Pages

March 09, 2006

அனுபவம் புதுமை

எத்தனை பேர் இந்த பாடலைக் கேட்டிருப்பீர்கள்? காதலிக்க நேரமில்லை படத்தைப் பார்த்த யாரும் இந்தப் பாடலை ரசிக்காமல் இருந்ததில்லை. சரி சரி, ரொம்பவும் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விட வேண்டாம். இந்த வாரம் ஒரு புதுமையான அனுபவம் கிட்டியது. அது தான் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை நேர்காணும் வைபவம். கொஞ்சம் எல்லோருக்கும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் campus interview.
எங்கள் கம்பெனி தேர்ந்தெடுத்தது பெங்களூரிலுள்ள கல்லூரியை. நான், எனது மேலாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறையைச் சார்ந்த அதிகாரி (Human Resource Manager) என்று மூன்று பேர் போயிருந்தோம்.

நிறைய மாணவவர்களைக் காண நேரிட்டது. அதுவும் பெங்களூர் கல்லூரி, கேட்கவா வேணும். ச, காலேஜுன்னா!!!, இப்படி இருக்கணும். நாமளும் படிச்சோமே என்ற ஆதங்கமும் மதில் எழுந்தது. (சில பேருக்குத்தான் இந்த ஆதங்கத்தின் உண்மையான அர்த்தம் புரியும்!!)

எங்களது முந்நேர்காணல் உறையைக் (Preplacement Talk) கேட்க ஒரு பெருங்கூட்டமே கூடிற்று. நானும் எனது கம்பெனி பற்றி ஒரு சில வார்த்தைகள் அவிழ்த்து விட்டேன். (மைக்கை கையில புடிச்சா அரசியல்வாதி மாதிரி பேசிட்டே இருப்பியேடா!!!).

ஒவ்வொரு மாணவனின் கண்களிலும் ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு, ஏக்கம், ஒளி என பல வகையான அர்த்தங்கள். அவர்களது கண்களே ஆயிரம் கதைகள் சொல்லின. எவ்வளவு பேர் வீம்புக்கு எங்களது நேர்காணலில் பங்கு கொண்டார்களோ, எவ்வளவு பேர் இந்த கம்பெனியாவது நமக்கு ஒரு வேலை போட்டுத்தருவார்களோ என்று எண்ணியவை எத்தனை மனங்கள், ஈசன் தான் அறிவார். ஒரு மாதிரியாக எழுத்து தேர்வு ஆரம்பமானது. அந்த 45 நிமிட இடைவேளையில் என மனக்கடலில் உதித்து மறைந்தன ஆயிராமாயிரம் எண்ண அலைகள்.

இதே போன்று தானே ஒரு காலத்தில் நாநும் எத்தனை கம்பெனி படியேறி விண்ணப்பம் செய்திருப்பேன். எவ்வளவு முறை எழுத்துத் தேர்விலேயே நிராகரிக்கப் பட்டு அவமானம் அடைந்திருப்பேன். ஒவ்வொரு முறை நான் ஏதாவது தேர்வு எழுதும் போது என் அம்மா எத்தனை சாமிக்கு எவ்வளவு வேண்டியிருப்பாள். எனது தேர்வு முடிவை எதிர்பார்த்து ஆவலாய் இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை தோல்வி அடைந்த போதும் எவ்வளவு மனக்கஷ்டத்தையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஆறுதல் சொல்லியிருப்பாள். எனது மகனும் ஒரு நாள் கை நிறைய என்று சம்பாத்திக்க மாட்டானா என்று எவ்வளவு ஏங்கியிருப்பாள். "அம்மா!!! நான் செலக்ட் ஆகிட்டேன்" என்று சொன்னபோது எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். அந்த மாகிழ்ச்சியை என் தாயோடு பகிர்ந்துகொள்ள எனக்கு 15 நாள் ஆயிற்று.

இன்று இந்த மாணவர்களில் எத்தனை பேர் என்னைப் போன்று இருக்கிறார்களோ? எவ்வளவு அம்மாக்கள் தனது மகன்(ள்) இந்த கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று எத்தனை சாமிகளுக்கு நேர்ந்து கொண்டார்களோ? எவ்வளவு பேர் நிராசை அடைந்தார்களோ?
நானறியாத அம்மாக்களே, உங்கள் மகனுக்கு என்னால் இந்த கம்பெனியில் வேலை கொடுக்க முடியவில்லை. ஆனால் உங்கள் மகனுக்கு வேறொரு நல்ல கம்பெனியில் கண்டிப்பாக வேலை கிடைக்கும், என்னை மன்னித்துவிடுங்கள், என்று மானசீகமாக மன்னிப்பு கோரிவிட்டு வெறும் மூன்று பேரை மற்றும் தேர்வு செய்தேன்.

5 comments:

Anonymous said...

romba cinema paarpirgalo? dialogue ellam too much pullea!

Anonymous said...

anonymous(1st comment) yaar yenru therigiratha?

Anonymous said...

vijay,
"ச, காலேஜுன்னா!!!, இப்படி இருக்கணும். நாமளும் படிச்சோமே என்ற ஆதங்கமும் மதில் எழுந்தது"

i gotcha man ;)

Its always good to remember your past.

-Subbu

Anonymous said...

"ச, காலேஜுன்னா!!!, இப்படி இருக்கணும். நாமளும் படிச்சோமே என்ற ஆதங்கமும் மதில் எழுந்தது"

ஹலோ உங்களுக்கே இப்படினா. மெக்கானிக்கல் பிரான்ச்ல இருந்த எங்களுக்கு எப்படி இருக்கும்.

:)

P.G.S.Manian

Anonymous said...

Samma feelings ma..touch panitta..