch out!

Raman. Budapest.